Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோவில்குளம் அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
கோவில்குளம் அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், திருநெல்வேலி
மூலவர் : தென்னழகர் (விண்ணகர்பெருமான்)
உற்சவர் : சவுந்தர்ராஜப்பெருமாள்
அம்மன்/தாயார் : சவுந்திரவல்லி, சுந்தரவல்லி
தல விருட்சம் : -
தீர்த்தம் : மார்க்கண்டேயர் தீர்த்தம்
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பொதியில் விண்ணகரம்
ஊர் : கோவில்குளம்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடிப்பூரம், புரட்டாசி கடைசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.
தல சிறப்பு:
மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள், "தென்னழகர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, "ஸ்ரீபதிவிண்ணகர் பெருமான்' என்றும் பெயருண்டு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம் போஸ்ட், அம்பாசமுத்திரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91- 4634 - 251 705.
பொது தகவல்:
முற்காலத்தில் கோயிலைச் சுற்றிலும் குளம் இருந்ததால் இப்பகுதி, "கோவில்குளம்' என்றழைக்கப்படுகிறது. முன்மண்டபத்தில் நாகர், விஷ்வக்ஷேனர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், உடையவர் ஆகியோர் இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கு பூஜைகளும், திருவிழாக்களும் சிறப்பாக நடந்து வந்தது. தற்போது கோயில் சரியான பராமரிப்பில் இல்லாததால், விழாக்கள் எதுவும் நடைபெறுவதில்லை.
பிரார்த்தனை
உள்ளம், உருவம் இரண்டும் அழகாக சவுந்தர்ராஜ பெருமாளிடம் வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம், காலப்போக்கில் சிதிலமடையவே இச்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இவருக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் காட்சி தரும் பெருமாளுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி, வணங்கியபடி இருக்கிறார். கோயில் சுவற்றில் வடகிழக்கு மூலையில் மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி சுவாதியன்று ஒருநாள் மட்டும் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன சட்டை அணிவிக்கிறார்கள். ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் மட்டும் சுவாமிக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
தல வரலாறு:
பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள், "தென்னழகர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, "ஸ்ரீபதிவிண்ணகர் பெருமான்' என்றும் பெயருண்டு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோவில்குளம் அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், திருநெல்வேலி
ஆலயத்தின் சிறப்பை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Re: கோவில்குளம் அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், திருநெல்வேலி
நல்லதொரு ஆலயப் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோவில்குளம் அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், திருநெல்வேலி
ஆலயத்தின் சிறப்பை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், திருநெல்வேலி
» ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி
» சிவகிரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
» சங்காணி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
» கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், திருநெல்வேலி
» ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி
» சிவகிரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
» சங்காணி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|