Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில், சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில், சென்னை
மூலவர் : ஷீரடி சாய்பாபா
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : மேற்கு தாம்பரம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வருடப்பிறப்பு, வருடத்தின் விசேஷ நாட்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தல சிறப்பு:
ஷீரடியில் இருப்பதை போலவே இக்கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில் மேற்கு தாம்பரம், சென்னை.
பொது தகவல்:
சுதைச் சிற்பங்கள் தாங்கிய தூண்களுடன் அமைந்த தனிச் சன்னதியில் பிள்ளையார் வீற்றிருக்கிறார். தத்தாத்ரேயர் குருஸ்தானில் தரிசனமளிக்கிறார். அருகிலேயே அனுமனுக்குத் தனிக்கோயில் அமைந்திருக்கிறது.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நடைபெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அர்ச்சனை ஆராதனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஷீரடியில் இருக்கும் ஆலயத்தை நகல் எடுத்தது போலவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நாற்பது அடி உயர கோபுரத்தின் உச்சியில் பறக்கும் கொடி, உலகிற்கு அருளும் மகான் இங்கே இருக்கிறார் வா என்பது போல அசைந்தாடி வரவேற்கிறது. பொன்நிறத்தில் ஒளிரும் எழிலான முகப்பின் நடுவே கதைவடிவில் அமர்ந்து காட்சியளிக்கிறார் ஷீரடி மகான். வணங்கி உள்ளே நுழைந்தால் நேரெதிரே, அமைந்திருக்கிறது மூலஸ்தானம் வெளியே கடுமையான வெப்பம் வீச, உள்ளே மகானின் கருணை மழை நிறைந்திருப்பதால் ஜில் என்று இருக்கிறது. ஐந்தடிக்கும் மேலான உயரத்தில் வெண் பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டு, தகதகக்கும் கிரீடம், பளபளக்கும் ஆடை, பொலிவான பூமாலை என எழிலான அலங்காரத்துடன் காட்சிதரும் மகானை தரிசிக்கும்போது, ஆண்டியாக இருந்தாலும் பக்தர்கள். மனதில் அரசனாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் ஷீரடி நாயகர் என்பது தெளிவாகப் புரிகிறது.
தினமும் நான்குகால பூஜைகள், ஷீரடியில் நடப்பதுபோலவே நடப்பதால், ஏராளமான பக்தர்கள் இங்கே வந்து அர்ச்சனை ஆராதனைகளைச் செய்கிறார்கள். மனமுருக நின்று வேண்டுகிறார்கள். வியாழக் கிழமைகளில் விசேஷ பூஜைகளும் நடக்கின்றன. அருகே உள்ள கல்லூரி மாணவர்கள், பேராசியர்களும் அதிக அளவில் வருகிறார்கள். தேர்வுகளுக்கு முன் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறதாம். எல்லோருக்கும் தன் அருளைக் குறைவின்றி வழங்குகிறார் பாபா என்பதற்கு இங்கே வருவோரின் வேண்டுதல்கள் ஈடேறுததே சாட்சி என்கிறார்கள்.
தல வரலாறு:
சாய்ராம் பொறியியல் கல்லூரி நிறுவனரின் முயற்சியால் 2010 ல் கட்டத்தொடங்கப்பட்டு, 15-3-2013 அன்று மகா கும்பாபிஷேகம் கண்ட கோயில்,
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ஷீரடியில் இருப்பதை போலவே இக்கோயில் அமைந்துள்ளது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில், சென்னை
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» கோயம்பேடு அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» எழுச்சூர் அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» சென்னை-அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
» திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» கோயம்பேடு அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» எழுச்சூர் அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» சென்னை-அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
» திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|