Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சறிந்து சொன்னீரோ?
Page 1 of 1 • Share
நெஞ்சறிந்து சொன்னீரோ?
மானத்தமிழ் வானத்தெழு ஞானக்கதி ரவனை
கானக்கலை வாணிக்கர வீணைக்கிணை யவனை
நாணத்தனை தானின்றியே வீணிற்பழி யுரைத்த
ஈனத்தமி ழானின்புலை நாவைத்துணித் திடடா!
ஆணென்றவர் அலிஎன்(று)அவர் நாணித்தலை குனிய
ஏனென்றுடன் ஏறென்றெழு வீரக்கலை மகனை
பூனைக்கொரு பிடரிம்மயிர் முளைத்தக்கதை யதுவே
காணிங்கிவர் கனைக்கும்வகை என்றேநகைத் திடடா!
தமிழின்தலை தமிழன்தலை தரணித்தலை மிசையே
நிமிரத்தலை நிமிரும்தளை நிதமும்களை அறுக்க
நிமிரும்தலைத் தமிழின்தலை மகனின்தலை குனிக்க
நிமிரும்தலை எதுவாயினும் துணிக்கத்தலை எடடா!
தமிழுக்குயிர் தமிழுக்குடல் தமிழுக்குறு பொருளை
அமைவாகவே வைத்தேதினம் அணுவோடுதான் கலந்தே
இமையாய்மொழிக் கென்றேநிதம் இமையாவிழி யாகக்
குமைந்தான்தனைக் குரைத்தார்தமை உமிழாவிடில் தகுமோ?
யாரேதமிழ் அறியான்?அட யாரேமொழி தெரியான்?
நேரேதமிழ் மகள்தான்தவம் கிடந்தேஅவ ளடைந்த
சீராய்அவ தரித்தான்தனை இழித்தார்இவர் நெஞ்சைக்
கூறாய்;இரு கூறாய்உடன் பிளவாவிடில் முறையோ?
திக்கற்றவர் திசையற்றவர் துயரற்றொரு வாழ்வு
மிக்குற்றவர் மகிழ்வுற்றிட மனம்வைத்ததில் தினமும்
நெக்குற்றவர் நெகிழ்வுற்றவர் தமைப்போற்றியே காக்கும்
வக்கற்றதோர் தமிழர்க்குவாய்த் திமிருக்கொரு குறையோ?
எழுத்தாளனே இவன்தானென எடுத்தாளவே பிறந்தோன்
மழுவாளென மொழிவாளினை மடமைக்கெதிர் பிடித்தோன்
புலித்தோலினில் நடித்தோரிடை புலியாகவே நடந்தோன்
பழிபேசிடும் தமிழாஅட இவனன்றிவே றெவனே?
இருந்தார்பல எழுத்தாளரே இவன்முன்னமும் இங்கே
விருந்தாய்வகை வகையாய்க்கதை வடித்தார்எனும் போதும்
இருள்வானிலே விண்மீன்களைப் போலேஅவர் இருந்தார்
ஒருசூரியன் எனவேஒரு ஜெயகாந்தனே எழுந்தான்!
"என்தாய்மொழி என்தாய்மொழி" என்றேபெரு மிதமாய்
விண்தாவியே குதித்தேநிதம் பறைகொட்டிடும் தமிழா!
முன்வைக்கிறேன் ஒருகேள்வியை இதற்குப்பதில் கூறு
மண்மேலொரு மொழிதான்அடை கின்றப்புகழ் எதனால்?
லிபியோ?வெறும் லிபிதான்எனில் எதில்தான்இலை லிபியே?
லிபியால்ஒரு மொழிதான்புகழ் பெறுமோ?கதி யுறுமோ?
தபம்போலவோர் எழுத்தாளனே உருவாக்கிடும் படைப்பே
சபைஏறியே புவிமேல்மொழி நிலைக்கும்வகை செய்யும்!
"மதியார்ந்ததோர் எழுத்தாள(ர்)எம் மொழிதன்னிலும் பிறப்பார்
அதனாலெவர் மொழியாயினும் அவர்மாண்பினைப் புகழ்வோம்"
இதைச்சொன்னவன் இதம்சொன்னவன் இவனோதமிழ்த் துரோகி?
கதைப்பேசியே கழுத்தறுப்பவர் அவரேதகும் உமக்கு!
வாழும்வகை கூறித்தினம் வாடாவகை தந்தோர்
வாழும்வரை மட்டும்மிலை செத்தாலுமே அந்த
மேலோரவர் அருமைச்சிறி தளவேனு(ம்)நாம் உணரோம்!
காலம்பதில் சொல்லும்;ஜெய காந்தன்பெயர் வாழும்!
(சம்ஸ்கிருத மொழியை உயர்வாகப் பேசியதற்காக "தமிழ் தெரியாதவன்" என்றும் "தமிழ்த் துரோகி" என்றும் தூற்றப்பட்ட எனது அபிமான எழுத்தாளன் ஜெயகாந்தனுக்கு...)
-------------ரௌத்திரன்
கானக்கலை வாணிக்கர வீணைக்கிணை யவனை
நாணத்தனை தானின்றியே வீணிற்பழி யுரைத்த
ஈனத்தமி ழானின்புலை நாவைத்துணித் திடடா!
ஆணென்றவர் அலிஎன்(று)அவர் நாணித்தலை குனிய
ஏனென்றுடன் ஏறென்றெழு வீரக்கலை மகனை
பூனைக்கொரு பிடரிம்மயிர் முளைத்தக்கதை யதுவே
காணிங்கிவர் கனைக்கும்வகை என்றேநகைத் திடடா!
தமிழின்தலை தமிழன்தலை தரணித்தலை மிசையே
நிமிரத்தலை நிமிரும்தளை நிதமும்களை அறுக்க
நிமிரும்தலைத் தமிழின்தலை மகனின்தலை குனிக்க
நிமிரும்தலை எதுவாயினும் துணிக்கத்தலை எடடா!
தமிழுக்குயிர் தமிழுக்குடல் தமிழுக்குறு பொருளை
அமைவாகவே வைத்தேதினம் அணுவோடுதான் கலந்தே
இமையாய்மொழிக் கென்றேநிதம் இமையாவிழி யாகக்
குமைந்தான்தனைக் குரைத்தார்தமை உமிழாவிடில் தகுமோ?
யாரேதமிழ் அறியான்?அட யாரேமொழி தெரியான்?
நேரேதமிழ் மகள்தான்தவம் கிடந்தேஅவ ளடைந்த
சீராய்அவ தரித்தான்தனை இழித்தார்இவர் நெஞ்சைக்
கூறாய்;இரு கூறாய்உடன் பிளவாவிடில் முறையோ?
திக்கற்றவர் திசையற்றவர் துயரற்றொரு வாழ்வு
மிக்குற்றவர் மகிழ்வுற்றிட மனம்வைத்ததில் தினமும்
நெக்குற்றவர் நெகிழ்வுற்றவர் தமைப்போற்றியே காக்கும்
வக்கற்றதோர் தமிழர்க்குவாய்த் திமிருக்கொரு குறையோ?
எழுத்தாளனே இவன்தானென எடுத்தாளவே பிறந்தோன்
மழுவாளென மொழிவாளினை மடமைக்கெதிர் பிடித்தோன்
புலித்தோலினில் நடித்தோரிடை புலியாகவே நடந்தோன்
பழிபேசிடும் தமிழாஅட இவனன்றிவே றெவனே?
இருந்தார்பல எழுத்தாளரே இவன்முன்னமும் இங்கே
விருந்தாய்வகை வகையாய்க்கதை வடித்தார்எனும் போதும்
இருள்வானிலே விண்மீன்களைப் போலேஅவர் இருந்தார்
ஒருசூரியன் எனவேஒரு ஜெயகாந்தனே எழுந்தான்!
"என்தாய்மொழி என்தாய்மொழி" என்றேபெரு மிதமாய்
விண்தாவியே குதித்தேநிதம் பறைகொட்டிடும் தமிழா!
முன்வைக்கிறேன் ஒருகேள்வியை இதற்குப்பதில் கூறு
மண்மேலொரு மொழிதான்அடை கின்றப்புகழ் எதனால்?
லிபியோ?வெறும் லிபிதான்எனில் எதில்தான்இலை லிபியே?
லிபியால்ஒரு மொழிதான்புகழ் பெறுமோ?கதி யுறுமோ?
தபம்போலவோர் எழுத்தாளனே உருவாக்கிடும் படைப்பே
சபைஏறியே புவிமேல்மொழி நிலைக்கும்வகை செய்யும்!
"மதியார்ந்ததோர் எழுத்தாள(ர்)எம் மொழிதன்னிலும் பிறப்பார்
அதனாலெவர் மொழியாயினும் அவர்மாண்பினைப் புகழ்வோம்"
இதைச்சொன்னவன் இதம்சொன்னவன் இவனோதமிழ்த் துரோகி?
கதைப்பேசியே கழுத்தறுப்பவர் அவரேதகும் உமக்கு!
வாழும்வகை கூறித்தினம் வாடாவகை தந்தோர்
வாழும்வரை மட்டும்மிலை செத்தாலுமே அந்த
மேலோரவர் அருமைச்சிறி தளவேனு(ம்)நாம் உணரோம்!
காலம்பதில் சொல்லும்;ஜெய காந்தன்பெயர் வாழும்!
(சம்ஸ்கிருத மொழியை உயர்வாகப் பேசியதற்காக "தமிழ் தெரியாதவன்" என்றும் "தமிழ்த் துரோகி" என்றும் தூற்றப்பட்ட எனது அபிமான எழுத்தாளன் ஜெயகாந்தனுக்கு...)
-------------ரௌத்திரன்
Re: நெஞ்சறிந்து சொன்னீரோ?
என்னே புலமை!!!
உங்களை பாராட்டும் தகுதி எனக்கில்லை
மன்னியுங்கள் !
ரசித்தேன் உங்கள் கவிதையை!
உங்களை பாராட்டும் தகுதி எனக்கில்லை
மன்னியுங்கள் !
ரசித்தேன் உங்கள் கவிதையை!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நெஞ்சறிந்து சொன்னீரோ?
பாராட்ட தகுதி வேண்டுமென்று நான் நினைப்பதில்லை. ரசனையும் புரிதலும் போதுமானது. பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே! ---------ரௌத்திரன்
Re: நெஞ்சறிந்து சொன்னீரோ?
அருமை அருமை கவியேவாழும்வகை கூறித்தினம் வாடாவகை தந்தோர்
வாழும்வரை மட்டும்மிலை செத்தாலுமே அந்த
மேலோரவர் அருமைச்சிறி தளவேனு(ம்)நாம் உணரோம்!
காலம்பதில் சொல்லும்;ஜெய காந்தன்பெயர் வாழும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|