Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலக கோப்பையில் எங்களை ஜெயிக்க முடியாது என்று மீண்டும் நிரூபித்த இந்தியா
Page 1 of 1 • Share
உலக கோப்பையில் எங்களை ஜெயிக்க முடியாது என்று மீண்டும் நிரூபித்த இந்தியா
பாகிஸ்தான் தோல்வி: உலக கோப்பையில் எங்களை ஜெயிக்க முடியாது என்று மீண்டும் நிரூபித்த இந்தியா
உலக கோப்பை போட்டியில் இன்று ‘பி’ பிரிவில் உள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 300 ரன்களை குவித்தது. அதிரடி ஆட்டக்காரர் கோலி மற்றும் ரெய்னா ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இந்திய அணி தரப்பில் கோலி 107 ரன்களும், ரெய்னா 74 ரன்களும், தவான் 73 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் வெற்றிக்கு 301 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட ஆரம்பித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெசாத்தும், யூனிஸ்கானும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் பந்துகளை சந்திக்க சிரமப்பட்டனர். இந்திய அணியின் விக்கெட் கணக்கை சமி துவக்கி வைத்தார். 6 ரன் எடுத்திருந்த யூனிஸ்கானை சமி வெளியேற்றினார். அடுத்து ஹாரிஸ் சோகைல் களமிறங்கினார். அவர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பு வேகம் குறைய தொடங்கியது. இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் ஹாரிஸ் சோகைல் 36 ரன்னில் அவுட்டானார். 24-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் ஷெசாத் 47 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். 4-வது பந்தில் மக்சூத் டக் அவுட்டனார். அடுத்த சில நிமிடங்களில் அக்மலும் டக் அவுட்டனார். 25-வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்த தத்தளித்து கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா- அதிரடி வீரர் சாகித் அப்ரிடி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நங்கூரம் பாய்த்தபடி நின்றுவிட்டால் இந்தியாவிற்கு சிரமம்தான் என்று இந்திய ரசிகர்கள் நினைத்தனர். அதற்கேற்றபடி இருவரும் விளையாடினார்கள். 32 ஓவரில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்திருந்தது. 33 ஓவரில் பேட்டிங் பவர் பிளேயை பாகிஸ்தான் எடுத்தது.
பவர் பிளேயின் 3-வது ஓவர் முதல் பந்தில் அப்ரிடி 22 பந்தில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சமி பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 34.1 ஓவரில் 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. அப்ரிடி அவுட் ஆனதும் நாம் தோற்பது உறுதி என்று நினைத்த மிஸ்பா உல் ஹக் அதிரடியாக விளையாட முடிவு எடுத்தார். இதன்படி அவர் பந்தை நாலாபுறம் விரட்டினார். அஸ்வின் வீசிய 36-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி விளாசினார். சமி வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டி அரை சதம் அடித்தார். இதற்கிடையே வாஹாப் ரியாஸ் 4 ரன்னில் அவுட் ஆனார்.
அதன்பின் வந்த யசீர் 13 ரன்னில் மோகித் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் மிஸ்பா தொடர்ச்சியாக 3 பவுண்டரி விளாசினார். இருந்தாலும் சமி வீசிய 46-வது ஓவரில் மிஸ்பா 84 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பிந்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக பாகிஸ்தான் 47 ஓவரில் 224 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதம் அடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 6 முறை வென்று தோல்வியை சந்திக்காத இந்தியா என்ற வரலாற்று சாதனையை தக்க வைத்துக்கொண்டது.
நன்றி: மாலைமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலக கோப்பையில் எங்களை ஜெயிக்க முடியாது என்று மீண்டும் நிரூபித்த இந்தியா
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புது டெல்லி, பிப்.15-
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 76 ரன்களில் வீழ்த்தியது.
2015- உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சுவைத்துள்ள இந்த முதல் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ‘டுவிட்டரில்’ ’வாழ்த்துகள் இந்தியா, அபார ஆட்டம், உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: மாலைமலர்
புது டெல்லி, பிப்.15-
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 76 ரன்களில் வீழ்த்தியது.
2015- உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சுவைத்துள்ள இந்த முதல் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ‘டுவிட்டரில்’ ’வாழ்த்துகள் இந்தியா, அபார ஆட்டம், உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: மாலைமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலக கோப்பையில் எங்களை ஜெயிக்க முடியாது என்று மீண்டும் நிரூபித்த இந்தியா
உலக கோப்பை போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி
உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. இதில் இந்திய அணி வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதமடித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
இதற்கு முன் 2003 ஆண்டு உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 98 ரன்கள் எடுத்திருந்தார் சச்சின். இது தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சதம் அடித்த கோலி சச்சினின் சாதனையை முறியடித்தார். அதே போல் இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம், ஒரு நாள் போட்டிகளில் 22 சதம் அடித்த கங்குலியின் சாதனையையும் சமன் செய்தார் கோலி.
தற்போது தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் குவித்தவர் வரிசையில் கோலி இடம்பிடித்துள்ளார். தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் 49 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: மாலைமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலக கோப்பையில் எங்களை ஜெயிக்க முடியாது என்று மீண்டும் நிரூபித்த இந்தியா
4 ஆட்டத்திலும் 300 ரன்னுக்கு மேல் குவிப்பு.
உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த 2 ஆட்டத்திலும் 300 ரன்னுக்கு மேல் குவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 331 ரன் குவித்தது. 98 ரன்னில் வெற்றி பெற்றது.
இதேபோல இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 342 ரன் குவித்தது. 111 ரன்னில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 339 ரன் குவித்தது.
இன்று இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்கள் குவிப்பு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» “அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.
» ஓடமுடியாத எங்களை வாழவிடுங்கள்....!!!
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா?
» நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?..
» “அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.
» ஓடமுடியாத எங்களை வாழவிடுங்கள்....!!!
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா?
» நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|