Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகில் 3ல் ஒரு பங்கு மக்கள் காசநோயால் பாதிப்பு
Page 1 of 1 • Share
உலகில் 3ல் ஒரு பங்கு மக்கள் காசநோயால் பாதிப்பு
உலக மக்கள் தொகையில் 3ல் 1 பங்கினர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாசம் தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மைய டாக்டர் கமல் கூறியிருப்பது, ஒவ் வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினமாக கடைபிடிக் கப்படுகிறது. பழங்காலத்திலேயே காசநோய் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது. கிட்டதட்ட 18,000 வருடங்களுக்கு முன் இருந்திருக்க கூடிய எருமையின் எச்சங்களிலிருந்து இந்நோய் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
கால்நடைகளிலிருந்து தோன்றி மனிதர்களை தாக்கும் திறனுடன் மாற்றப்பட்ட இனமா அல்லது வெவ்வேறு இனங்களில் தொற்று ஏற்படுத்தும் திறன் கொண்ட ஒரு பொது மூதாதையரிலிருந்து தோன்றிய பின்னர் திரிபடைந்த இனமா என்ற நிலை இன்னமும் உறுதிப்படவில்லை. இருப்பினும் அண்மை காலத்தில் உருவாகி மாடுகளை தாக்கும் மை, போவிசு இதிலிருந்து நேரடி வழிதோன்றலாக மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் திரிபடைந்து வந்திருப்பது தெளிவாக தெரிகிறது.
கி.மு 469 ஆம் ஆண்டளவில் காசநோய் கிரேக்க மொழியில் இப்திசிசிசு என அழைக்கப்பட்டது. தென்அமெரிக்காவில் கி.மு.760 முதல் கி.பி 100 ஆண்டுகளுக்கான இடைப்பட்ட பராசீக நாகரீக காலத்திலேயே இருந்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டு அறிவியலாளர் ராபர்ட் கோக்டியூபர்குலோசிசு பாசில்லை என்னும் நுண்ணுயிர்களை கண்டுபிடித்தார். முற்காலத்தில் இந்த நோயானது உருக்கி நோய் எனவும் அழைக்கப்பட்டது. ரத்த இருமல், காய்ச்சல், வெளி ரிய உடல் போன்ற அறிகுறிகளால் அழிவு ஏற்படுவதால் இந்நோயை இப்பெயரிட்டு அழைத்தனர்.
உருக்குதல் என்ற சொல்லின் கிரேக்க சொல்லான பேத்திசிசி என்ற சொல்லின் பெயரைக்கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது. காசநோயானது பொதுவாக மூச்சு தொகுதியில் நுரையீரலை தாக்கி நோய் உண்டாக்கினாலும், இவை நரம்பு தொகுதி, நிணநீர் தொகுதி இரைப்பை குடல் தொகுதி, எலும்புகள், மூட்டுகள், குருதி சுழற்சிபாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க கூடியது. இந்நோய் பொதுவாக டி.பி (டியூபர்க்கில் பாசிலஸ்) அல்லது (டியூபர்குலோசிஸ்) என குறிப்பிடப்படுகிறது.
சில மருந்துகள் உதவியால் நோய் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புகள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமல் செய்வதற்கான வழிமுறைகளை இன் னமும் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை உடையது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அது ஒரு மறைநிலையில் அல்லது துஞ்சு நிலையில் காணப்படும். அப்படி உள்ளவர்களில் 10ல் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிகாட்டி நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
நோயை கண்டுபிடிக்க நெஞ்சில் முகதிர் படபிடிப்பு (எக்ஸ்ரே) தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் பரிசோதனை, உடல் நீர்மங்களின் நுண்ணுயிர் வளர்ப்பு பரிசோதனை பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயை குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைந்து நீண்ட காலத்திற்கு கொடுக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 3ல் 1 பகுதியின் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண் டும் புதிதாக 80 முதல் 90 லட்சம் மக்கள் இந்நோய் தொற்றுக்கு உள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
ஒவ் வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாவ தாகவும் கூறப்படுகிறது. எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸின் தாக்கத்திற்கு உள்ளான நோய்களில் ஏற்பட கூடிய முக்கியமான 2வது தொற்றாக இந்த காசநோய் காணப்படுகிறது. 2005ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 2003ல் 88 லட்சம் பேர் புதிதாக இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகி, 17 லட்சம் மக்கள் இறந்துள்ளனர்.
நோயுள்ள ஒருவரிடம் தொடர்ந்து அடிக்கடி தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தால் அவர்களை குணப்படுத்துவது மூலம் நோயை மேலும் பராவாமல் தடுக்கலாம். 1921ல் பாசில்லஸ் கால்மெட்-குவரின் தடுப்பூசி, மனிதர்களில் காசநோயை தடுக்கும் நோக்கத்துடன் பயன்பாட்டுக்க கொண்டு வரப்பட்டது.
1905-1921 ஆண்டுகளுக்கிடையே காசநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து பிசிஜி ஆகும். இது குழந்தைகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்தாகும். பிசிஜி தடுப்பூசி குழந்தை பிறந்த 4 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அப்போது தழும்பு ஏற்படும். இந்த தழும்பு உண்டாகிய இடத்தில் 6 மாதம் முதல் 5 வயது காலத்திற்குள் இந்த ஊசி கொடுக்கப்பட வேண்டும்.
3 நாட்களுக்கு மேல் இருமல் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று பரி சோதனை செய்ய வேண்டும். பசும்பாலினால் பரவும் காசநோயை தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாச்சர் முறையில் பதனிடப்பட்ட பாலை அருந்த வேண்டும். காசநோய் கண்டறியப்பட்டால் 6 மாத காலத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்ப்பு சக்தி உடைய நோய் கிருமிகள் உருவாகி நோயை குணப்படுத்த முடியாதநிலை ஏற்படும். இவ்வாறு டாக்டர் கமல் கூறியுள்ளார்.
தினகரன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மன அமைதிக்கு குடும்பத்தின் பங்கு
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி!
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு
» ஏனையவர்களுடன் நெருங்கிப்பழகுவதில் நம்பிக்கையின் பங்கு என்ன?
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி!
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு
» ஏனையவர்களுடன் நெருங்கிப்பழகுவதில் நம்பிக்கையின் பங்கு என்ன?
» பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|