தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு

View previous topic View next topic Go down

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு Empty அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு

Post by முழுமுதலோன் Tue Mar 31, 2015 10:35 am

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு T_500_860
மூலவர் : கஸ்தூரி ரங்கநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூமாதேவி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : ஈரோடு
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

புரட்டாசியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம்

தல சிறப்பு:

பெருமாள் கோயில் வாசலில் காவல் நிற்கும் ஜெயன், விஜயன் ஆகியோர் சன்னதிக்குள் பெருமாளின் திவ்யதரிசனத்தைக் காண்பது கோயிலின் சிறப்பம்சம்

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில் , ஈரோடு - 638 001. ஈரோடு மாவட்டம்.

போன்:

+91- 424 - 2267 578, 2264 090

பொது தகவல்:

பிரகாரத்தில் உள்ள பெருமாள் பாதத்தை சுற்றி ஆதிசேஷன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளனர்.


பிரார்த்தனை

கோபகுணம் கொண்டவர்கள் கோபம் குறையவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

திருமணமான பெண்கள் இவளுக்கு தாமரை படைத்து, நெய்விளக்கு ஏற்றி, வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தலபெருமை:

சாந்த துர்வாசர்: கடவுள்களில் சாத்வீகமானவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் துர்வாச முனிவரிடம் ஒப்படைத்தனர். அவர் கைலாயம் மற்றும் பிரம்ம லோகங்களுக்கு அனுமதியின்றி சென்ற போது தெய்வங்கள் அவரைக் கடிந்து கொண்டனர். ஆனால், வைகுண்டம் சென்று திருமாலின் மார்பில் மிதித்து அவரை துயில் எழுப்பிய போதும் கூட திருமால் சிரித்துக் கொண்டே அவரை வரவேற்றார். பக்தனின் பாதம் பட, தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் பெருமாள். துர்வாசர் மகிழ்ந்தார். ஆனால், திருமாலின் மார்பில் இருந்த லட்சுமிதேவிக்கு, தன் கணவரை மிதித்த துர்வாசரை பிடிக்கவில்லை. துர்வாசரைக் கண்டிக்காத பெருமாளை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.""ரிஷியே! தங்கள் கோபச் செய்கையால் என் மனைவியைப் பிரிந்தேன். இனியாவது சாந்தகுணம் பெறுங்கள். ரிஷிகளுக்கு சாந்த குணமே சிறந்தது,'' என்றார் பெருமாள். துர்வாசரும் அதை ஏற்றார். அந்த சாந்தகுண துர்வாசரை இத்தலத்தில் காணலாம்.

சிறப்பம்சம்: கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளிகொண்ட கோலத்தில், வலது கையில் தண்டத்தை பிடித்தபடி இருக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன், ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார். சுவாமிக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆனியில் தைலக்காப்பின்போது 48 நாட்கள் சுவாமியின் முகம் மற்றும் பாத தரிசனத்தை மட்டுமே காண முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கர்ப்பிணிப் பெண்கள், சுகப்பிரசவம் ஆவதற்காக சுவாமிக்கு கஸ்தூரி எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இதன் காரணமாக சுவாமிக்கு, "கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது இந்த வழக்கம் நின்றுவிட்டது.

தாயார் சிறப்பு: சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் கமலவல்லித்தாயார், தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். அன்று ஒருநாள் மட்டும் தாயாருடன், சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.

லிங்கப்பாறை ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயரின் பக்தரான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் பிரகாரத்தில் இருக்கிறார். வலது கையை தூக்கியிருக்கும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார்.

கோயில் அமைப்பு: சுவாமி சன்னதி விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் இருக்கிறது. சிவனுக்குரிய வில்வம் இத்தலத்தின் விருட்சம். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஆண்டாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இடதுபுறத்தில் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர், கண்ணன் இருக்கின்றனர். தனிச்சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், தலையில் அக்னி ஜ்வாலை கிரீடத்துடன் உக்ரமாக இருக்கிறார்.


தல வரலாறு:

வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரை பிரியாமல் இருந்தனர். ஒருசமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த மகரிஷிகள் சிலர் காவலர்களை கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவரை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த பெருமாள் அவர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன், இரண்யாட்சன், ராவணன், கும்பகர்ணன், கம்சன், சிசுபாலன் என பிறந்து மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாழ்பணிந்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கருவறைக்குள்ளேயே தாழ் பணிந்து நிற்பதை இந்தக் கோயிலில் காணலாம்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு Empty Re: அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு

Post by ஸ்ரீராம் Wed Apr 01, 2015 11:24 am

ஆலய தரிசனம் அருமை.
மிகவும் பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி அண்ணா.

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm3
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு Empty Re: அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு

Post by முரளிராஜா Wed Apr 01, 2015 3:57 pm

ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு Empty Re: அருள்மிகு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில், ஈரோடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum