தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை

View previous topic View next topic Go down

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை Empty அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை

Post by முழுமுதலோன் Fri May 08, 2015 10:33 am

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை T_500_596

மூலவர் : முத்துமாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : கீழ்கொடுங்கலூர்
ஊர் : வந்தவாசி
மாவட்டம் : திருவண்ணாமலை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

ஆடிவெள்ளி, நவராத்திரி.

தல சிறப்பு:

பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.

போன்:

+91- 4183-242 406.

பொது தகவல்:


உலகம் தோன்றிய காலத்திலிருந்து சக்தி வழிபாடு இருந்துவருகிறது. ஆரம்பகாலத்தில் மனிதன் இலைகளால் ஆன உடையையே உடுத்தினான். அந்த பழக்கத்தின் அடிப்படையில்தானோ என்னவோ இப்போதும் கூடசக்தியின் அம்சமாக கருதப்படும் மாரியம்மன் கோயிலில் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் செய்யும் வழக்கம் இருக்கிறது.


தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் இப்படி நேர்த்திக்கடன் செய்யும் பழக்கம் உள்ள திருத்தலத்தில் ஒன்று தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கொடுங்கலூர் முத்துமாரியம்மன் கோயில். இதற்கு புராணக் கதை ஒன்று உள்ளது.





பிரார்த்தனை


இத்தல முத்து மாரியம்மனை வேண்டிக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.


அத்துடன் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், திருமணத்தில் தடை உள்ளவர்களும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என்கிறார்கள்.




நேர்த்திக்கடன்:

தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

-

தல வரலாறு:

ஜமதக்னிமுனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள். கடைசிமகன் பரசுராமன். கற்பில் சிறந்தவளான ரேணுகாதேவி பச்சைமண்ணால் செய்யப்பட்ட குடத்தில் தண்ணீர் ஏந்தி தனது ஆசிரமத்திற்கு கொண்டு வருவாள். அவளது கற்பின் சக்தியால் இது சாத்தியமாயிற்று.

ஒருமுறை வானத்தில் கந்தர்வன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவனது நிழல் ஆற்றில் தெரிந்தது. அதைப்பார்த்ததும் என்ன காரணத்தாலோ அவளது மனம் சலனப்பட்டது. ஆயினும் மனதில் விரசம் எதுவும் இல்லாமல், ""இப்படியும் ஆணழகர்கள் உலகத்தில் இருக்கிறார்களா?'' என்று மட்டுமே எண்ணினாள். அந்த மாத்திரத்திலேயே அவள் கையிலிருந்த குடம் உடைந்துவிட்டது.

ஜமதக்னி முனிவரின் ஞானத்திற்கு இது புரிந்துவிட்டது. இனி தன் மனைவியின் கற்பை பிறர் குறை கூறுவார்களே என்ற அச்சத்தில் மகன்களை அழைத்து தாயை வெட்டிவிடும்படி சொன்னார். மற்ற மகன்கள் மறுக்க, பரசுராமன் அந்தக் காரியத்தை செய்துமுடித்தார். அவரை ஜமதக்னி பாராட்டினார். என்ன வரம் வேண்டுமென கேட் டார். தன் தாயின் உயிரே திரும்பவும் வேண்டுமென பரசுராமர் கேட்டார்.

""உடலில் உன் தாயின் தலையை பொருத்தி உயிர்பெறச் செய்,'' என ஜமதக்னி கூறிவிட்டார். பதட்டத்தில் வேறு ஒரு பெண்ணின் உடலில் தலையை பொருத்திவிட்டார் பரசுராமர். அப்பெண் உயிர் பெற்று எழுந்தாள்.

இதையெல்லாம் அந்த கந்தர்வன் கவனித்தான். தன்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காக சற்றுகூட இரக்க மில்லாமல் தன் மனைவியை கொலைசெய்த ஜமதக்னி முனிவரை அவன் கொன்றுவிட்டான். உயிர் பெற்று எழுந்த ரேணுகா கணவரின் சிதையில் விழுந்தாள்.

இரண்டு புண்ணிய ஆத்மாக்கள் நியாயமற்ற முறையில் இறந்து எரிந்ததால் தேவலோகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலைமை உருவானது. எனவே இந்திரன் வருணனை வரவழைத்து மழைபெய்து சிதை தீயை அணைக்கும்படி கூறினான். வருணனும் அவ்வாறே செய்ய, பாதி எரிந்த நிலையில் அப்பெண் எழுந்தாள். அவளது உடலில் ஆடைகள் இல்லை. அனைத்தும் எரிந்துபோயிருந்தன.

பதட்டத்துடன் அங்கு நின்ற வேப்பமர இலைகளை பறித்து, அவற்றால் உடலை மறைத்துக் கொண்டாள். உடலைத் தீப்புண் சுட்டதால் மஞ்சள் நீரை வாரி ஊற்றிக் கொண்டாள். உடலெங்கும் முத்து முத்தாக பொரிந்திருந்தது. முகம் மட்டும் பொலிவாக இருந்தது.

அந்நிலையில் தன் ஆற்றலால் உயிர் பெற்று எழுந்த ஜமதக்னி முனிவர் அவளை "மாரி' என்ற பெயரில் மழைதரும் தெய்வமாக இவ்வுலகில் அருளும்படிசொன்னார். அதன்படியே இன்றும் வேப்பிலை கட்டுதல், மஞ்சள் நீராட்டு ஆகியவை அம்மன் கோயில்களில் நடக்கிறது. உடலில் முத்து முத்தாக அம்மை ஏற்பட்டால் வேப்பிலை பூசுகிறோம்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை Empty Re: அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை

Post by செந்தில் Fri May 08, 2015 11:54 am

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை Empty Re: அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை

Post by முரளிராஜா Sat May 09, 2015 10:15 am

ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை Empty Re: அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அருள்மிகு பூதநாராயணர் திருக்கோயில், திருவண்ணாமலை
» ஆரணி அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
» பொன்னூர் அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
» நல்லூர் அருள்மிகு சுந்தரவரதராஜர் திருக்கோயில், திருவண்ணாமலை
» படவேடு அருள்மிகு யோகராமர் திருக்கோயில், திருவண்ணாமலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum