Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மரங்களும் "மரங்களும்" !
Page 1 of 1 • Share
மரங்களும் "மரங்களும்" !
வருவோரை வரவேற்க
வாசலில் “வாழை மரங்கள்”
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன !
"தென்னங்
குருத்துகளும் பாளைகளும்"
மங்கள அலங்கார நிமித்தம்
வெட்டி தோரணமாய் கட்டி
தொங்க விடப்பட்டிருந்தன !
ஆயிரக்கணக்கில்
“நெகிழிக் கதிரைகளால்”
நிரப்பியிருந்த மண்டபத்தின்
கிழக்குப் பக்கமாய்
பிரமாண்டமாய் பிரமாதமாய்
மேடைக் கட்டியிருந்தார்கள் !
மேடையின் சரி மத்தியில்
“தேக்கு மரத்தால்” செதுக்கப்பட்ட
ஆடம்பர மரக்கதிரையொன்று
அமர்த்தப்பட்டிருந்தது !
அமர்ந்திருத்த அனைவருக்கும்
“செயற்கையாய் சுவையூட்டிய
தோடம் பழச்சாறு”
வரவேற்பு பானமாய்
வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது !
குறிப்பிட்ட நேரத்தின்
ஒரு மணித்தியால
தாமதத்தின் பின்னர்
“CLA-Class mercedes benz மகிழூந்து”
மண்டப வாயிலில் வந்து நின்றது !
பலத்த கரகோஷம்
அரங்கத்தை
அதிரவைத்துக் கொண்டிருந்தது...
“செங்கம்பளம்” விரித்து
அழைத்துவரப்பட்டு
தேக்கு கதிரையில் அமர்த்தப்பட்டார்
தேசிய கவிஞர் !
மரம்....
மனிதனுக்கு கிடைத்த
வரம்....
கவிப்பாடத் தொடங்கினார்...
கைத்தட்டலும்
விசில் சத்தமும்
வானைப் பிளந்துக் கொண்டிருந்தது !
யுகத்தின் மேம்பாட்டை
வரிவரியாய் விதைத்து வைத்திருந்தது
அந்த “யூக்கலிப்டஸ் மரத்தின்”
மீதியாயிருந்த “புதிய வெளியீடு”
“ஒருவர் ஒரு
புத்தகம் வாங்கினாலே
உலகத்தின் விடியல்
உறுதியாக்கப்படும்”
இறுதியாய் சொல்லிவிட்டு
மேடையையில் முழங்கினார்
வெளியீட்டாளர் !
உசுபேற்றப்பட்ட அனைவரும்
ஓடி ஓடி வாங்கினார்கள்....
புத்தகத்தின் விலை
வெறும் 500 மட்டுமே....!
இரண்டாம் பதிப்பு
அடுத்த மாதமே....
பொறுத்துக் கொள்ளுங்கள்
உறுதியாக சொன்னார்
விழா ஏற்பாட்டாளர் !
ஆண்டின் சிறந்த வெளியீடு...
விருது வாங்கியது புத்தகம் !
அரசாங்கத்தால்
விருது விருந்தெல்லாம் வழங்கி
கௌரவிக்கப் பட்டார்
தேசிய கவிஞர் !
அவுஸ்திரேலிய தமிழ்சங்கம்
அழைத்தது அவரை....
தண்ணீரின் தேவைப் போற்றி
தரணியெங்கும் விளங்குமாறு
கவிபாடச் சொல்லி
டாலர்களை கொட்டியது !
பாடினார்...அசத்தினார்....
விழா முடிந்தது
ஓய்வுக்கு ஒருவாரம்
எடுத்துக் கொண்டு
புதிதாய் வாங்கிய
"அப்பிள் தோட்டத்தைப்"
பார்வையிடப் போய்விட்டார்....
ஊரில்
அடுத்த விழாவுக்கு
வாழையும் தென்னையும்
வதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன !
வாசலில் “வாழை மரங்கள்”
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன !
"தென்னங்
குருத்துகளும் பாளைகளும்"
மங்கள அலங்கார நிமித்தம்
வெட்டி தோரணமாய் கட்டி
தொங்க விடப்பட்டிருந்தன !
ஆயிரக்கணக்கில்
“நெகிழிக் கதிரைகளால்”
நிரப்பியிருந்த மண்டபத்தின்
கிழக்குப் பக்கமாய்
பிரமாண்டமாய் பிரமாதமாய்
மேடைக் கட்டியிருந்தார்கள் !
மேடையின் சரி மத்தியில்
“தேக்கு மரத்தால்” செதுக்கப்பட்ட
ஆடம்பர மரக்கதிரையொன்று
அமர்த்தப்பட்டிருந்தது !
அமர்ந்திருத்த அனைவருக்கும்
“செயற்கையாய் சுவையூட்டிய
தோடம் பழச்சாறு”
வரவேற்பு பானமாய்
வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது !
குறிப்பிட்ட நேரத்தின்
ஒரு மணித்தியால
தாமதத்தின் பின்னர்
“CLA-Class mercedes benz மகிழூந்து”
மண்டப வாயிலில் வந்து நின்றது !
பலத்த கரகோஷம்
அரங்கத்தை
அதிரவைத்துக் கொண்டிருந்தது...
“செங்கம்பளம்” விரித்து
அழைத்துவரப்பட்டு
தேக்கு கதிரையில் அமர்த்தப்பட்டார்
தேசிய கவிஞர் !
மரம்....
மனிதனுக்கு கிடைத்த
வரம்....
கவிப்பாடத் தொடங்கினார்...
கைத்தட்டலும்
விசில் சத்தமும்
வானைப் பிளந்துக் கொண்டிருந்தது !
யுகத்தின் மேம்பாட்டை
வரிவரியாய் விதைத்து வைத்திருந்தது
அந்த “யூக்கலிப்டஸ் மரத்தின்”
மீதியாயிருந்த “புதிய வெளியீடு”
“ஒருவர் ஒரு
புத்தகம் வாங்கினாலே
உலகத்தின் விடியல்
உறுதியாக்கப்படும்”
இறுதியாய் சொல்லிவிட்டு
மேடையையில் முழங்கினார்
வெளியீட்டாளர் !
உசுபேற்றப்பட்ட அனைவரும்
ஓடி ஓடி வாங்கினார்கள்....
புத்தகத்தின் விலை
வெறும் 500 மட்டுமே....!
இரண்டாம் பதிப்பு
அடுத்த மாதமே....
பொறுத்துக் கொள்ளுங்கள்
உறுதியாக சொன்னார்
விழா ஏற்பாட்டாளர் !
ஆண்டின் சிறந்த வெளியீடு...
விருது வாங்கியது புத்தகம் !
அரசாங்கத்தால்
விருது விருந்தெல்லாம் வழங்கி
கௌரவிக்கப் பட்டார்
தேசிய கவிஞர் !
அவுஸ்திரேலிய தமிழ்சங்கம்
அழைத்தது அவரை....
தண்ணீரின் தேவைப் போற்றி
தரணியெங்கும் விளங்குமாறு
கவிபாடச் சொல்லி
டாலர்களை கொட்டியது !
பாடினார்...அசத்தினார்....
விழா முடிந்தது
ஓய்வுக்கு ஒருவாரம்
எடுத்துக் கொண்டு
புதிதாய் வாங்கிய
"அப்பிள் தோட்டத்தைப்"
பார்வையிடப் போய்விட்டார்....
ஊரில்
அடுத்த விழாவுக்கு
வாழையும் தென்னையும்
வதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன !
Re: மரங்களும் "மரங்களும்" !
மிகவும் அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|