Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது
Page 1 of 1 • Share
சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது
இப்போதைக்கு உள்ள அவசர வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. முறையான சரி விகித உணவு என்றால் என்ன? எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை சத்து:
மாவு சத்து என்றும், சர்க்கரை சத்து என்றும் அழைக்கப்படும். இந்த உணவே நமது பெரும்பான்மையான உணவு என்று கூறலாம். உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை இந்த சர்க்கரை சத்து தருகிறது. அதனால் தான் இந்த உணவை நாம் தேடி எடுத்துக்கொள்கிறோம். இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் இருந்தும் பெறப்படுகிறது. இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் குளுக்கோசாகமாற்றப்பட்டு மனிதன் என்ற இயந்திரம் சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது. இந்த குளுக்கோஸ் உயிர் அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாக மாறி மனிதனை இயக்குகிறது. இதனால் தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்தி தர குளுக்கோசு தரப்படுகிறது. ஒரு கிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரி வெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒரு கலோரி எனப்படும். சர்க்கரையை விட வெல்லமே சிறந்த உணவாகும்.
கொழுப்பு சத்து:
நிலைத்திணை (தாவர), மாமிச, எண்ணைகள் ஆகியவற்றில் இருந்து நமக்கு கிடைக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்றும் மற்றும் பாசுபரஸ், கந்தகம், நைட்ரஜன் போன்ற வையும் உள்ளது. உணவு முறைகளில் நாம், கொழுப்பு வகை உணவையே அதிகளவில் உட்கொள்கிறோம். ஒரு கிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது. மாமிசம், தேங்காய், எள், நிலக்கடலை, பனை, சூரியகாந்தி, கடுகு, சோயா, ஆமணக்கு, வெண்ணை, நெய், அரிசிதவிடு ஆகியவை கொழுப்பு சிறந்த உணவுகளாகும்.
புரதம்:
சர்க்கரையும், கொழுப் பும் சக்தியை தருகிறது. அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும், உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது. பின்தங்கிய இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதாக காணப்படுகிறது. இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே அதிகளவில் நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய உடல் கோடிகணக்கான உயிர் அணுக்களினால் ஆனது. இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் முக்கியமானதாக இந்த புரத சத்து தான். ஒரு கிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசி மற்றும் பருப்பு வகைகளில் உள்ள புரதத்தில் லைசின், மித்தியோனின் குறைந்தே இருந்தே உள்ளது. இந்த இரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுகிறது. தாவர உணவு உண்ணுபவர்கள் பலவித தானிய வகைகள், பழ வகைகள், கீரைகள், பால் போன்றவை சாப்பிடுவதால் அவற்றில் இருந்து தரமான புரதம் கிடைக்கிறது. மொச்சை, குதிரை மசால், பாசிபயறு, வேர்கடலை, பருத்தி சோளம் ஆகியவற்றில் அதிகளவில் புரத சத்து உள்ளது.
நார் சத்து:
இந்த நார் சத்தை பொறுத்த வரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் நாம் அதை அதிகளவில் உண்ணுகிறோம். மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதால், மலம் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். இதனால் நார் சத்து உணவுகளை சாப்பிட்டதால், அதிகளவில் கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவைப்படுகிது. எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.
உயிர் சத்துகள்:
உடலின் சீரான வளர், சிதை மாற்றத்திற்கு உயிர் சத்து துணை செய்கிறது. இது நம் உணவில் சேர்க்கவேண்டிய வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகிறதோ, அதற்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது. வைட்டமின் பி 1 தான் உயிர் சத்தின் குறியீட்டதாக உள்ளது. இது கைகுத்தல் அரிசி, மாமிசம் போன்றவற்றில் அதிகளவில் உள்ளது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3320
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராது
உணவில் - உணவின் போது குறைந்த பட்சம் 3 -4 சுவைகளையாவதும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Similar topics
» "சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரிவிகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்களிடம் காசு வாங்காத டாக்டர்கள்!"
» கோடையில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றினால் அஜீரண கோளறு வராது !!!!
» பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைய ==புன்னை
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
» மனசு வராது உங்களுக்கு.
» கோடையில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றினால் அஜீரண கோளறு வராது !!!!
» பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைய ==புன்னை
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
» மனசு வராது உங்களுக்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|