Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தெருவில் எரிந்த கற்பூரம்!
Page 1 of 1 • Share
தெருவில் எரிந்த கற்பூரம்!
இனம்படு பாட்டை எண்ணி
இமைபடு உறக்கம் கெட்டு
தினம்படு பாட்டி னாலே
தன்னையே எரித்துக் கொண்டான்!
வனம்படு முல்லை யொன்று
வீழ்ந்தது மரணக் காட்டில்!
மனம்படு பாட்டை எந்த
மொழியினால் உரைப்பேன் அம்மா!
ஈழமே சாக்கா டாகி
இனமுமே அழிவிற் பட்ட
ஓலமே எடுத்து வந்து
உரைத்திடக் கடல லைகள்
நாளமே துடிது டித்து
நல்"முத்துக் குமரன்" என்பான்
நாளுமே பட்ட துன்போர்
நாளிலே முடித்துக் கொண்டான்!
தன்னுடல் கருக்கும் தீயைத்
தமிழர்க்கோர் தீபம் என்றான்!
தன்னுடல் கொரிக்கும் தீயைத்
தமிழர்க்கோர் விடியல் என்றான்!
தன்னுடல் எரிக்கும் தீயைப்
புரட்சியின் தீபம் என்றான்!
என்னுடல் நடுங்கு தம்மா
எவனவன் இவனுக் கீடு?
உரிமைகள் இருந்தும் கூட
உவப்புறு தமிழர் என்றும்
பிரிவினை பேச வில்லை
பிரிக்குமோர் நினைப்பும் இல்லை!
ஒருமையில் நெஞ்சம் வைத்து
ஒற்றுமை காக்க நின்றும்
சிறுமையில் பிறந்து வந்த
சிங்களர் மறுத்தார்; ஏனும்
சிங்கள இனத்தை நாங்கள்
சிதைத்திட நினைத்தோ மில்லை!
"எங்களுக் கென்றோர் தேசம்"
அதையுமே ஏற்றா ரில்லை!
பங்கிடா உரிமை யாலே
புரட்சிகள் வெடிக்கும் என்ற
மங்கிடா உண்மை தன்னை
மடையர்க்குப் புரிய வைப்போம்!
எரிந்தவா "முத்து"! உன்போல்
எவருமே எரிதல் வேண்டாம்!
எரிந்தது போதும்; ஆமாம்
வாழ்வொடு வயிறும் இங்கே!
புரிந்துமே தியாகம் கோடி
புன்மதி அசையா தென்றால்
எரிவதில் லாப மில்லை
எரிப்பது ஒன்றே நீதி!
(தமிழினத்திற்காக தீக்குளித்த தோழர் முத்துக்குமாருக்கு ஈது சமர்ப்பணம்)
------------ரௌத்திரன்
இமைபடு உறக்கம் கெட்டு
தினம்படு பாட்டி னாலே
தன்னையே எரித்துக் கொண்டான்!
வனம்படு முல்லை யொன்று
வீழ்ந்தது மரணக் காட்டில்!
மனம்படு பாட்டை எந்த
மொழியினால் உரைப்பேன் அம்மா!
ஈழமே சாக்கா டாகி
இனமுமே அழிவிற் பட்ட
ஓலமே எடுத்து வந்து
உரைத்திடக் கடல லைகள்
நாளமே துடிது டித்து
நல்"முத்துக் குமரன்" என்பான்
நாளுமே பட்ட துன்போர்
நாளிலே முடித்துக் கொண்டான்!
தன்னுடல் கருக்கும் தீயைத்
தமிழர்க்கோர் தீபம் என்றான்!
தன்னுடல் கொரிக்கும் தீயைத்
தமிழர்க்கோர் விடியல் என்றான்!
தன்னுடல் எரிக்கும் தீயைப்
புரட்சியின் தீபம் என்றான்!
என்னுடல் நடுங்கு தம்மா
எவனவன் இவனுக் கீடு?
உரிமைகள் இருந்தும் கூட
உவப்புறு தமிழர் என்றும்
பிரிவினை பேச வில்லை
பிரிக்குமோர் நினைப்பும் இல்லை!
ஒருமையில் நெஞ்சம் வைத்து
ஒற்றுமை காக்க நின்றும்
சிறுமையில் பிறந்து வந்த
சிங்களர் மறுத்தார்; ஏனும்
சிங்கள இனத்தை நாங்கள்
சிதைத்திட நினைத்தோ மில்லை!
"எங்களுக் கென்றோர் தேசம்"
அதையுமே ஏற்றா ரில்லை!
பங்கிடா உரிமை யாலே
புரட்சிகள் வெடிக்கும் என்ற
மங்கிடா உண்மை தன்னை
மடையர்க்குப் புரிய வைப்போம்!
எரிந்தவா "முத்து"! உன்போல்
எவருமே எரிதல் வேண்டாம்!
எரிந்தது போதும்; ஆமாம்
வாழ்வொடு வயிறும் இங்கே!
புரிந்துமே தியாகம் கோடி
புன்மதி அசையா தென்றால்
எரிவதில் லாப மில்லை
எரிப்பது ஒன்றே நீதி!
(தமிழினத்திற்காக தீக்குளித்த தோழர் முத்துக்குமாருக்கு ஈது சமர்ப்பணம்)
------------ரௌத்திரன்
Re: தெருவில் எரிந்த கற்பூரம்!
சரியாய் சொன்னீர் ரௌத்திரன்சிங்கள இனத்தை நாங்கள்
சிதைத்திட நினைத்தோ மில்லை!
"எங்களுக் கென்றோர் தேசம்"
அதையுமே ஏற்றா ரில்லை!
பங்கிடா உரிமை யாலே
புரட்சிகள் வெடிக்கும் என்ற
மங்கிடா உண்மை தன்னை
மடையர்க்குப் புரிய வைப்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|