தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அயிலாங்குடி அ /மி லட்சுமி வராஹர் திருக்கோயில், மதுரை

View previous topic View next topic Go down

அயிலாங்குடி அ /மி லட்சுமி வராஹர் திருக்கோயில், மதுரை Empty அயிலாங்குடி அ /மி லட்சுமி வராஹர் திருக்கோயில், மதுரை

Post by முழுமுதலோன் Wed May 20, 2015 2:59 pm

அயிலாங்குடி அ /மி லட்சுமி வராஹர் திருக்கோயில், மதுரை T_500_1748

மூலவர் : லட்சுமி வராஹர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : அயிலாங்குடி
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

வராஹ ஜெயந்தி, ராம நவமி, பிரம்மோற்சவம்

தல சிறப்பு:

லட்சுமி வராஹருக்கென அமைந்த கோயில்களுள் இதுவும் ஒன்று.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு லட்சுமி வராஹர் திருக்கோயில் அயிலாங்குடி, மதுரை.

போன்:

+91 93441 02741

பொது தகவல்:

அயிலாங்குடி அருகில் திவ்யதேசங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப்பெருமாள், யானைமலை ஒத்தக்கடை யோகநரசிங்கப்பெருமாள் கோயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோயில் கருவறை கருங்கல்லால் ஆனது. தாயாரை மடியில் ஏந்திய கோலத்தில் மூலவர் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.


பிரார்த்தனை

லட்சுமி வராஹரை வழிபட்டால் இயற்கை சீற்றமான சுனாமி, புயல், பஞ்சம் போன்ற தீங்குகள் உண்டாகாது. பூமியில் உயிர்கள் நிம்மதியாக வாழ முடியும்

நேர்த்திக்கடன்:

துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

அளவில்லாத பெருமை: இந்த உலகத்திற்கே உயிராக விளங்குவதால் வராஹமூர்த்தியை மகாவராஹ: விச்வாத்மா என்று குறிப்பிடுவர். பொய்கையாழ்வார் தன் பாசுரத்தில்,பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? என்று போற்றியுள்ளார். உலகத்தைத் தன் திருவடிகளால் அளந்ததால் திரிவிக்ரமாவதாரம் தான் மிகப் பெரியது என நினைக்கிறோம். ஆனால், அந்த பூமியே வராஹப் பெருமானின் மூக்கில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால், அவரின் பெருமையை அளக்க முடியாது. இதனை ஆண்டாளும் தன் பாசுரத்தில் மானமிலாப் பன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மானமிலா என்றால் அளவிலாத பெருமை . லட்சுமி வராஹரை வழிபட்டால் இயற்கை சீற்றமான சுனாமி, புயல், பஞ்சம் போன்ற தீங்குகள் உண்டாகாது. பூமியில் உயிர்கள் நிம்மதியாக வாழ முடியும்.

தல வரலாறு:

இரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். தன் தவ வலிமையால் தேவர்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். அவனைக் கண்ட தேவர்கள் பயந்தோடினர். அவனைக் கண்டு மூவுலகமும் நடுங்கியது. பூமியைச் சுருட்டி கடலுக்கு அடியில் சென்று ஒளித்து வைத்தான். பிரம்மா செய்வதறியாமல் திகைத்தார். பாற்கடல் வாசனான மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். பிரம்மாவின் மூக்கிலிருந்து வராஹ வடிவம்(பன்றி) வடிவத்தில் விஷ்ணு வெளிப்பட்டார். அப்பெருமானின் மூக்குப்பகுதியில் ஒரு கொம்பு முளைத்தது. கர்ஜித்தபடி கடலுக்குள் பாய்ந்த அவர், பூமி அமிழ்ந்திருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டார். தன் கொம்பினால் பூமியைத் தாங்கியபடி வந்தார். வராஹமூர்த்தியைத் தடுக்க வந்த இரண்யாட்சன் மீது பாய்ந்து தன் கோரைப் பற்களால் அவன் உடலை இருகூறாகக் கிழித்துக் கொன்றார். பூமாதேவியைக் காத்த வராஹர் மீது தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இதன்அடிப்படையில் மதுரையில் லட்சுமிவராஹருக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவிடந்தை, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், கல்லிடைக்குறிச்சியில் மட்டுமே வராஹர் கோயில்கள் உள்ளன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: லட்சுமி வராஹருக்கென அமைந்த கோயில்களுள் இதுவும் ஒன்று.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அயிலாங்குடி அ /மி லட்சுமி வராஹர் திருக்கோயில், மதுரை Empty Re: அயிலாங்குடி அ /மி லட்சுமி வராஹர் திருக்கோயில், மதுரை

Post by முரளிராஜா Thu May 21, 2015 10:38 am

தலத்தின் பெருமையை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» இடையாற்றுமங்கலம் அ /மி லட்சுமி நாராயணன் திருக்கோயில், திருச்சி
» அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், தேனி
» அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், புதுச்சேரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum