Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
Page 1 of 1 • Share
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)
அமைதியிற் படுக்கை இட்டு
ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
கற்பனை செய்தி ருக்க,
குன்றினில் பூத்த பூவில்
குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
நலமுடன் ரசித்தி ருக்க,
செல்லாத இடங்க ளெல்லாம்
சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
சுவையினுக் கருகு வந்தே,
நெற்றியில் முத்த மொன்று
நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
சூழ்நிலை அறிந்து ஏக,
அந்தியின் சிவப்பு முற்றும்
அணங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
வெண்ணிலா எங்கு தூங்க?
ஆனதோர் நேரம் மட்டும்
அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
காலையில் கண்கள் பூத்து,
களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
அறிந்திலேன் அதனை இன்னும்!
வாட்டுமோர் தனிமை யென்னும்
வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
நிம்மதி எனக்கு ஏது?
அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
பழரசம் தொட்டேன்; ஆமாம்!
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
இனிதுடன் நிரப்பி வாரீர்!
மாதவன் உருவம் எண்ணி
மனத்துளே அற்றை நாளில்
மாதவம் புரிந்த தாலே
மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
எழிலுடன் உதித்தான் கண்டீர்!
தோற்றத்தில் மாறி னாலும்
தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
அழுவதில் மாற்ற மில்லை!
சிதையினில் நெருப்பு மூட்டச்
செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
அவனியீர் அறிவி ராக!
ஒற்றுமை அதிகம் உண்டு
ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
பல்கலைப் படிப்பு மில்லை!
தேறாத மானி டத்தின்
தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
மென்தமிழ் நூற்ச மைப்பேன்!
திரிகளைக் கருக விட்டுத்
தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
புன்னகை புரிந்தி ருப்பேன்!
சரித்திரம் படைக்க வந்தேன்!
சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
செந்தமிழ் வடிவந் தன்னில்!
சாகாத காவி யங்கள்
சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
எக்காள மிட்டி ருப்பேன்!
--------------ரௌத்திரன்
அமைதியிற் படுக்கை இட்டு
ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
கற்பனை செய்தி ருக்க,
குன்றினில் பூத்த பூவில்
குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
நலமுடன் ரசித்தி ருக்க,
செல்லாத இடங்க ளெல்லாம்
சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
சுவையினுக் கருகு வந்தே,
நெற்றியில் முத்த மொன்று
நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
சூழ்நிலை அறிந்து ஏக,
அந்தியின் சிவப்பு முற்றும்
அணங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
வெண்ணிலா எங்கு தூங்க?
ஆனதோர் நேரம் மட்டும்
அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
காலையில் கண்கள் பூத்து,
களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
அறிந்திலேன் அதனை இன்னும்!
வாட்டுமோர் தனிமை யென்னும்
வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
நிம்மதி எனக்கு ஏது?
அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
பழரசம் தொட்டேன்; ஆமாம்!
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
இனிதுடன் நிரப்பி வாரீர்!
மாதவன் உருவம் எண்ணி
மனத்துளே அற்றை நாளில்
மாதவம் புரிந்த தாலே
மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
எழிலுடன் உதித்தான் கண்டீர்!
தோற்றத்தில் மாறி னாலும்
தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
அழுவதில் மாற்ற மில்லை!
சிதையினில் நெருப்பு மூட்டச்
செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
அவனியீர் அறிவி ராக!
ஒற்றுமை அதிகம் உண்டு
ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
பல்கலைப் படிப்பு மில்லை!
தேறாத மானி டத்தின்
தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
மென்தமிழ் நூற்ச மைப்பேன்!
திரிகளைக் கருக விட்டுத்
தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
புன்னகை புரிந்தி ருப்பேன்!
சரித்திரம் படைக்க வந்தேன்!
சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
செந்தமிழ் வடிவந் தன்னில்!
சாகாத காவி யங்கள்
சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
எக்காள மிட்டி ருப்பேன்!
--------------ரௌத்திரன்
Re: அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
ரௌத்திரன்!
என்னையா
நீயெல்லாம் கவிஞனா??
என்று உங்கள்
கவிதைகள் என்னை
நாணித்
தலை குனிய
வைக்கிறது!
என்னையா
நீயெல்லாம் கவிஞனா??
என்று உங்கள்
கவிதைகள் என்னை
நாணித்
தலை குனிய
வைக்கிறது!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
என்ன நண்பரே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. என்னைவிடச் சிறப்பான கவிஞர்கள் இருப்பார்கள். ஏன் முயன்றால் நீங்களே கூட என்னினும் சிறப்பாக எழுதலாம்.
எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க
[You must be registered and logged in to see this link.] இங்கே வாருங்கள்!
----------ரௌத்திரன்
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. என்னைவிடச் சிறப்பான கவிஞர்கள் இருப்பார்கள். ஏன் முயன்றால் நீங்களே கூட என்னினும் சிறப்பாக எழுதலாம்.
எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க
[You must be registered and logged in to see this link.] இங்கே வாருங்கள்!
----------ரௌத்திரன்
Re: அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
thamiliniyan wrote:ரௌத்திரன்!
என்னையா
நீயெல்லாம் கவிஞனா??
என்று உங்கள்
கவிதைகள் என்னை
நாணித்
தலை குனிய
வைக்கிறது!
வெற்று வார்த்தையல்ல... உண்மையே ரௌத்திரன் அவர்களே... தங்களை பல மாதங்களாகக் காணவில்லை...
திரைப்படத்தில் பாடல் எழுத முனைந்திருப்பதாகச் சொன்னீர்...
கை கூடியதா?
மீண்டும் தங்கள் கவிதைகளைக் காண்பதில் மகிழ்கிறேன்.
Re: அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
அடடா என்ன ஒரு கவிதை.? உங்கள் எண்ணத்தில் அந்த சரஸ்வதி தேவியே குடிகொண்டு இருக்கிறாள் என நினைக்க தோன்றுகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அந்தக் கோப்பையை நிரப்புங்கள்!
உயர்ந்த பாராட்டுக்குத் தாழ்ந்தவனின் நன்றிகள் தோழர்! --------ரௌத்திரன்
Similar topics
» உங்களை நிரப்புங்கள்…
» அது அந்தக் காலம்!
» அந்தக் காலத்தில் தீபாவளி...
» ஆம்… அந்தக் காலம் நன்றாக இருந்தது !
» "பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார்,''
» அது அந்தக் காலம்!
» அந்தக் காலத்தில் தீபாவளி...
» ஆம்… அந்தக் காலம் நன்றாக இருந்தது !
» "பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார்,''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|