Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோட்டையூர் அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில், விருதுநகர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
கோட்டையூர் அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில், விருதுநகர்
மூலவர் : வைகுண்டமூர்த்தி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பூரண, புஷ்கலா
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கோட்டையூர்
மாவட்டம் : விருதுநகர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரை திருவிழா, பாரி வேட்டை, மகா சிவராத்திரி, நவராத்திரி, மாசி மாத அமாவாசை
தல சிறப்பு:
வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன் தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வைகுண்ட மூர்த்தி திருக்கோயில் கோட்டையூர், சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
வைகுண்ட வாசியான இந்த வைகுண்டமூர்த்தியார் அங்குள்ள ஈரேழு தேவலோகம், சுகபோக வைகுண்டவாசம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து ஆங்காங்கே நிலை கொண்டுள்ளார். இவ்வாறு நிலை கொண்டுள்ள வைகுண்டமூர்த்தி, தென்னிந்திய கிராமத் தெய்வங்களில் கிராமத்தை காக்கும் முதன்மை காவல் தெய்வமாக விளங்கும் அய்யனாராகவும், தர்மசாஸ்தாவாகவும், கேரளாவில் சபரிமலையில் ஐயப்பனாகவும் பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் எழுந்தருளி பக்தர்களை காத்து வருகிறார்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பூரண, புஷ்கலை சமேத அய்யனாருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
இங்கு முக்கியத் திருவிழா பாரி வேட்டை, துஷ்டசக்திகளை வேரறுக்கவும், தன்னைச் சுற்றி சார்ந்துள்ள துஷ்ட தேவதைகள், 21 சேனை தளங்களுக்கு ரணபலி வழங்கவும் வருடம் ஒரு முறை அய்யனார் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இதற்காக நடத்தப்படும் பாரிவேட்டை திருவிழா இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இத்திருவிழா மாசி மாதம் அமாவாசையை ஒட்டி 3 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சித்திரை திருவிழா. இதைஒட்டி காவடி பூஜை நடத்தப்படுகிறது.
அந்நாளில் வைகுண்டமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்திலும், அம்மன்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலும், நடராஜர் சிவகாமியம்மன் ஒரு பல்லக்கிலும் கோயிலை வலம் வந்து காட்சியளிப்பர். இது தவிர மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.
பல ஊர்களில் காவல் தெய்வமாக, அந்தந்த ஊர்களில் எல்லைகளில் எழுந்தருளியுள்ள அய்யனார், எல்லா இடங்களிலுமே தவக்கோலத்தில் தனியாக காட்சியளிப்பார். ஆனால், இக்கோயிலில் பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன் சேர்ந்து தம்பதி சகிதமாக காட்சியளிக்கிறார். மேலும் 61 பந்தி 21 சேனை தளங்களுடன் தனது பரிவாரங்களுடன் காட்சியளிக்கிறார்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர்க்கு அருள்பாலிக்கும் தன்மையுடையவர். அதற்காகவே நாள்தோறும் இங்கு பக்தர்கள் வருவதுண்டு. இங்குள்ள 21 சேனை தளங்களுக்கு முதன்மையானவர் மாமுண்டி கருப்பசாமி, முலஸ்தானத்திற்கு வலப்புறம் தனி சன்னிதானத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளைக்கார துரை ஒருவன் சுவாமியை அலட்சியம் செய்ய, அந்த வழியாக குதிரையில் சென்ற அந்த துரை, தூக்கி எறியப்பட்டதாகவும், தவறை உணர்ந்த அவன் சுவாமிக்காக தனது குதிரையை விட்டுச் சென்றதுடன் குதிரை பீடமும் 21 அடி உயரத்தில் அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இந்த குதிரை பீடத்தில் தான் வைகுண்டமூர்த்தி சாஸ்தா வடிவில் அமர்ந்து பாரிவேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனை மெய்பிக்கும் பொருட்டு வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், தம்பதி சகிதமாக அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார். இது இக்கோயிலின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
தல வரலாறு:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலில் தர்மசாஸ்தாவாகவும், அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார்.
வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில் கி.பி. 1620ம் ஆண்டில் தற்போதைய சுந்தரபாண்டியம் பகுதியை ஆட்சி செய்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கிறது. இக்கோயிலில், அந்த மன்னனின் கலை நயத்தை வெளிப்படுத்தும் அழகிய சிற்ப ஓவியங்கள் இன்னும் அவனது புகழை பறைசாற்றும் வகையில் எழிலுற அமைந்துள்ளன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: வைகுண்ட மூர்த்தி சுவாமி வேட்டைக்கு போகும் காட்சியுடன் சாஸ்தாவாக கோயிலுக்கு வெளியேயும், பூரண, புஷ்கலா என்ற இரு பெருந்தேவியருடன் தம்பதி சகிதமாக, அய்யனராக கோயிலுக்கு உள்ளேயும் இருவேறுபட்ட அவதாரத்தில் ஒரே கோயிலில் அருள்பாலிக்கிறார்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோட்டையூர் அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில், விருதுநகர்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» காரிசேரி அருள்மிகு நாராயணர் திருக்கோயில், விருதுநகர்
» திருத்தங்கல் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர்
» திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
» மாந்தோப்பு அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், விருதுநகர்
» காரிசேரி அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், விருதுநகர்
» திருத்தங்கல் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர்
» திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
» மாந்தோப்பு அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், விருதுநகர்
» காரிசேரி அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், விருதுநகர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|