Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது?
Page 1 of 1 • Share
உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது?
மனிதமனம். அதை சரியாக ஒருவர் குரங்கு என்றார்.
குரங்குஒருநிலையில்இல்லாமல் கிளைக்கு கிளைதாவுகிறதைப்போல் எதிலும் ஒரு கண நேர விருப்பம், ஈடுபாடு, உடனே அதில்அலுப்பு, சலிப்பு இப்படி மாறி மாறி செயல்படும் மனது குரங்கைக்காட்டிலும் மோசம்.
இதைஅனுபவித்துஇதில்இருந்துமீளஒரு உன்னத ஏற்பாடு, சலிப்பு தட்டாதவகையில் எதிலும் மாறுதல், மாறுபாடு எல்லாம் உண்டாக்கி இந்து மதத்தில்பெரியோர்கள் அளித்திருக்கிறார்கள்.
மாறுபாட்டில் ருசியே மனித இயற்கை - சலிப்பையே விருப்பாக மாற்ற உதவும் வழி தான் பகவானை பல ரூபங்களில் பல முறைகளில், பல பண்டிகைகள், பட்சணங்களோடு வழிபடுவது என்பதை தெளிவாக மஹா பெரியவா சொன்னதை சுருக்கி விளங்கும்படியாக சொல்கிறேன்.
சாதாரண மநுஷயர்கள்மட்டுமல்ல பக்குவஸ்திதியில் ரொம்ப தூரம்முன்னேறியவர்களாக இருந்தால்கூட,மநுஷ ஸ்வபாவம்எப்படியிருக்கிறதென்றால் ஒன்றலேயேஎக்காலமும் முழு மனஸையும்கொடுப்பதென்றால் முடிவதில்லை. எத்தனை நன்றாயிருந்தாலும் அது ஒன்றிடமே முழு ஈடுபாட்டை ஸதாகாலமும் வைக்க முடிவதில்லை.
இன்றைக்குச் சமையல்-- ஸாம்பார், ரஸம்,கறி-நன்றாகத்தானிருக்கிறது.அத்ருப்திக்குக் கொஞ்சங்கூட இடமில்லை.ஆனால், நித்யம் (தினந்தோறும்) இதேசமையல் என்றால் பிடிக்கிறதா?
கறி காய்களை, குழம்புத் தானை மாற்றத்தோன்றுகிறது! அப்புறம், 'இது எதுவுமேவேண்டாம். ஒரு நாள் சித்ரான்னங்களாகச்சாப்பிடலாம்' என்று தோன்றுகிறது.
வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும்,அதே பாட்டு, அதே ராகத்தை ஒவ்வொருகச்சேரியிலும் பாடினால் அலுத்துப்போகிறது.
எதில் (எந்தத் துறையில்) போனாலும்இப்படித்தான் பல தினுஸாக, மாறுபாடாகவேண்டியிருக்கிறது.
அவ்வப்போது ஒவ்வொன்றிடமும் முழுஈடுபாடு இருந்தாலும்- இன்றைக்குத்தயிர்வடை என்றால் சப்புகொட்டிக்கொண்டு ஐந்து ஆறு என்றுஉள்ளே தள்ளினாலும், நாளைக்கு,நாளன்றைக்கு, நாலாம் நாள், அஞ்சாம்நாளும் அதுவேதான் என்றால்,இன்றைக்குச் சப்புக் கொட்டினவர்களேஅன்றைக்கு முகத்தைச் சுளிக்கிற மாதிரி-
திரும்பத் திரும்ப அது ஒன்றேதான் என்றுவரும்போது அதிலே ருசி, ஈடுபாடு குறைந்துவிடுகிறது.
இது தெரிந்துதான் நம்முடைய மதத்தில்இத்தனை ஸ்வாமி, விதவிதமான ரூபம்,விதவிதமான அலங்காரம், விதவிதமானவாஹனம், அததற்கும் விதவிதமான பூஜாபத்ததி என்று வைத்திருக்கிறது.
கோயிலுக்குப் போகிறோம். பிள்ளையார்ஸந்நிதியில் நிற்கிறோம். அப்போதைக்குஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸுகுவிந்த மாதிரிதான் இருக்கிறது. அப்புறம்கையை, காலை சொறிந்து கொள்கிறோம்.மனஸு பிய்த்துக்கொண்டு கிளம்பிவிடுகிறது!
மனஸை அப்படியே எந்தக் குப்பைத்தொட்டிக்கு வேண்டுமானாலும் ஓடட்டும்என்று விட்டு விடுவதா?
அப்படி விட்டு விடாமல், நல்லதிலேயே,தெய்வ ஸம்பந்தமாகவே அந்த மனஸைஇழுத்தால்தானே தேவலை?
எப்படி இழுப்பது?
பாழும் மனஸுக்கு இந்தவிக்னேஸ்வரமூர்த்தி, தொப்பையும்தொந்தியுமாக இத்தனை அழகாகஉட்கார்ந்திருந்துங்கூட, அவரிடமேதொடர்ச்சியாக ஒட்டிக்கொண்டிருக்கமுடியவில்லையே!'
பரவாயில்லையப்பா!' என்று இங்கேதான்நம் ஸமயாசார புருஷர்கள் ஆறுதல் தரவருகிறார்கள்.
'மனஸின் நேச்சர் அப்படித்தான் அப்பா! அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான்திருத்தி நிலையாக ஒருமுகப் படுத்தமுடியுமப்பா!
அதற்கு எதிலும் 'சேஞ்ச்'வேண்டும். தெய்வஸம்பந்தமாகவுங்கூட அப்படி வேண்டும்.அதையும்தான் நம்முடைய மதம் தருகிறதே!
விக்நேச்வரரிடம் ஈடுபாடு குறைகிறதா,அழாதே! இதே 'சேஞ்சா'க ஸுப்ரஹ்மண்யர்ஸந்நிதி, அப்புறம் இன்னும் பல 'சேஞ்ச்'கள் -
அம்மன், ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி,துர்க்கை, நடராஜா, மநுஷ்ய ரூபத்தில் வந்தஅறுபத்து மூவர் என்று எல்லாம் ஒன்றுசேர்த்துத்தானே கோவில் என்றுவைத்திருக்கிறோம்.
ஒவ்வொன்றிடமும் ஒரு க்ஷணம், இரண்டுக்ஷணம் மனஸ் ஈடுபட்டுக் கும்பிட்டுவிட்டுபோயேன். மொத்தத்தில் ஒருகணிசமான நாழி உன் மனசு தெய்வஸம்பந்தமாகவேஈடுபட்டிருக்கும்'என்கிறார்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது?
நம்முடைய மதத்தின்சிறப்புக்களிலெல்லாம் பெரிய சிறப்பு ஒன்று எது தெரியுமா? ஜீவாத்மாவும்பரமாத்மாவும் ஒன்றேதான் என்றுகாட்டுகிற ஒரே மதம் ஹிந்து மதம்தான்என்று பலபேர், அறிவாளிகள், அந்நியதேசத்தவர்கள்கூட, ரொம்பவும் சிறப்பித்துச்சொல்கிறார்கள்.
'எந்த மதத்திலும் இல்லாதஅத்வைத ரத்னம் இருக்கிற இந்த மதத்தில்,எந்த மதத்திலும் இல்லாத அளவுக்குஇத்தனை த்வைதமான ஆசாரஅநுஷ்டானங்களும், சாமிப்பட்டாளமும்இருக்கிறதே! இவை ஒன்றுக்கொன்று ஒரேமுரண்பாடாக இருக்கிறதே' என்றுஅவர்களில் ரொம்பப் பேர்வருத்தப்படுகிறார்கள்.
எனக்கோ (மஹாபெரியவாளுக்கு) என்னதோன்றுகிறதென்றால், அத்வைதம்நம்முடைய பெரிய சிறப்புத்தான்என்றாலும் , அதைவிடவும் சிறப்பாக எதுதோன்றுகிறது? இப்படி ஒன்றேயானஅத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயேவித்யாஸம் வித்யாஸமாக இத்தனைவர்ணாச்ரம வ்யவஸ்தைகளும், இத்தனைபட்டாளமாக தெய்வங்களும்வைத்திருப்பதுதான்!
அத்வைதம் ஏக பரமாத்மா என்பது ஐடியல்.இத்தனை ஸ்வாமி பட்டாளம்? இத்தனைவிதமான ஆசார வ்யவஸ்தைகள்? என்பதுப்ராக்டிகல்.
ப்ராக்டிகலில் ஆரம்பித்துக்ரமேண (படிப்படியாக)முன்னேறினால்தான் ஐடியலுக்குப் போய்ச்சேர முடியும். இப்போதே ஐடியல் என்றுயத்தனம் பண்ணினால் ஒன்றுதோல்வியாக ஆகும், அல்லது, அதைவிடத்தப்பாக ஹிபாக்ரிஸியாக, போலிவேஷமாகத்தான் ஆகும்.
அத்வைதத்தைச் சொன்ன மதத்தில்இத்தனை த்வைதத்துக்கு இடம் கொடுப்பதாஎன்று கொஞ்சங்கூடத் தயங்காமல்,ஜனங்களின் மனப்பான்மையை நன்றாகப்புரிந்துகொண்டு, அநுதாபத்துடன், பரமகருணையுடன் இத்தனை தர்மாசாரப்பிரிவினைகளையும், சாமிப்பட்டாளத்தையும் இடம் கொடுத்துவைத்துக்கொண்டிருப்பதுதான்சிறப்புக்களில் பெரிய சிறப்பு. அதனால்தான்அத்வைத ஆசார்யாளான நம்முடையபகவத் பாதாளே வர்ணாச்ரமவ்யவஸ்தைகளையெல்லாம் மறுபடிநன்றாக ஒழுங்குபடுத்தி நிலைநாட்டினார்.
பஞ்சாயதனம் என்று ஐந்து தெய்வங்களைவைத்துப் பூஜை பண்ணும்படியாக ஏற்பாடுசெய்தார். அதோடு,'ஸுப்ரஹ்மண்யரையும்பூஜை பண்ணு'என்கிற மாதிரி(ஸுப்ரஹ்மண்ய) புஜங்கம் பாடிவைத்திருக்கிறார். ஷண்மத ஸ்தாபனம்என்று பண்ணும்போது அதில்(ஸுப்ரஹ்மண்ய உபாஸனையான)கௌமாரம் என்பதையும்சேர்த்துக்கொண்டார். இன்னும், ராமன்,க்ருஷ்ணன், நரஸிம்மமூர்த்தி, அம்பாள்என்று எடுத்துக்கொண்டால் அதிலேயேத்ரிபுரஸுந்தரி, பவாநி, ப்ரமராம்பா,சாரதாம்பா என்று பல ரூபபேதங்கள்,கங்காதி புண்ய நதிகள்-என்று ஒன்றுபாக்கியில்லாமல் அத்தனைசாமிப்பட்டாளத்தின் மேலேயும்ஸ்தோத்ரங்களைப் பாடி வைத்திருக்கிறார்.
தினமலர்
'எந்த மதத்திலும் இல்லாதஅத்வைத ரத்னம் இருக்கிற இந்த மதத்தில்,எந்த மதத்திலும் இல்லாத அளவுக்குஇத்தனை த்வைதமான ஆசாரஅநுஷ்டானங்களும், சாமிப்பட்டாளமும்இருக்கிறதே! இவை ஒன்றுக்கொன்று ஒரேமுரண்பாடாக இருக்கிறதே' என்றுஅவர்களில் ரொம்பப் பேர்வருத்தப்படுகிறார்கள்.
எனக்கோ (மஹாபெரியவாளுக்கு) என்னதோன்றுகிறதென்றால், அத்வைதம்நம்முடைய பெரிய சிறப்புத்தான்என்றாலும் , அதைவிடவும் சிறப்பாக எதுதோன்றுகிறது? இப்படி ஒன்றேயானஅத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயேவித்யாஸம் வித்யாஸமாக இத்தனைவர்ணாச்ரம வ்யவஸ்தைகளும், இத்தனைபட்டாளமாக தெய்வங்களும்வைத்திருப்பதுதான்!
அத்வைதம் ஏக பரமாத்மா என்பது ஐடியல்.இத்தனை ஸ்வாமி பட்டாளம்? இத்தனைவிதமான ஆசார வ்யவஸ்தைகள்? என்பதுப்ராக்டிகல்.
ப்ராக்டிகலில் ஆரம்பித்துக்ரமேண (படிப்படியாக)முன்னேறினால்தான் ஐடியலுக்குப் போய்ச்சேர முடியும். இப்போதே ஐடியல் என்றுயத்தனம் பண்ணினால் ஒன்றுதோல்வியாக ஆகும், அல்லது, அதைவிடத்தப்பாக ஹிபாக்ரிஸியாக, போலிவேஷமாகத்தான் ஆகும்.
அத்வைதத்தைச் சொன்ன மதத்தில்இத்தனை த்வைதத்துக்கு இடம் கொடுப்பதாஎன்று கொஞ்சங்கூடத் தயங்காமல்,ஜனங்களின் மனப்பான்மையை நன்றாகப்புரிந்துகொண்டு, அநுதாபத்துடன், பரமகருணையுடன் இத்தனை தர்மாசாரப்பிரிவினைகளையும், சாமிப்பட்டாளத்தையும் இடம் கொடுத்துவைத்துக்கொண்டிருப்பதுதான்சிறப்புக்களில் பெரிய சிறப்பு. அதனால்தான்அத்வைத ஆசார்யாளான நம்முடையபகவத் பாதாளே வர்ணாச்ரமவ்யவஸ்தைகளையெல்லாம் மறுபடிநன்றாக ஒழுங்குபடுத்தி நிலைநாட்டினார்.
பஞ்சாயதனம் என்று ஐந்து தெய்வங்களைவைத்துப் பூஜை பண்ணும்படியாக ஏற்பாடுசெய்தார். அதோடு,'ஸுப்ரஹ்மண்யரையும்பூஜை பண்ணு'என்கிற மாதிரி(ஸுப்ரஹ்மண்ய) புஜங்கம் பாடிவைத்திருக்கிறார். ஷண்மத ஸ்தாபனம்என்று பண்ணும்போது அதில்(ஸுப்ரஹ்மண்ய உபாஸனையான)கௌமாரம் என்பதையும்சேர்த்துக்கொண்டார். இன்னும், ராமன்,க்ருஷ்ணன், நரஸிம்மமூர்த்தி, அம்பாள்என்று எடுத்துக்கொண்டால் அதிலேயேத்ரிபுரஸுந்தரி, பவாநி, ப்ரமராம்பா,சாரதாம்பா என்று பல ரூபபேதங்கள்,கங்காதி புண்ய நதிகள்-என்று ஒன்றுபாக்கியில்லாமல் அத்தனைசாமிப்பட்டாளத்தின் மேலேயும்ஸ்தோத்ரங்களைப் பாடி வைத்திருக்கிறார்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது?
ஆன்மிகம் ஒரு புதையல்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» மனைவியை புரிந்து கொள்ள.!!!
» உங்கள் மனைவியை புரிந்து கொள்ள
» நட்பைப் பற்றிப் புரிந்து கொள்ள ...
» உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
» முடியாதது ஏது?
» உங்கள் மனைவியை புரிந்து கொள்ள
» நட்பைப் பற்றிப் புரிந்து கொள்ள ...
» உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
» முடியாதது ஏது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|