Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாலைக்கிணறு அருள்மிகு ராமானுஜர் திருக்கோயில், காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
சாலைக்கிணறு அருள்மிகு ராமானுஜர் திருக்கோயில், காஞ்சிபுரம்
மூலவர் : ராமானுஜர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : திருமஞ்சன தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சாலைக்கிணறு
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாதம்
தல சிறப்பு:
காஞ்சி வரதராஜருக்கு இன்றும் திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) இந்த கோயில் கிணற்று நீரே பயன்படுத்தப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 10 மணி வரை, சனிக்கிழமை காலை6- மதியம்12, திருவாதிரை நட்சத்திர நாட்களில் காலை6- மாலை5
முகவரி:
அருள்மிகு ராமானுஜர் திருக்கோயில் சாலைக்கிணறு, காஞ்சிபுரம்.
போன்:
+91 94882 19520
பொது தகவல்:
ராமானுஜர் சந்நிதியிலிருந்து, காஞ்சிபுரம் வரதராஜர் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம்.
பிரார்த்தனை
காலசர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று இங்கு சிறப்புபூஜை நடத்துகிறார்கள். புத்திரபாக்கியம் பெற தீர்த்தத்தில் நீராடி அங்கப்பிரதட்சணம் செய்வர். மனக்குறை தீரவும், உடல் குறைபாடு நீங்கவும் அர்ச்சனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
திருமஞ்சன தீர்த்தம்: தனக்கு வழிகாட்டிய வேடன், காஞ்சியிலிருக்கும் வரதராஜரே என்பதை உணர்ந்த ராமானுஜர் மகிழ்ந்தார். பெருமாளுக்கு தொண்டு செய்ய அனுமதிக்கும்படி, சுவாமிக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்த திருக்கச்சிநம்பிகளை வேண்டினார். அதன்படி சாலைக்கிணற்றில் இருந்து அபிஷேக தண்ணீர் எடுத்து வரும் பணியில் ஈடுபட்டார். காஞ்சி வரதராஜருக்கு இன்றும் திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) இந்த கிணற்று நீரே பயன்படுத்தப்படுகிறது.
அனுஷ்டானக்குள உற்சவம்: ராமானுஜருக்கு பெருமாள் காட்சியளித்ததை நினைவூட்டும் விதத்தில், மார்கழி திருவிழாவின்போது அனுஷ்டானக்குள உற்சவம் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசியிலிருந்து 12ம் நாள் இந்த விழா நடத்தப்படும். வரதராஜப்பெருமாள், தாயார்களுடன் வேடர் கோலத்திலும், ராமானுஜர் மலர் அலங்காரத்திலும் காஞ்சியிலிருந்து சாலைக்கிணற்றுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெறும்.
தல வரலாறு:
ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உலகிற்கே உபதேசித்த அருளாளர் ராமானுஜர். இவர் யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் வேதம் படித்து வந்தார். குருவை மிஞ்சிய சிஷ்யராக, உபநிஷத்திற்கு புதிய விளக்கங்களை அளித்தார். இதைக் கேட்டவர்கள் அவரைப் பாராட்டினர். இதனைப் பொறுக்காத குரு, அவரைக் கொல்லத் துணிந்தார். சதித்திட்டம் தீட்டி ராமானுஜரை காசியாத்திரைக்கு அனுமதித்தார். கங்கையாற்றில் தள்ளிக் கொல்ல ஆள் அனுப்பினார். ஆனால், எம்பார் என்பவர் மூலம் ராமானுஜருக்கு இந்த உண்மை தெரியவந்தது. யாதவப்பிரகாசர் அனுப்பிய ஆட்களிடம் இருந்து தப்பிய ராமானுஜர் காசி செல்லாமல் பாதியில் திரும்பினார். வரும்வழியில், காட்டுப்பாதையில் வழிதெரியாமல் தடுமாறி நின்றபோது, காஞ்சி வரதராஜரே தாயாருடன் வேடர் கோலத்தில் எழுந்தருளினார். நடந்து வந்த களைப்பால் ராமானுஜர் வேடனிடம் தண்ணீர் கேட்க, அங்கிருந்த சாலைக்கிணற்று நீரைக் கொடுத்து தாகம் தணித்ததோடு, வழியும் காட்டி அருளினார். இதன் அடிப்படையில் சாலைக்கிணற்றில் ராமானுஜர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: காஞ்சி வரதராஜருக்கு இன்றும் திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) இந்த கோயில் கிணற்று நீரே பயன்படுத்தப்படுகிறது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாலைக்கிணறு அருள்மிகு ராமானுஜர் திருக்கோயில், காஞ்சிபுரம்
ஆலயத்தின் சிறப்பம்சங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
Re: சாலைக்கிணறு அருள்மிகு ராமானுஜர் திருக்கோயில், காஞ்சிபுரம்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|