Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எமனேஸ்வரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ராமநாதபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
எமனேஸ்வரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ராமநாதபுரம்
மூலவர் : வரதராஜப்பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசு
தீர்த்தம் : வைகை
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : எமனேஸ்வரம்
மாவட்டம் : ராமநாதபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
வைகாசியில் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி.
தல சிறப்பு:
வைகை நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. மூலவர் வரதராஜர், புண்ணியகோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமான தரிசனம் மிக விசேஷமானது.இக்கோயி லுக்குச் செல்பவர்கள் முதலில் விமானத்தை தரிசித்து விட்டு, அதன்பின்பு சுவாமியை தரிசிக்கிறார்கள். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், எமனேஸ்வரம் - 623 701. பரமக்குடி,ராமநாதபுரம் மாவட்டம்.
போன்:
+91- 4564 - 223 054.
பொது தகவல்:
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படும். பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி, கோயிலுக்கு வெளியே காவல் தெய்வம் கருப்பணசுவாமிக்கும் சன்னதிகள் இருக்கிறது. மார்க்கண்டேயரை பிடிக்கச்சென்று, சிவனால் பதவியை பறிக்கப்பட்ட எமதர்மன், வழிபட்ட எமனேஸ்வரமுடையார் கோயில் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.
பிரார்த்தனை
திருமண, புத்திர பாக்கியம் கிடைக்க சுவாமியிடம் வேண்டிக் கொள்கிறாகள்.
நேர்த்திக்கடன்:
சுவாமியை வேண்டி நேர்த்திக்கடன் நிறைவேறியவர்கள் விசேஷ திருமஞ்சனம் செய்கின்றனர்.
தலபெருமை:
வைகாசியில் பிரம்மோற்ஸவம் கொண்டாடுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். மூன்றாம் சனிக்கிழமை மட்டும் சுவாமி, வைர அங்கி அணிந்து காட்சி தருவார். எனவே இவருக்கு, "திருப்பதி பெருமாள்' என்ற பெயரும் உண்டு.வைகாசி பவுர்ணமியன்று சுவாமி புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி, கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்குகிறார். அதன்பின், குதிரை வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து விமோசனம் தருகிறார். இந்த வைபவம் இங்கு மிக விமரிசையாக நடக்கும்.சித்திரைப் பிறப்பு மற்றும் ஐப்பசி வளர்பிறையில் வரும் நாகபஞ்சமியன்று, சுவாமி கருடசேவை சாதிக்கிறார்.
சிறப்பம்சம்: தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதிக்குப் பின்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது. சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், அக்னி கிரீடத்துடன் காட்சி தருகிறார்.வரதராஜரை இங்கு பிரதிஷ்டை செய்யும் முன்பு, இத்தலத்தில் இருந்த சீனிவாசப்பெருமாள், அலர்மேலு தாயாருடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரையும் மூலவராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.
தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், தான் ஓரிடத்தில் கால்வாய்க்குள் சிலை வடிவில் இருப்பதாக உணர்த் தினார்.மகிழ்ந்த பக்தர் மறுநாள் அங்கு சென்றபோது, சுவாமியைக் கண்டார். அவரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.சுவாமிக்கு "வரதராஜப்பெருமாள்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பின்பு படிப்படியாக இங்கு கோயில் பெரிதாக கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: வைகை நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. மூலவர் வரதராஜர், புண்ணியகோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமான தரிசனம் மிக விசேஷமானது.இக்கோயி லுக்குச் செல்பவர்கள் முதலில் விமானத்தை தரிசித்து விட்டு, அதன்பின்பு சுவாமியை தரிசிக்கிறார்கள். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எமனேஸ்வரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ராமநாதபுரம்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பரமக்குடி அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், ராமநாதபுரம்
» அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில், ராமநாதபுரம்
» திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
» திருவெற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில், ராமநாதபுரம்
» அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்,ராமேஸ்வரம் , ராமநாதபுரம்
» அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில், ராமநாதபுரம்
» திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
» திருவெற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில், ராமநாதபுரம்
» அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்,ராமேஸ்வரம் , ராமநாதபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|