Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
என் அன்புக்குரியவளே!
Page 1 of 1 • Share
என் அன்புக்குரியவளே!
அன்புக்குரியவளே!
இதோ வந்து விட்டேன்!
என்னை
வாசம் திருடிச் சென்ற
வாடைக் காற்றென்று
வசை பாடியவளே!
இதோ வந்துவிட்டேன்!
நம்
நேச நதிக்குக்
கரைகளே அணைகளாகி விடுமோ என்று
கண்கள் கலங்கியவளே!
இதோ வந்துவிட்டேன்!
எங்கே
அகத்தில் தேக்கி வைத்திருக்கும்
ஆசையெல்லாம் திரட்டி
ஒருமுறை என் பெயரை உச்சரி
எனக்கு மோட்ஷம் கிடைக்கட்டும்.....
வெள்ளை என்பது சமாதானம்
கருப்பு என்பது போராகும்
இரண்டையும் கண்களில் காட்டி-என்
இளமையை வதைப்பவளே!
எங்கே
ஒருமுறை என்னை
ஓரக்கண்ணால் பார்
என் உயிரில் காய்ச்சல் அடிக்கட்டும்.....
அடி பைத்தியமே
எது நம்மைப் பிரித்துவிட முடியும்?
மேகம் உரசியா
நிலவு தேய்ந்துவிடும்?
கால் நனைத்தா
கடல் வற்றிவிடும்?
அடி பைத்தியமே
எது நம்மைப் பிரித்துவிட முடியும்?
உன்
உள்ளங்கை ரேகையடி நான்
மிஞ்சி மிஞ்சி போனால்
எவ்வளவு தூரம் ஓட முடியும்?
என்ன கேட்டாய்?
"உன் துயரத்தில்
எனக்கும் பங்கு கொடு"
என் துயரங்களைத் தாங்கத்
தோளில்லை என்றா
தோகையுனை நேசித்தேன்?
நான் துயரங்களால்
துவண்டு போகும் போதெல்லாம்-உன்
தோள்களில் சாய்ந்து கொள்ளத்தானடி
துடிக்கிறேன்...
பைத்தியமே
இவனை நீ புரிந்து கொண்டது
இவ்வளவுதானா?
அடி
பொட்டு வைத்த
பூவே!
உன்னைப்
பன்னீரில் குளிப்பாட்டப்
பாவி நான் துடிக்கிறேன்
நீயோ
என் கண்ணீரில் குளிக்க
ஏன் ஆசைப்படுகிறாய்?
மின்னல்களைப் பிணைத்துச்
சங்கிலி செய்து
பிறைநிலவைத் தொட்டில்கட்டி
பூவுன்னைத் தாலாட்டப்
பித்தன்போல்
புலம்புகிறவன் நான்....
மல்லிகைப் பூவினும்
மெல்லிய நின் தேகத்தில்
மஞ்சள் கிழங்கு பட்டால்
என்னாகுமோ என்று
எண்ணிக் கலங்குபவன் நான்....
என் சித்திரமே
உனக்குச்
சந்திரனை உரசி
சந்தானம் பூசலாமா என்று
சிந்தித்துக் கொண்டிருப்பவன் நான்...
உன் கொலுசு மணிகளுக்கு
நட்சத்திரங்களைச் சேகரிக்க
நினைத்துக் கொண்டிருப்பவன் நான்....
காலம் நாளை
என் தலைக்குச் சூட்டவிருக்கும்
மகுடங்களை இழைத்து
உன் காதுகளுக்குத் தோடுகளாக்கக்
கனா கண்டு கொண்டிருப்பவன் நான்....
என் துயரங்கள்
தண்ணீர்க் குளமல்ல
திராவகக் குளம்!
தாமரை நீ
தாங்க மாட்டாய்....
என்
மனமென்னும் மயானத்தை
மலர்வனம் ஆக்கியவளே
அதில்
உன்னையே எரிப்பதென்றால்-என்
உயிர் தாங்குமா?
இவனை நீ புரிந்து கொண்டது
இவ்வளவு தானா?
இதோ மீண்டும் வந்துவிட்டேன்!
எங்கே
எனக்கு
என்ன பரிசு தரப் போகிறாய்?
ஓ வெட்கமோ?
வராத வெட்கத்தை ஏனடி
வம்புக்கிழுக்கிறாய்?
எங்கே
மண்ணின் புழுதியைக் கூட
மகரந்தமாய் மாற்றிவிடும் -உன்
மலர்ப்பாதங்களைக் கொடு
என் உள்ளங்கையில்
ஏந்திக் கொள்கிறேன்!
---------ரௌத்திரன்
Re: என் அன்புக்குரியவளே!
என் துயரங்கள்
தண்ணீர்க் குளமல்ல
திராவகக் குளம்!
தாமரை நீ
தாங்க மாட்டாய்....
என்
மனமென்னும் மயானத்தை
மலர்வனம் ஆக்கியவளே
அதில்
உன்னையே எரிப்பதென்றால்-என்
உயிர் தாங்குமா?
இவனை நீ புரிந்து கொண்டது
இவ்வளவு தானா?
என் அன்புக்குரியவளே!
[img]
[/img]
தண்ணீர்க் குளமல்ல
திராவகக் குளம்!
தாமரை நீ
தாங்க மாட்டாய்....
என்
மனமென்னும் மயானத்தை
மலர்வனம் ஆக்கியவளே
அதில்
உன்னையே எரிப்பதென்றால்-என்
உயிர் தாங்குமா?
இவனை நீ புரிந்து கொண்டது
இவ்வளவு தானா?
என் அன்புக்குரியவளே!
[img]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் அன்புக்குரியவளே!
என் துயரங்கள்
தண்ணீர்க் குளமல்ல
திராவகக் குளம்!
தாமரை நீ
தாங்க மாட்டாய்
மனம் தொட்ட வரிகள்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: என் அன்புக்குரியவளே!
எங்கே
அகத்தில் தேக்கி வைத்திருக்கும்
ஆசையெல்லாம் திரட்டி
ஒருமுறை என் பெயரை உச்சரி
எனக்கு மோட்ஷம் கிடைக்கட்டும்.....
எத்தனை முறை
உச்சரித்தாலும்
சலிக்காதது
காதலர்களின் பெயர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|