Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
ஆரம்ப நிலை நீரிழிவு
Page 1 of 1 • Share
ஆரம்ப நிலை நீரிழிவு
[size=30]ஆரம்ப நிலை நீரிழிவு ஓர் ஆரஞ்சு விளக்கு முன்னெச்சரிக்கை![/size]
[size=30][You must be registered and logged in to see this image.][/size]
[size=30]நமது நாடு, கொஞ்சம் கொஞ்சமாக நீரிழிவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு நீரிழிவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 6.5 கோடி. நீரிழிவுக்கு முந்தைய நிலையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 7.72 கோடி என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ என்றால் என்ன?
‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...’ என்பதுபோல, யானை போன்ற மிகப்பெரிய நோயாகக் கருதப்படும் நீரிழிவு வரும் முன்னே, ‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ மணியோசைபோல முந்திக்கொண்டு,முன்னெச்சரிக்கை மணியை உடலில் அடிக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் prediabetes என்று அழைக்கிறார்கள். உடல் அடிக்கும் இந்த மணியோசை சத்தம் சிலருக்கு மட்டும் கேட்கிறது. சிலருக்குக் கேட்பதில்லை. தங்களின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறுபவர்களுக்கு, இந்த ஓசை prediabetes என்ற உச்சரிப்பாகக் கேட்கத் தொடங்கிவிடுகிறது.‘அட, வரும்போது பார்த்துக்கொள்ளலாம்... எனக்குத்தான் ஒரு தொந்தரவும் இல்லையே’ என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு ஓசை கேட்காது.
‘நீரிழிவு’ என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஒருவருக்கு நீரிழிவு உள்ளது என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனை மூலம் எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 126 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ... உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 200 மில்லி கிராம் / டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ... ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 6.5 சதவிகிதம் அளவு அல்லது அதற்கு மேலோ இருந்தாலோ... நீரிழிவு நோய் உள்ளது என்று கூறிவிடலாம்.
[/size]
[size=30][You must be registered and logged in to see this image.][/size]
[size=30]நமது நாடு, கொஞ்சம் கொஞ்சமாக நீரிழிவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு நீரிழிவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 6.5 கோடி. நீரிழிவுக்கு முந்தைய நிலையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 7.72 கோடி என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ என்றால் என்ன?
‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...’ என்பதுபோல, யானை போன்ற மிகப்பெரிய நோயாகக் கருதப்படும் நீரிழிவு வரும் முன்னே, ‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ மணியோசைபோல முந்திக்கொண்டு,முன்னெச்சரிக்கை மணியை உடலில் அடிக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் prediabetes என்று அழைக்கிறார்கள். உடல் அடிக்கும் இந்த மணியோசை சத்தம் சிலருக்கு மட்டும் கேட்கிறது. சிலருக்குக் கேட்பதில்லை. தங்களின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறுபவர்களுக்கு, இந்த ஓசை prediabetes என்ற உச்சரிப்பாகக் கேட்கத் தொடங்கிவிடுகிறது.‘அட, வரும்போது பார்த்துக்கொள்ளலாம்... எனக்குத்தான் ஒரு தொந்தரவும் இல்லையே’ என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு ஓசை கேட்காது.
‘நீரிழிவு’ என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஒருவருக்கு நீரிழிவு உள்ளது என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனை மூலம் எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 126 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ... உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 200 மில்லி கிராம் / டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ... ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 6.5 சதவிகிதம் அளவு அல்லது அதற்கு மேலோ இருந்தாலோ... நீரிழிவு நோய் உள்ளது என்று கூறிவிடலாம்.
[/size]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆரம்ப நிலை நீரிழிவு
நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கான ரத்த குளுக்கோஸ் அளவுகள் ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்வதற்கு ரத்த குளுக்கோஸ் எந்த அளவில் இருக்க வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேரஇடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ...
உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ...
ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 5.6 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
நீரிழிவுக்கு முந்தைய நிலையில் ரத்த குளுக்கோஸ் அளவுகள்
இப்போது, நாம் முன்பு பார்த்த நீரிழிவுக்கு முந்தைய நிலைக்கு வருவோம். இது இரண்டும்கெட்டான் நிலை. இவர்களுக்கு நீரிழிவு இல்லை என்றும் சொல்ல முடியாது... இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆரம்ப நிலையைக் கவனிக்காமல், கண்டு பிடிக்காமல் போனால், விரைவில் இவர்கள் அனைவரும் நீரிழிவாளர்களாகி விடுவார்கள் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 125 மில்லி கிராம் / டெசி லிட்டர் வரை இருந்தாலோ...
உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 199 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவு வரை இருந்தாலோ...
ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 5.7 சதவீதம் முதல் 6.4 சதவீதம் என்ற அளவு வரை இருந்தாலோ... நீரிழிவு முந்தைய நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம். இந்த நிலை உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. அதனால், இவர்கள் தங்களுக்கு நீரிழிவு இல்லையென நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இந்த நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும், குறிப்பாகச் சில பிரிவினருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது மிகவும் அவசியம்.
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேரஇடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ...
உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ...
ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 5.6 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
நீரிழிவுக்கு முந்தைய நிலையில் ரத்த குளுக்கோஸ் அளவுகள்
இப்போது, நாம் முன்பு பார்த்த நீரிழிவுக்கு முந்தைய நிலைக்கு வருவோம். இது இரண்டும்கெட்டான் நிலை. இவர்களுக்கு நீரிழிவு இல்லை என்றும் சொல்ல முடியாது... இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆரம்ப நிலையைக் கவனிக்காமல், கண்டு பிடிக்காமல் போனால், விரைவில் இவர்கள் அனைவரும் நீரிழிவாளர்களாகி விடுவார்கள் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 125 மில்லி கிராம் / டெசி லிட்டர் வரை இருந்தாலோ...
உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 199 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவு வரை இருந்தாலோ...
ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 5.7 சதவீதம் முதல் 6.4 சதவீதம் என்ற அளவு வரை இருந்தாலோ... நீரிழிவு முந்தைய நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம். இந்த நிலை உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. அதனால், இவர்கள் தங்களுக்கு நீரிழிவு இல்லையென நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இந்த நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும், குறிப்பாகச் சில பிரிவினருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது மிகவும் அவசியம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆரம்ப நிலை நீரிழிவு
யார் இந்த குறிப்பிட்ட பிரிவினர்?
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
45 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், பருமன் உள்ளவர்கள் (BMI: 25 AA/e2 என்ற அளவுக்குள் இல்லாதவர்கள்)
உடற்பயிற்சி இல்லாமல், சோம்பலாக இருப்பவர்கள்
தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தயாருக்காவது நீரிழிவு நோய் இருப்பின்...
மிகுந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்
ரத்த கொலஸ்ட்ரால் மிகுந்தவர்கள்
பல்வேறு நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள் உள்ளவர்கள்
இதய நோய் / மூளைத் தாக்கம் / ரத்த நாள நோய்கள் உள்ளவர்கள்
பெண்களைப் பொறுத்த வரை, பருமன் உள்ளவர்கள்
கர்ப்பக் காலத்தில் நீரிழிவுக்குச் சிகிச்சை பெற்றவர்கள்
அதிக எடை (4 கிலோவுக்கு மேல்) உள்ள குழந்தை பெற்றவர்கள்
கருவணுவகத்தில் நீர்க்கட்டி நோய் உள்ள பெண்கள் (PCOS Polycystic Ovary Syndrome)
இவர்கள், நீரிழிவுக்கு முந்தைய நிலை பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இவர்கள் அனைவரும், இந்த நிலை இல்லை என்ற போதிலும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நீரிழிவுக்கு முந்தைய நிலை கண்டு பிடிக்கப்பட்டவர்களின் கவனத்துக்கு...
சீனி (சர்க்கரை), வெல்லம், கருப்பட்டி, பனைவெல்லம் போன்ற நேரடி சர்க்கரைப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு வகைகள், க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். நெய், வெண்ணெய், டால்டா, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு ஆகிய கொழுப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த தானியங்கள், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மீன், முட்டை வெள்ளைக் கரு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எடை, வேலை செய்யும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, தேவைப்படும் கலோரியை கணக்கிட்டு (மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர்), அந்த அளவு சக்தி தரும் உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். தினமும், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். போதிய நேரம் உறங்குவதுடன், கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.
இப்படிச் சில ஆரோக்கிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை முறையாக மேற்கொண்டாலே, உடலுக்குள் நீரிழிவு முகாமிடாமல் முந்தைய நிலையிலேயே கண்டறிந்து முறியடிக்கலாம்!
(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)
[You must be registered and logged in to see this link.]
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
45 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், பருமன் உள்ளவர்கள் (BMI: 25 AA/e2 என்ற அளவுக்குள் இல்லாதவர்கள்)
உடற்பயிற்சி இல்லாமல், சோம்பலாக இருப்பவர்கள்
தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தயாருக்காவது நீரிழிவு நோய் இருப்பின்...
மிகுந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்
ரத்த கொலஸ்ட்ரால் மிகுந்தவர்கள்
பல்வேறு நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள் உள்ளவர்கள்
இதய நோய் / மூளைத் தாக்கம் / ரத்த நாள நோய்கள் உள்ளவர்கள்
பெண்களைப் பொறுத்த வரை, பருமன் உள்ளவர்கள்
கர்ப்பக் காலத்தில் நீரிழிவுக்குச் சிகிச்சை பெற்றவர்கள்
அதிக எடை (4 கிலோவுக்கு மேல்) உள்ள குழந்தை பெற்றவர்கள்
கருவணுவகத்தில் நீர்க்கட்டி நோய் உள்ள பெண்கள் (PCOS Polycystic Ovary Syndrome)
இவர்கள், நீரிழிவுக்கு முந்தைய நிலை பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இவர்கள் அனைவரும், இந்த நிலை இல்லை என்ற போதிலும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நீரிழிவுக்கு முந்தைய நிலை கண்டு பிடிக்கப்பட்டவர்களின் கவனத்துக்கு...
சீனி (சர்க்கரை), வெல்லம், கருப்பட்டி, பனைவெல்லம் போன்ற நேரடி சர்க்கரைப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு வகைகள், க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். நெய், வெண்ணெய், டால்டா, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு ஆகிய கொழுப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த தானியங்கள், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மீன், முட்டை வெள்ளைக் கரு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எடை, வேலை செய்யும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, தேவைப்படும் கலோரியை கணக்கிட்டு (மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர்), அந்த அளவு சக்தி தரும் உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். தினமும், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். போதிய நேரம் உறங்குவதுடன், கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.
இப்படிச் சில ஆரோக்கிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை முறையாக மேற்கொண்டாலே, உடலுக்குள் நீரிழிவு முகாமிடாமல் முந்தைய நிலையிலேயே கண்டறிந்து முறியடிக்கலாம்!
(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» எயிட்ஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள்..
» ஆரம்ப உடல்நலமே ஆயுள் வரை ஆனந்தம்!
» சிறுநீரக வியாதிகளின் ஆரம்ப அறிகுறிகள்!
» என் நிலை
» தமிழ்மொழியின் நிலை..
» ஆரம்ப உடல்நலமே ஆயுள் வரை ஆனந்தம்!
» சிறுநீரக வியாதிகளின் ஆரம்ப அறிகுறிகள்!
» என் நிலை
» தமிழ்மொழியின் நிலை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|