Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
Page 1 of 1 • Share
அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

வந்த இடத்தில்
வீண் சண்டை ஏன்
எரிமலை வாய்கள்
சரியென ஓய
இடம் அமைதி
வந்த இடம் என
அவர் சொன்னது
பூமியையோ
மனமும் அமைதி....
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
அறவொளி கவிதைகள் - அப்பாவின் உயிரே நான் தான்...

அப்பாவின்
உயிரே நான் தான்...
முதல் நாள் பள்ளி
சேர்க்கையின் போதும்
முகூர்தத்தின் போதும்
அவர் உடலின் நடுக்கம்
உணர்ந்தேன்
ஆண்டுகள் உருண்டது..
கணவனே என் உலகம்
அவன் உலகத்திலோ...
நெரிசலில் நான்.
ஆண்டுகள் உருண்டது..
உறங்கும் வேளை
உதட்டை சுழித்து
சிரிக்கும் பிள்ளையின்
கனவில் நானே என்று
கனவில் மிதக்கும் நான்...
பிள்ளைக்காகவே
நான்...
ஆண்டுகள் உருண்டது..
அம்மா பாவம்ப்பா
அன்பா சொல்லுங்க
திட்டாதீங்க...
அப்பாவிடம்
விண்ணப்பம்....
ஆண்டுகள் உருண்டது....
மருமகளும், நானும்
ஒரே வீட்டில்...
எங்கள் மனசோ
முள்ளின் பார்வை வேண்டி
தராசின்
எதிரெதிர் தட்டில்....
ஆண்டுகள் உருண்டது..
அப்பாவின் செல்லமாமே நீ
அவளை பிடித்து
அரவணைத்துக் கொஞ்ச
போங்க பாட்டி
பெருமையுடன்
பிடி விலக்கி...
பழைய சக்கரம் ஒன்றை
ஓட்டிச் சென்றாள் பேத்தி....
சிரித்துக் கொண்டேன்
சக்கரம்
உருள்வதைப் பார்த்து....
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
அறவொளி கவிதைகள் - கொடுப்பதே இன்பம்

திறந்த பெட்டியில்
நிறைந்த பணம்
நிரப்பியது யார்
கையில் சிக்காமல்
காற்றில் பறக்குது..
எங்கு விழுந்தாலும்
என்னையே சேரும்
கொடுப்பதே இன்பம்
சொல்லாமல்
சொன்னது
கடல் அறக்கட்டளை
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
காவலாளியின் வணக்கத்தை

அலைந்தே திரிந்து
விரும்பி வாங்கிய
பூச்செடி - நித்தம்
பூத்துக் குலுங்கி
வெளியில் போகும் என்னை
மனைவியைப் போல்
பார்த்துச் சிரித்தாலும்
காவலாளியின் வணக்கத்தை
கர்வத்தோடு கடப்பது போல்
நான்...
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
ஒற்றைக் கயிற்றில்

மேலிருந்து கீழாக
ஒற்றைக் கயிற்றில்
அபாரமாய் நடந்து
வித்தைக் காட்டுது
மெழுகுவர்த்தி தீபம்....
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
பரம்பரைச் சொத்து

பரம்பரைச் சொத்து தான்
பாதுகாக்க வேண்டாவா
எத்தனை முறையடா
சொல்வது
தேவையில்லாத போது
கதவுகளை மூடென்று...
குப்பையாய் வீடு...
ஏவலாளியை திட்டிக் கொண்டே
எழுந்தார் ஏகாம்பரம் ....
ஒன்பது கதவுகளையும் மூட ...
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
சன்னலோரத்தில்

மலையளவு
தடை வரினும்
மனம் உடையாமல்
போகுது பார்த்தாயா....
மேகப் பேருந்தில்
பயணத்தோடு
பாடமும் கற்றுக் கொண்டது
சன்னலோரத்தில் அமர்ந்த
இரண்டு மழைத் துளிகள்..
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
அழகான ரோஜாப்பூ

அனைத்து ரகச் செடியிலும்
வந்ததெப்படி ஓர்
அழகான ரோஜாப்பூ
அனேகமாய்
முப்பத்திரண்டு
முட்களோடு....
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
மரணத்தின் வாயில்

தெருவில் விழுந்தோ
தெய்வத்தின் மீது
வழிந்தோ
வாழ்க்கை முடிந்தாலும்
பரவாயில்லை
பசியைப் பார்க்காமலேயே
பயணம் முடிகிறதே
முணுமுணுத்தது
மரணத்தின் வாயில் பால்.....
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
Re: அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்

புலன் விசாரணை
பின்னணியில் யார் யார்
காட்டிக் கொடுக்கவே இல்லை
கடைசி வரை
ஐம்புலன்கள்
மனசை...
araoli- புதியவர்
- பதிவுகள் : 47

» அறவொளி கவிதைகள்
» அறவொளி கவிதைகள் - கண் முன்னால்
» அறவொளி கவிதைகள் - தோல்விகள்
» அறவொளி கவிதைகள் - விளங்கியதோ இல்லையோ
» தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்
» அறவொளி கவிதைகள் - கண் முன்னால்
» அறவொளி கவிதைகள் - தோல்விகள்
» அறவொளி கவிதைகள் - விளங்கியதோ இல்லையோ
» தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|