தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரத்தக்கட்டு இரகசியம்!

View previous topic View next topic Go down

இரத்தக்கட்டு இரகசியம்! Empty இரத்தக்கட்டு இரகசியம்!

Post by mohaideen Sun Apr 19, 2015 1:29 pm

இரத்தக்கட்டு இரகசியம்! Ht3450


மனிதனுக்கு ஏற்படும் உபாதைகளில் மிகவும் முக்கியமானது ரத்தக்கட்டு. அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல், கன்றிப்போய், சிவந்து,  வீக்கத்துடன் பார்க்கவே பயங்கரமாக காணப்படும். ரத்தக்கட்டு ஏற்படக் காரணம், முதலுதவி சிகிச்சை, ரத்தக்கட்டு பாதிப்பில் இருந்து உடல்  உறுப்புகளைப் பாதுகாக்கும் விதம் என எல்லாம் பேசுகிறார் டாக்டர் அரவிந்த்.

‘‘ஒருவருக்கு அடிபட்டவுடன் உடலில் இயல்பாகவே ஏற்படும் செயல்முறை ரத்தக்கட்டு என அழைக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் ரத்தக்கட்டு  ஏற்படுவதற்கான செயல் முறைகள் ‘உறைவு உருவாக்கம்’ (Thrombus Formation) எனப்படும். ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் 3 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்களுக்குள் இயல்பாகவே ரத்தக்கட்டு ஏற்பட்டு விடும். இவ்வாறு அடிபட்டவுடன் மனித உடலில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு ரத்த வட்டுகள் (Platelets) மிக முக்கியமான காரணியாக விளங்குகின்றன .

இந்த ரத்த வட்டுகளின் எண்ணிக்கை நமது உடலில் ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக்கலாம். இவற்றின் எண்ணிக்கை ஒன்றரை  லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ரத்தக்கட்டுக் குறைபாடுகள் ஏற்படும். ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை த்ரோம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என்றும் ரத்தவட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை த்ரோம்போசைட்டோசிஸ் (Thrombocytosis) என்றும் குறிப்பிடுவர். நமது உடலில் ரத்தக்கட்டை ஏற்படுத்துவதற்கென 13 காரணிகள் உள்ளன. இவை உறைதல் காரணிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

இவற்றில் V, VII, VIII, IX, X ஆகிய உறைதல் காரணிகள் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உறைதல்  காரணிகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டால், உடனே முதலுதவி  சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். இதனை சுருக்கமாக டாக்டர்கள் ‘Rice’ என அழைப்பர். ‘R என்பதற்கு ரெஸ்ட் என்று பொருள். அதாவது,  அடிபட்ட பாகத்துக்கு அதிகமாக அசைவுகள் கொடுக்காமல் இருந்தால், ரத்தக்கட்டு உடனடியாக ஏற்பட உறுதுணையாக இருக்கும். அடிபட்ட இடத்தில்  ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதை Ice Compression என்பர். இதுவும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, ரத்தக்கட்டு ஏற்பட உதவும்.

இதற்கு நாளங்களில் குறுக்களவு குறைதல் என்று பெயர். ரத்தம் வெளியேறும் இடத்தினை பாண்டேஜ் துணியால் கட்டுவதன் மூலம், ரத்தப்போக்கைக்  கட்டுப்படுத்தலாம். இந்த சிகிச்சை முறை Compression என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையைக் கையாளும்போது, பாண்டேஜ் துணியை  மிக இறுக்கமாகக் கட்டக்கூடாது. அப்படிச் செய்தால், அடிபட்ட இடத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக்கட்டுக்கான  முதலுதவி சிகிச்சை முறைகளில், கடைசியாக செய்யப்படுவது ‘E’ Elevation  என்பதாகும். இதில் அடிபட்ட இடம் அல்லது காயம்பட்ட இடத்தினை உயர்த்தி வைக்க வேண்டும். இதனால், ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக்கட்டு ஏற்பட வழி உண்டாகும். இவை அடிபட்ட உடனே  மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகும்.

இடித்துக் கொள்ளாமலும் காயம்படாமலும் கூட ஒருவருக்கு ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு   (Deep Vein Thrombosis) என்று பெயர். இவ்வகை ரத்தக்கட்டு கர்ப்பிணிகள், கருத்தரிப்பு மாத்திரையை அதிகமாக உட்கொள்ளும் பெண்கள், பருமனாக இருப்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் வயதானவர்கள் போன்றவர்களுக்கு அதிகம் வரலாம். இவர்களுக்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு வராமல் தடுக்க வீட்டில் இருந்த வாறே சில எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். வீக்கம் ஏற்பட்ட கை மற்றும் கால்களுக்கு அவ்வப்போது அசைவுகள் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

அதன்மூலம், ரத்தம் தேங்குவதைக் குறைத்து, ரத்தக்கட்டு ஏற்படுவதை தடுக்கலாம். வீக்கம் ஏற்பட்டுள்ள உடல் உறுப்புகளைத் தலையணை வைத்து  உயர்த்தி வைக்க வேண்டும். கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்க காலுறைகளைப் பயன்படுத்தலாம்.இப்படி முதலிலேயே வீக்கத்தைக்  கட்டுப்படுத்தவில்லை என்றால், ரத்தக்கட்டி உடைந்து நுரையீரல், இதயம், மூளை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கிவிடும். அந்த நேரத்தில்,  மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு போன்றவை   ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று  சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்...’’


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3460
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இரத்தக்கட்டு இரகசியம்! Empty Re: இரத்தக்கட்டு இரகசியம்!

Post by kanmani singh Mon Apr 20, 2015 1:34 pm

பயனுள்ள கட்டுரை! நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum