Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெரிக்கோஸ் வெயின்ஸ்
Page 1 of 1 • Share
வெரிக்கோஸ் வெயின்ஸ்
வெரிக்கோஸ் வெயின்ஸ் இது ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்னை!
பார்க் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது பக்கத்தில் வந்து அமர்ந்தார் அந்த நடுத்தர வயது மனிதர். லுங்கி கட்டிக்கொண்டு காலில் சாக்ஸ் அணிந்திருந்தது வினோதமாக இருந்தது. ‘‘வெரிக்கோஸ்னு சொன்னாங்க தம்பி...மளிகைக்கடை வேலை நமக்கு... நாள் முழுக்க நின்னுட்டே இருக்கம்ல...’’ என்று சாக்ஸை கழட்டினார். இரண்டு கால்களிலும் தழும்புகளும் காயங்களுமாக ரணகளம்.
வெரிக்கோஸ் வெயின்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அது இந்த அளவு மோசமானதாக இருக்குமா?
ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் பாலகுமாரிடம் கேட்டோம். ‘‘இதை கால் நரம்பு சுருண்டு கொள்கிற பிரச்னை என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், ரத்த நாளங்களில் ஏற்படுகிற பிரச்னைதான் ‘வெரிக்கோஸ் வெயின்ஸ்’ (Varicose veins). அது நரம்பு அல்ல’’ என்று அறிமுகம் கொடுப்பவர், வெரிக்கோஸ் பற்றி இன்னும் நுட்பமாக விளக்க ஆரம்பிக்கிறார்.
‘‘இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு சுத்த ரத்தத்தை தமனிகள் (Arteries) எடுத்துச் செல்கின்றன. பாதத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டிய ரத்தத்தை சிரைகள் (Veins) எடுத்துச் செல்கின்றன. இந்த சிரைகள் சுருண்டு கொள்வதையே வெரிக்கோஸ் என்கிறோம்...’’
நாளங்கள் எதனால் இப்படி சுருண்டு கொள்கின்றன?
‘‘பாதத்தில் இருந்து மேல்நோக்கி ரத்தம் செல்வதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதிலும், பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக ரத்தம் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் உதவிபுரிகின்றன. இதற்காக அதிக ஆற்றல் செலவாவதால் சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன. வால்வுகள் செயலிழப்பதால் ரத்த ஓட்டம் நின்று, நாளங்கள் சுருண்டு கொள்கின்றன...’’
வெரிக்கோஸில் வகைகள் எதுவும் இருக்கிறதா?
‘‘வெளியில் தெரியும் ரத்தநாளங்கள், உள்ளுக்குள் இருக்கும் ரத்தநாளங்கள், இந்த இரு நாளங்களையும் இணைக்கும் நாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் என 3 வகைகள் இருக்கின்றன. அரிதாக கைகளிலும் வெரிக்கோஸ் வரலாம். ஆனால், கால் களோடு ஒப்பிடும்போது கைகளில் அழுத் தம் குறைவு என்பதால் கைகளில் வெரிகோஸ் வரும் வாய்ப்பும் குறைவுதான்.’’
வெரிக்கோஸ் குறைபாடு எதனால் வருகிறது?
‘‘வெரிக்கோஸ் இதனால்தான் வருகிறது, இவர்களுக்குத்தான் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. வெரிக்கோஸ் யார் யாருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என்ற சாத்தியங்களை வேண்டுமானால் சொல்லலாம். அதிக நேரம் நிற்கும் பணி, முதுமை, புகைப்பழக்கம், பருமன், பரம்பரைக் குறைபாடு, இடுப்பை இறுக்கும் உடைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், விபத்து, உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பது போன்ற காரணிகளால் ரத்தநாளங்களின் வால்வுகள் செயலிழந்து போகலாம். ஹார்மோன் கோளாறுகள், மாதவிலக்குத் தொடர்பான பிரச்னைகள், கர்ப்பம் போன்ற காரணங்களால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் வெரிக்கோஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்...’’
வராமல் தடுப்பது எப்படி?
‘‘வெரிக்கோஸை எப்படித் தடுக்கலாம் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. மேற்சொன்ன காரணங்களைத் தவிர்ப்பதன் மூலம் வெரிக்கோஸ் ஏற்படாமல் ஓரளவு தடுக்க முடியும்...’’
அறிகுறிகள் என்னென்ன?
‘‘வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு நாளங்கள் சுருண்டு கொள்வது, தசைப்பிடிப்பு, வீக்கம், மாலை நேரங்களில் மட்டும் ஏற்படும் வலி, தோலின் நிறம் மாறுவது, அரிப்பு, 4 வாரங்களுக்கு மேல் ஆறாத காயம் போன்ற அறிகுறிகள் கால்களில் தெரிந்தால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது...’’
வெரிக்கோஸால் ஆபத்து ஒன்றும் இல்லையே?
‘‘வெளிநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸால் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால், உள் ரத்தநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் மிகவும் ஆபத்தானது. ரத்தநாளங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தம் திடீரென்று திட்டுத்திட்டாக உறைந்து நுரை யீரலுக்குச் சென்று மூச்சுத்திணறலை உண்டாக்கும். உடனடியாக கவனிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு...’’
உள் ரத்தநாளங்களில் வெரிக்கோஸ் ஏற்படுவது ஏன்?
‘‘விபத்து, மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருப்பது, புற்றுநோய், கருத்தடை மாத்திரை உபயோகிப்பது போன்ற காரணங்களால் உள்
ரத்தநாள வெரிக்கோஸ் வரும்...’’
மருத்துவர்கள் வெரிக்கோஸை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?
‘‘முதல் வகை வெரிக்கோஸில் கால்பகுதியில் ரத்தநாளங்கள் சுருண்டிருப்பது வெளிப்படையாகவே தெரியும். உள் ரத்தநாளங்களில் ஏற்பட்டிருந்தால் டாப்ளர் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும். எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறது, வால்வுகள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை டாப்ளர் ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்...’’
இதற்கு என்ன சிகிச்சை?
‘‘ஆரம்பகட்டமாக இருந்தால் மருந்து, மாத்திரை, ஊசி, சாக்ஸ் போட்டுக் கொள்வது என எளிதான சிகிச்சைகள் அளிக்கப்படும். நிரந்தரத் தீர்வு வேண்டு மென்றால் அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. இதில் வழக்கமான அறுவை சிகிச்சை, லேசர் அறுவை சிகிச்சை, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி முறை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. இந்த சிகிச்சைகளில் ரத்த நாளத்தின் ரத்தம் வரும் வழியை அடைத்துவிடுவது, மாற்று ரத்தநாளம் வழியாக ரத்தத்தை செல்ல வைப்பது, பிரச்னைக்குரிய ரத்தநாளத்தை அகற்றிவிடுவது என்று பல வழிகள் இருக்கின்றன...’’
ரத்தநாளத்தை அகற்றுவதால் ஆபத்து இல்லையா?
‘‘ஏற்கெனவே செயலிழந்து போன ரத்தநாளத்தைத்தான் அகற்றுகிறோம். அதனால், எந்த ஆபத்தும் இல்லை!’’
தினகரன்
பார்க் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது பக்கத்தில் வந்து அமர்ந்தார் அந்த நடுத்தர வயது மனிதர். லுங்கி கட்டிக்கொண்டு காலில் சாக்ஸ் அணிந்திருந்தது வினோதமாக இருந்தது. ‘‘வெரிக்கோஸ்னு சொன்னாங்க தம்பி...மளிகைக்கடை வேலை நமக்கு... நாள் முழுக்க நின்னுட்டே இருக்கம்ல...’’ என்று சாக்ஸை கழட்டினார். இரண்டு கால்களிலும் தழும்புகளும் காயங்களுமாக ரணகளம்.
வெரிக்கோஸ் வெயின்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அது இந்த அளவு மோசமானதாக இருக்குமா?
ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் பாலகுமாரிடம் கேட்டோம். ‘‘இதை கால் நரம்பு சுருண்டு கொள்கிற பிரச்னை என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், ரத்த நாளங்களில் ஏற்படுகிற பிரச்னைதான் ‘வெரிக்கோஸ் வெயின்ஸ்’ (Varicose veins). அது நரம்பு அல்ல’’ என்று அறிமுகம் கொடுப்பவர், வெரிக்கோஸ் பற்றி இன்னும் நுட்பமாக விளக்க ஆரம்பிக்கிறார்.
‘‘இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு சுத்த ரத்தத்தை தமனிகள் (Arteries) எடுத்துச் செல்கின்றன. பாதத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டிய ரத்தத்தை சிரைகள் (Veins) எடுத்துச் செல்கின்றன. இந்த சிரைகள் சுருண்டு கொள்வதையே வெரிக்கோஸ் என்கிறோம்...’’
நாளங்கள் எதனால் இப்படி சுருண்டு கொள்கின்றன?
‘‘பாதத்தில் இருந்து மேல்நோக்கி ரத்தம் செல்வதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதிலும், பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக ரத்தம் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் உதவிபுரிகின்றன. இதற்காக அதிக ஆற்றல் செலவாவதால் சிரைகளில் இருக்கும் சின்னச்சின்ன வால்வுகள் நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன. வால்வுகள் செயலிழப்பதால் ரத்த ஓட்டம் நின்று, நாளங்கள் சுருண்டு கொள்கின்றன...’’
வெரிக்கோஸில் வகைகள் எதுவும் இருக்கிறதா?
‘‘வெளியில் தெரியும் ரத்தநாளங்கள், உள்ளுக்குள் இருக்கும் ரத்தநாளங்கள், இந்த இரு நாளங்களையும் இணைக்கும் நாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் என 3 வகைகள் இருக்கின்றன. அரிதாக கைகளிலும் வெரிக்கோஸ் வரலாம். ஆனால், கால் களோடு ஒப்பிடும்போது கைகளில் அழுத் தம் குறைவு என்பதால் கைகளில் வெரிகோஸ் வரும் வாய்ப்பும் குறைவுதான்.’’
வெரிக்கோஸ் குறைபாடு எதனால் வருகிறது?
‘‘வெரிக்கோஸ் இதனால்தான் வருகிறது, இவர்களுக்குத்தான் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. வெரிக்கோஸ் யார் யாருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என்ற சாத்தியங்களை வேண்டுமானால் சொல்லலாம். அதிக நேரம் நிற்கும் பணி, முதுமை, புகைப்பழக்கம், பருமன், பரம்பரைக் குறைபாடு, இடுப்பை இறுக்கும் உடைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், விபத்து, உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பது போன்ற காரணிகளால் ரத்தநாளங்களின் வால்வுகள் செயலிழந்து போகலாம். ஹார்மோன் கோளாறுகள், மாதவிலக்குத் தொடர்பான பிரச்னைகள், கர்ப்பம் போன்ற காரணங்களால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் வெரிக்கோஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்...’’
வராமல் தடுப்பது எப்படி?
‘‘வெரிக்கோஸை எப்படித் தடுக்கலாம் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. மேற்சொன்ன காரணங்களைத் தவிர்ப்பதன் மூலம் வெரிக்கோஸ் ஏற்படாமல் ஓரளவு தடுக்க முடியும்...’’
அறிகுறிகள் என்னென்ன?
‘‘வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு நாளங்கள் சுருண்டு கொள்வது, தசைப்பிடிப்பு, வீக்கம், மாலை நேரங்களில் மட்டும் ஏற்படும் வலி, தோலின் நிறம் மாறுவது, அரிப்பு, 4 வாரங்களுக்கு மேல் ஆறாத காயம் போன்ற அறிகுறிகள் கால்களில் தெரிந்தால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது...’’
வெரிக்கோஸால் ஆபத்து ஒன்றும் இல்லையே?
‘‘வெளிநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸால் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால், உள் ரத்தநாளங்களில் ஏற்படும் வெரிக்கோஸ் மிகவும் ஆபத்தானது. ரத்தநாளங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தம் திடீரென்று திட்டுத்திட்டாக உறைந்து நுரை யீரலுக்குச் சென்று மூச்சுத்திணறலை உண்டாக்கும். உடனடியாக கவனிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு...’’
உள் ரத்தநாளங்களில் வெரிக்கோஸ் ஏற்படுவது ஏன்?
‘‘விபத்து, மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருப்பது, புற்றுநோய், கருத்தடை மாத்திரை உபயோகிப்பது போன்ற காரணங்களால் உள்
ரத்தநாள வெரிக்கோஸ் வரும்...’’
மருத்துவர்கள் வெரிக்கோஸை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?
‘‘முதல் வகை வெரிக்கோஸில் கால்பகுதியில் ரத்தநாளங்கள் சுருண்டிருப்பது வெளிப்படையாகவே தெரியும். உள் ரத்தநாளங்களில் ஏற்பட்டிருந்தால் டாப்ளர் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் உறுதிப்படுத்த முடியும். எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறது, வால்வுகள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை டாப்ளர் ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்...’’
இதற்கு என்ன சிகிச்சை?
‘‘ஆரம்பகட்டமாக இருந்தால் மருந்து, மாத்திரை, ஊசி, சாக்ஸ் போட்டுக் கொள்வது என எளிதான சிகிச்சைகள் அளிக்கப்படும். நிரந்தரத் தீர்வு வேண்டு மென்றால் அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. இதில் வழக்கமான அறுவை சிகிச்சை, லேசர் அறுவை சிகிச்சை, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி முறை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. இந்த சிகிச்சைகளில் ரத்த நாளத்தின் ரத்தம் வரும் வழியை அடைத்துவிடுவது, மாற்று ரத்தநாளம் வழியாக ரத்தத்தை செல்ல வைப்பது, பிரச்னைக்குரிய ரத்தநாளத்தை அகற்றிவிடுவது என்று பல வழிகள் இருக்கின்றன...’’
ரத்தநாளத்தை அகற்றுவதால் ஆபத்து இல்லையா?
‘‘ஏற்கெனவே செயலிழந்து போன ரத்தநாளத்தைத்தான் அகற்றுகிறோம். அதனால், எந்த ஆபத்தும் இல்லை!’’
தினகரன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|