Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்று விடியும் எமக்கு?
Page 1 of 1 • Share
என்று விடியும் எமக்கு?
எட்டுத் திசையிருந்தும்
எம்மைச் சூழ்ந்தவிருள்
தொட்டுத் துடைப்பதற்கு
திசையொன் றிங்கிலையே
குருடர்களும் சுகமாகக்
கண்ணுறங்கும் பூமியிலே
ஒருநாள் ஒருநொடி
யாமுறங்க வழியிலையே!
பாடையைக் கண்முன்னே
பார்த்துவிட்ட பிறகு
கூடி இமையிரண்டும்
குலவுவதும் எங்ஙனமே?
எடுக்கும் பசியுணர்வும்
எதிரிகள் நினைவினிலே
பிடிக்கும் கிலியதனிற்
பறந்தோடிப் போகிறதே!
பருவக் கனவுகளில்
பாரிலுள இளைஞரெலாம்
துருவங்கள் தோறும்
துள்ளித் திரிந்திருக்க
மரணக் கனவன்றி
மற்றேதும் அறியாராய்
மருண்டெம் மக்களெலாம்
மண்ணிலே உலவுகிறார்!
முத்தமிழ்க் குலத்திலிம்
மண்ணில் பிறப்பதற்கு
அத்தன் அடிதொழுது
அருந்தவம் இயற்றிலமே!
இனம்பார்க்கும் கண்களிலே
இரக்கம் சிறிதிருந்தால்
பிணம்பார்க்கும் பேராசை
பிறந்திருக்க வாய்ப்பிலையே!
கற்பூரத் தீகாணும்
கடவுளர் கண்களுக்கெம்
சடலத் தீகாணும்
சக்தி தானிலையே!
ஒருநாளில் சாவென்று
எல்லோர்க்கும் எழுதியவன்
அன்றாடம் எமக்கென்று
எழுதியதை என்சொல்ல?
நாற்காலி ஆசையிலே
நாற்றிசை எரியவிட்டுப்
பார்க்கின்ற பெரியோரின்
புத்தியினை என்சொல்ல?
புத்தம் சரணமென்றே
பொழுதெலாம் கூறிவிட்டு
ரத்தம் கொண்டுவாய்
கொப்புளிப்ப தென்சொல்ல?
புத்தன் கோவிலிலே
துலங்கும் மணியதனை
யுத்தக் களச்சங்காய்
மாற்றிய தென்சொல்ல?
அகதிகளாய் இந்த
அவனியில் வாழ்வதற்கும்
தகுதிகள் அற்றவராய்த்
தவிப்பதை என்சொல்ல?
நீதியிலா சபைகளே
நானிலத்தில் நிறைந்ததனால்
நாதியிலா தோரினம்
நிற்பதை என்சொல்ல?
---------ரௌத்திரன்
எம்மைச் சூழ்ந்தவிருள்
தொட்டுத் துடைப்பதற்கு
திசையொன் றிங்கிலையே
குருடர்களும் சுகமாகக்
கண்ணுறங்கும் பூமியிலே
ஒருநாள் ஒருநொடி
யாமுறங்க வழியிலையே!
பாடையைக் கண்முன்னே
பார்த்துவிட்ட பிறகு
கூடி இமையிரண்டும்
குலவுவதும் எங்ஙனமே?
எடுக்கும் பசியுணர்வும்
எதிரிகள் நினைவினிலே
பிடிக்கும் கிலியதனிற்
பறந்தோடிப் போகிறதே!
பருவக் கனவுகளில்
பாரிலுள இளைஞரெலாம்
துருவங்கள் தோறும்
துள்ளித் திரிந்திருக்க
மரணக் கனவன்றி
மற்றேதும் அறியாராய்
மருண்டெம் மக்களெலாம்
மண்ணிலே உலவுகிறார்!
முத்தமிழ்க் குலத்திலிம்
மண்ணில் பிறப்பதற்கு
அத்தன் அடிதொழுது
அருந்தவம் இயற்றிலமே!
இனம்பார்க்கும் கண்களிலே
இரக்கம் சிறிதிருந்தால்
பிணம்பார்க்கும் பேராசை
பிறந்திருக்க வாய்ப்பிலையே!
கற்பூரத் தீகாணும்
கடவுளர் கண்களுக்கெம்
சடலத் தீகாணும்
சக்தி தானிலையே!
ஒருநாளில் சாவென்று
எல்லோர்க்கும் எழுதியவன்
அன்றாடம் எமக்கென்று
எழுதியதை என்சொல்ல?
நாற்காலி ஆசையிலே
நாற்றிசை எரியவிட்டுப்
பார்க்கின்ற பெரியோரின்
புத்தியினை என்சொல்ல?
புத்தம் சரணமென்றே
பொழுதெலாம் கூறிவிட்டு
ரத்தம் கொண்டுவாய்
கொப்புளிப்ப தென்சொல்ல?
புத்தன் கோவிலிலே
துலங்கும் மணியதனை
யுத்தக் களச்சங்காய்
மாற்றிய தென்சொல்ல?
அகதிகளாய் இந்த
அவனியில் வாழ்வதற்கும்
தகுதிகள் அற்றவராய்த்
தவிப்பதை என்சொல்ல?
நீதியிலா சபைகளே
நானிலத்தில் நிறைந்ததனால்
நாதியிலா தோரினம்
நிற்பதை என்சொல்ல?
---------ரௌத்திரன்
Re: என்று விடியும் எமக்கு?
நாம் சொல்ல முடியா வரிகளை சொல்லும் வரிகள் !
நன்றி ரௌத்திரன்
நன்றி ரௌத்திரன்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» எமக்கு தேவையானது....?
» விடியும் வரை சிரியுங்க !!!
» நாளை நிச்சயம் விடியும்
» என்று ஏன் புரியவில்லை ...???
» திடீர் என்று ஒரு ...
» விடியும் வரை சிரியுங்க !!!
» நாளை நிச்சயம் விடியும்
» என்று ஏன் புரியவில்லை ...???
» திடீர் என்று ஒரு ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|