தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

View previous topic View next topic Go down

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Empty உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

Post by mohaideen Sun Apr 12, 2015 10:31 am

கவனம்
spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Ht3432
கீழே விழுந்து அடிபட்டாலோ, வெட்டுக்காயம் உண்டானாலோ ‘செப்டிக் ஆகிடாம இருக்க உடனே ஊசி போடுங்க’ என்கிற அட்வைஸை பல முறைக் கேட்டிருப்போம். செப்டிக் என்பதன் அர்த்தமே தெரியாமல் சகஜமாகப் புழங்குகிற இந்த அட்வைஸ் அலட்சியப்படுத்தக்கூடியது அல்ல.‘சிறு காயமானாலும் உடனடியாக கவனித்து தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், நாளடைவில் சீழ் பிடித்து உயிரைப் பறிக்கும் எமனாக மாறிவிடக்கூடும்’ என்கிறார் பொது மருத்துவர் எஸ்.சி.சாண்டில்யா.

செப்டிசீமியா (Septicemia) எனப்படுகிற இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகிறார் அவர்.

‘‘நமது உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என இரண்டு உள்ளன. வெள்ளை அணுக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) உருவாக்குகின்றன. இடித்துக் கொள்ளல், தவறி கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடம்பில் அடிபடுதல், கை மற்றும் கால்களில் ஏற்படும் சிராய்ப்புகள் நாளடைவில் பெரிய காயங்களாக மாறுகின்றன. இந்தக் காயங்களை கிருமிகள் தாக்கும்போது, அவற்றின் நச்சுத்தன்மையை எதிர்த்து, நமது உடம்புக்குக் கவசம்போல வெள்ளை அணுக்கள் செயல்படுகின்றன. காயங்களில் உண்டாகும் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளபோது, வெள்ளை அணுக்கள் Phagocytes என மாற்றம் பெறுகின்றன.

இந்த நேரத்தில், இவை தன்னைத்தானே தியாகம் செய்து, தன் வடிவத்தை இழந்து, வெள்ளை அணுக்களாக நம் உடலில் இருந்து வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் வெள்ளை அணுக்கள்தான் சீழ் என்று அழைக்கப்படுகின்றன. செப்டிசீமியா என்பதற்கு சீழ்பிடித்தல் எனப்பொருள். உடலின் எந்தப் பகுதியில் அடிபட்டாலோ, கிருமிகளின் தாக்கத்தினாலோ, தோலில் உண்டாகும் விளைவுகளினாலோ சீழ்பிடித்து சிவப்பாக மாறுவதோடு, வீக்கம், வலி, காய்ச்சல் எல்லாம் ஒன்றாக சேர்வதும், உடலில் உள்ள   வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தடுத்து, கிருமிகளின் நச்சுத்தன்மை பல மடங்கு வீரியத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி ரத்தத்தில் கலப்பதும் செப்டிசீமியா என்று அழைக்கப்படுகிறது.

கைகள் மற்றும் கால்கள் செயல் இழப்பு, காயம் ஏற்பட்ட இடங்களில் வலி, வீக்கம் போன்றவை எல்லாம் இதன் அறிகுறிகளாக அமையும்.  குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வெளியேறும் இடங்களை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் வைத்தல், மலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகும் நாப்கின்களை பல மணிநேரம் மாற்றாமல் இருத்தல், நாப்கின்களில் அழுக்கு சேரவிடுதல் போன்றவற்றால்  குழந்தைகளுக்கு செப்டிக் ஏற்படும். பெரியவர்களுக்கு முதுகில் உண்டாகும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவற்றை  கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் செப்டிக்காக மாறிவிடும். பல நாட்களாக இருக்கும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவை சீழ் பிடிக்க தொடங்குவதற்கு முன்பே, அதற்கான நச்சுத்தன்மை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பே ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோயாளிகள், காசநோய், டைபாய்டு நோயால் அவதிப்படுபவர்கள், பல நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள், தொழுநோயாளிகள் ஆகியோரின் உடலில் ஏற்படும் சிறு காயம் மற்றும் சிராய்ப்புகள் செப்டிக்காக மாறும் வாய்ப்புகள் உள்ளன.சர்க்கரை நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான சூடு, அதிகமான குளிர்ச்சி தெரியாது.  இவர்களுக்குப் பாதத்தின் அடிப்பகுதியில்  உணர்ச்சி குறைவாக இருக்கும். நீண்ட நேரம் வெயிலில் நடந்து வரும்போதோ, முள் குத்தினாலோ, அடிபட்டாலோ இவர்களுக்கு எதுவும் தெரியாது.

வீட்டுக்கு வந்த பிறகுதான், காலின் அடிப்பாகம் பாளம்பாளமாக வெடித்து இருப்பதும், அடிபட்டு இருப்பதும், முள் குத்தி இருப்பதும் தெரிய வரும். இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், சீழ்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இதைப் போன்று, தலையில் முடி அதிகமாக இருத்தல், வியர்வை அதிகமாக சுரக்கும் உடற்பகுதிகள், நமது உடலில் வெளிச்சம் அதிகம்படுவதற்கு வாய்ப்பில்லாத இடங்கள் போன்ற உடலின் பகுதிகளில் சொறி, சிரங்கு அதிகமாகி, செப்டிக் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய, சில நாட்களிலேயே கிருமிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பெருகும்.

இதன் காரணமாக, உடலின் முக்கிய உறுப்புகளான கிட்னி, நுரையீரல், கல்லீரல், மூளை ஆகிய உறுப்புகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி, உயிரிழப்பு கூட ஏற்படலாம்.  எலும்பிலும் சீழ் பிடித்தல் (Osteomyelitis) ஏற்படும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருப்பது இயல்பானது. சீழ் பிடித்தல் காரணமாக, நமது உடலில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை பெருகும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பெருக்கத்தை அடிப்படையாக வைத்து, மருத்துவர்கள் செப்டிசீமியா தாக்கத்தை தெரிந்து கொள்வார்கள்.

கல்ச்சர் டெஸ்ட் வழியாக கிருமியைப் பரிசோதித்து, அதன் இனம், தன்மையைத்  தெரிந்து கொள்வார்கள்.  பின்னர், கல்ச்சர் மற்றும் சென்சிடிவிட்டி என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்குரிய ஆன்டிபயாடிக்கை மாத்திரை மூலமாகவோ, ஊசி மூலமாகவோ ரத்தத்தில் செலுத்தி, சீழ் பிடித்தலை உண்டாக்கும் கிருமிகளை அறவே ஒழித்து, செப்டிசீமியாவைக் குணப்படுத்தலாம்”.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3442
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Empty Re: உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

Post by ஸ்ரீராம் Sun Apr 12, 2015 7:17 pm

சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு நன்றி மொஹைதீன்.

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா 5v3z2b

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm4
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Empty Re: உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

Post by முரளிராஜா Mon Apr 13, 2015 4:02 pm

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Empty Re: உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

Post by ரானுஜா Mon Apr 13, 2015 5:44 pm

நல்ல தகவல் நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Empty Re: உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

Post by rammalar Mon Apr 13, 2015 6:58 pm

நல்ல தகவல் பகிர்வு
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

spm4 - உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா Empty Re: உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum