Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
அவர்களையும் வாழ விடுங்கள்!
Page 1 of 1 • Share
அவர்களையும் வாழ விடுங்கள்!
கருவில் நித்தம் சுமந்தவளும்
கண்போல் எண்ணி வளர்த்தவனும்
உருவில் நேரும் மாற்றத்தால்
உள்ளம் வெதும்பிப் பின்நாளில்
தெருவில் வீசி எறிகின்றார்
தவறு யார்மேல் என்பதனை
அறிவில் வைத்துச் சிந்திக்க
அவரும் ஏனோ மறந்திட்டார்!
இந்த முகத்தைப் பெறுவதற்கும்
இந்த நிறத்தைப் பெறுவதற்கும்
இந்தப் "பாலில்" பிறப்பதற்கும்
இந்த நாளில் பிறப்பதற்கும்
விந்தில் தோன்றும் காலத்தே
வரமாய்க் கேட்டு ஒருவருமே
வந்து பிறப்ப தில்லையிது
வையம் தன்னில் பொதுவேகாண்!
எந்த வகையில் குறைந்திட்டார்?
எதனில் இங்கு இறங்கிட்டார்?
மந்த புத்தி கொண்டவரே!
மதியும் மெத்தக் கொழுத்தவர்தான்!
விந்தை தாமும் புரிந்திடுவார்
விண்ணும் மண்ணும் அளந்திடுவார்!
சந்தைப் பொருளோ மனிதர்கள்?
ரகத்தைப் பார்த்துப் பிரிப்பதற்கு?
மேகம் கருப்பு என்பதனால்
மழையை வேண்டாம் என்பீரோ?
காகச் சிறகு நள்ளிரவில்
கனிந்து நிற்கும் பிறையதனை
மோக நிலவு தானுற்ற
ஊன மென்று வெறுப்பீரோ?
தேகச் சிறப்பு ஏதுக்கு?
மதியும் மனதும் தான்பெரிது!
ஏற்றம் இறக்கம் பேசாதீர்
எவரும் இங்கு ஒன்றேதான்!
காற்றில் தவழும் ஒருகொடியில்
கண்வி ழிக்கும் பூக்களிலே
நாற்ற பேதம் உண்டென்று
நாசி கண்ட துண்டோகாண்!
சாற்றிச் சாற்றிப் பேதங்கள்
சரிந்த தெல்லாம் போதாதோ?
ஆணும் பெண்ணும் சரிபாகம்
ஆன சிவனை இறைஎன்றால்
நானும் இவரை இறைஎன்பேன்!
நாய்க்குப் பிறந்தோர் குரைக்கட்டும்!
ஆணும் பெண்ணும் கலப்பானோர்
அலிஎன் றினியும் உரைப்போர்கள்
தாணு வான ஆதிசிவன்
தன்னை முதலில் உரைக்கட்டும்!
-------------ரௌத்திரன்
கண்போல் எண்ணி வளர்த்தவனும்
உருவில் நேரும் மாற்றத்தால்
உள்ளம் வெதும்பிப் பின்நாளில்
தெருவில் வீசி எறிகின்றார்
தவறு யார்மேல் என்பதனை
அறிவில் வைத்துச் சிந்திக்க
அவரும் ஏனோ மறந்திட்டார்!
இந்த முகத்தைப் பெறுவதற்கும்
இந்த நிறத்தைப் பெறுவதற்கும்
இந்தப் "பாலில்" பிறப்பதற்கும்
இந்த நாளில் பிறப்பதற்கும்
விந்தில் தோன்றும் காலத்தே
வரமாய்க் கேட்டு ஒருவருமே
வந்து பிறப்ப தில்லையிது
வையம் தன்னில் பொதுவேகாண்!
எந்த வகையில் குறைந்திட்டார்?
எதனில் இங்கு இறங்கிட்டார்?
மந்த புத்தி கொண்டவரே!
மதியும் மெத்தக் கொழுத்தவர்தான்!
விந்தை தாமும் புரிந்திடுவார்
விண்ணும் மண்ணும் அளந்திடுவார்!
சந்தைப் பொருளோ மனிதர்கள்?
ரகத்தைப் பார்த்துப் பிரிப்பதற்கு?
மேகம் கருப்பு என்பதனால்
மழையை வேண்டாம் என்பீரோ?
காகச் சிறகு நள்ளிரவில்
கனிந்து நிற்கும் பிறையதனை
மோக நிலவு தானுற்ற
ஊன மென்று வெறுப்பீரோ?
தேகச் சிறப்பு ஏதுக்கு?
மதியும் மனதும் தான்பெரிது!
ஏற்றம் இறக்கம் பேசாதீர்
எவரும் இங்கு ஒன்றேதான்!
காற்றில் தவழும் ஒருகொடியில்
கண்வி ழிக்கும் பூக்களிலே
நாற்ற பேதம் உண்டென்று
நாசி கண்ட துண்டோகாண்!
சாற்றிச் சாற்றிப் பேதங்கள்
சரிந்த தெல்லாம் போதாதோ?
ஆணும் பெண்ணும் சரிபாகம்
ஆன சிவனை இறைஎன்றால்
நானும் இவரை இறைஎன்பேன்!
நாய்க்குப் பிறந்தோர் குரைக்கட்டும்!
ஆணும் பெண்ணும் கலப்பானோர்
அலிஎன் றினியும் உரைப்போர்கள்
தாணு வான ஆதிசிவன்
தன்னை முதலில் உரைக்கட்டும்!
-------------ரௌத்திரன்
Re: அவர்களையும் வாழ விடுங்கள்!
திருநங்கைகளுக்கோர்
அங்கீகாரம் !பாராட்டுக்கள்
அங்கீகாரம் !பாராட்டுக்கள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: அவர்களையும் வாழ விடுங்கள்!
மிக மிக நேர்த்தியான கவிதை.
கவிதை பகிர்வுக்கு நன்றி!
கவிதை பகிர்வுக்கு நன்றி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வழி விடுங்கள்...
» தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
» தலைவா என்னை மன்னித்து விடுங்கள்
» குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்
» பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
» தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்...
» தலைவா என்னை மன்னித்து விடுங்கள்
» குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்
» பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|