Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கந்தர்வகோட்டை அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
கந்தர்வகோட்டை அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
மூலவர் : கோதண்ட ராமர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கந்தர்வகோட்டை
மாவட்டம் : புதுக்கோட்டை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
இக்கோயிலில் ராமநவமி கோலாகலமாக நடைபெறும்.
தல சிறப்பு:
மாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச்சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.
பொது தகவல்:
இங்கே கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறவும், திருமண பாக்கியம் கைகூடவும் இங்கு வந்து சுவாமியை பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கேயுள்ள ஸ்ரீஅனுமன், மிகுந்த வரப்பிரசாதி. தொடர்ந்து 11 சனிக்கிழமைகள், இவருக்கு நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து, தயிர்சாதம் அல்லது வடைமாலை சார்த்தி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்று, வளமுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.
தலபெருமை:
புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டமான் மகாராஜா, இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார் என்கின்றன கோயில் கல்வெட்டுகள். அழகிய கோயில். அற்புதமான கோலத்தில் சீதாதேவி லட்சுமணர் சமேதராக கோதண்டராமர். இவரைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.
தல வரலாறு:
சைவம் தழைத்தோங்கிய காலம் அது! பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு, செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேர நாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், மன்னருக்குப் பாராட்டு என்று வருகிறபோதெல்லாம், கூத்துக் கட்டி, ஆடிப் பாடுதல் அரங்கேறின. சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அப்படி நடக்கிறபோது, புராணச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே வந்து, இறுதியில் நம் தேசத்து மன்னனும் அந்த குணங்களைக் கொண்டவன்தான் என்று நீதி சொல்கிற, பாராட்டு மழை பொழிகிற விழாக்களும் கேளிக்கைகளும் ஆங்காங்கே நடந்தன. அவற்றில், எந்த மன்னன் ஆட்சி செய்தாலும் நீண்ட நெடிய விளக்கங்களுடன் சொல்லப்படுவது, ராமாயணக் கதையாகத்தான் இருக்கும். ஸ்ரீராமரின் அருமை பெருமைகளையும் சீதாதேவியின் உறுதியான நம்பிக்கையையும் விவரிக்கும்போதே, மொத்த மக்களும் கண்ணீருடன் கேட்பார்கள். சிவனாரின்மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு ஆழகிய கோயிலைக் கட்டினான். கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகளை அமைத்தான். அந்தணர்களுக்கு நிலங்களையும் வீடுகளையும் ஆடு-மாடுகளையும் தானமாகத் தந்தான். கோயிலுக்கு ஏராளமான நிலங்களை எழுதி வைத்து, நித்தியப்படி பூஜைகள் குறையற நடக்க ஏற்பாடுகள் செய்தான். கோதண்டராமர் கோயிலில் வழிபாடுகள் நடக்க நடக்க.. சோழ தேசம் இன்னும் இன்னும் செழித்ததாகச் சொல்வர். கண்டராதித்த மன்னன் கட்டிய கோயிலை இன்றைக்கும் தரிசிக்கலாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச்சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கந்தர்வகோட்டை அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கந்தர்வகோட்டை அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
தலத்தின் சிறப்பை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Similar topics
» அயோத்தியாப்பட்டணம் அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், சேலம்
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
» மதுராந்தகம் அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
» அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
» அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
» மதுராந்தகம் அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
» அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|