தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓ கவிஞர்காள்!

View previous topic View next topic Go down

ஓ கவிஞர்காள்! Empty ஓ கவிஞர்காள்!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 10:31 am

அழுகல் பிணங்களை அர்ச்சனை செய்ததில்
அங்கம் வளர்த்திடும் வாழ்க்கை-அதிலே
அனுதினம் பெருகுது வேட்கை-இங்கு
மழுவைக் கைகளிற் கொண்டிருந் தும்பலர்
மழித்துக் கொண்டிருக்கும் செய்கை-அது
மானம் இழந்தவர்தம் கொள்கை!

காசு கொடுப்பவர் கட்டிலில் விழுகின்ற
தாசி குலத்தவர் வர்க்கம்-அவர்க்குத்
தூர மிலைஇவர் பக்கம்-எலும்பு
வீசி யெறிபவர் யாரா யிருப்பினும்
வாலைக் குழைத்து நிற்கும்; அந்த
நாய்களோ டென்ன தர்க்கம்?

கொள்கை தவறிய கவிஞனின் பேனா
சமுதாயத் தலைமாட்டில் கொள்ளி-அதனால்
சாத்திய மிலைவிடி வெள்ளி-மெத்தப்
பல்கி வளரினும் பூவின மாயினும்
பூஜைக் குதவாது எருக்கு-அவை
பூமியில் எதற்கினி நறுக்கு!

சீறிப் பாயுமோர் சீர்வலி குன்றினும்
வளைந்து கொடுக்காது அங்கம்-நரியின்
வாலைப் பிடிக்காது சிங்கம்-நெஞ்சில்
ஈர முள்ளவர் வீர முள்ளவர்;இதைத்
தேறி விட்டாலே கொஞ்சம்-சிங்களத்
தீவுக் கழிவன்றோ மிஞ்சும்?

மானம் பெரிதெனும் மறத்தமி ழச்சியின்
மார்பில் பாலினைப் பருகி-வளர்ந்த
மரபில் வந்தவர் உருகி-வருவீர்!
ஈனக் குலத்தவர் ஈரக் குலையினை
அறுக்கப் படையெனப் பெருகி-போதும்
அமைதி காத்தது மருகி!

அங்கம் முழுவதும் ஆணவ மாகிய
சிங்களர் தலைகளைக் கொய்வோம்-அவர்
செந்நீர்க் கடலினிற் பெய்வோம்-அதில்
வங்கக் கடலெனும் பெயர்மெல மாறிச்
செங்கட லானது என்று-நாளைச்
சரித்திரம் பேசட்டும் நின்று!

ஒன்று சேருவோம் நன்று சேருவோம்
இன்று சேருவோம் வாரீர்-என்
இன்தமிழ்க் கவிகளே வாரீர்-எங்கும்
மன்று ஏறுவோம் நின்று சீறுவோம்
கன்று போலவே வாரீர்-இமயக்
குன்று போலெழுந்து வாரீர்!

கூட்டுப் புழுவென வீட்டி லடங்கிய
நாட்டு மக்களைக் கூட்டுவோம்-புரட்சி
நாட்டக் கவிதைகள் தீட்டுவோம்-நர
வேட்டை யாடநம் எழுது கோல்களை
வில்லைப் போல்வளைத்துக் காட்டுவோம்-தமிழர்
வீரம் தனைநிலை நாட்டுவோம்!

உதிக்கும் சூரியன் உதிக்க நினைத்தால்
எட்டுத் திசைகளும் கிழக்கு-பின்
விட்டு விலகிடும் இருட்டு-இங்கு
கொதிக்கும் உள்ளங்கள் கூட்டணி யாகக்
கோத்து நின்றாலே வெறுங்கை-அதில்
வேர்த்து விழாதோ இலங்கை?

----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by kanmani singh Wed Apr 29, 2015 11:50 am

சிறந்த உத்வேகம் தரும் கவிதை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by thamiliniyan Wed Apr 29, 2015 11:56 am

ஈழத்தமிழனின் உணர்வுகள்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 1:44 pm

இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! -------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by முரளிராஜா Wed Apr 29, 2015 4:20 pm

தங்கள் கவிதைநடை என்னை மிக கவர்கிறது ரௌத்திரன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by thamiliniyan Wed Apr 29, 2015 4:28 pm

உண்மை தான் சகல் நடைகளும் கைவந்த வித்தகர் இவர்!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 29, 2015 7:14 pm

அது தனி நாடு என்று தமிழர்கள் நினைக்கிறார்கள்... என்ன செய்ய? அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் அரசியல் செய்கிறார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 8:03 pm

இலங்கை என்பது தனிநாடாக இருந்துவிட்டுப் போகட்டும். சிங்களர்க்கும் தமிழர்க்குமான சண்டை உள்நாட்டுப் பிரச்சினை என்று கூட சொல்லட்டும். ஆனால் ஒன்று... மனித உயிர்களை இரக்கமற்ற முறையிலே வதைப்பதைக் கண்டித்துக் குரல்கொடுக்க உலகின் எந்த நாட்டு மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை "இறையாண்மை" என்ற பெயரில் பறிக்கவும் முடக்கவும் நினைக்கும் எந்த நாடும் மனித நேயத்திற்கு எதிரான நாடு என்பதிலே சந்தேகமில்லை. என்வரை இலங்கைத் தமிழன் என்பதல்ல பொத்தம் பொதுவாக தமிழனுக்கு முதல் எதிரி உலகில் வேறு எந்த நாடும் இல்லை. அதன் பெயர் "இந்தியா". அது தமிழக மீனவர் பிரச்சினையிலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.தமிழன்தான் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்கிறானே ஒழிய இந்தியா தமிழனை அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழனை இந்தியாவே ஏளனமாகப் பார்க்கும் போது அடுத்தவன் மட்டும் எப்படி மதித்துவிடுவான்? ----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

ஓ கவிஞர்காள்! Empty Re: ஓ கவிஞர்காள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum