தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தென்னம்பாக்கம் அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கடலூர்

View previous topic View next topic Go down

தென்னம்பாக்கம் அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கடலூர் Empty தென்னம்பாக்கம் அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கடலூர்

Post by முழுமுதலோன் Tue Jun 16, 2015 2:49 pm

தென்னம்பாக்கம் அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கடலூர் T_500_1822
மூலவர் : அய்யனார்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பூரணா புஷ்கலை
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :
ஊர் : தென்னம்பாக்கம்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

பவுர்ணமி, சிவராத்திரி

தல சிறப்பு:

இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு அய்யனார் திருக்கோயில் தென்னம்பாக்கம், கடலூர்.


பொது தகவல்:

இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.


பிரார்த்தனை

திருமண வரம் வேண்டியும், பள்ளி கல்லூரிகளுக்கு இடம் கிடைக்கவும், சொந்த வீடு கட்ட தடையுள்ளவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைக்கு உரிய உருவ பொம்மைகளை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தலபெருமை:


இக்கோயிலில் முத்தையனார் பூரணா, புஷ்கலையோடு இணைந்து காட்சிதரும் கோலம் மனதிற்கு மிகவும் ரம்மியமாகவும், பக்தியை நம் உள்ளத்துக்குள் ஊடுருவ வைப்பதாகவும் இருக்கிறது. இங்கே புஷ்கலையை பொற்சிலை என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த தெய்வங்களுக்கு வலது புறம் வீரபத்திர சுவாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் ஒரு சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவரை அழகர் சித்தர் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இவர் இங்குள்ள கிணற்றினுள் சென்று அப்படியே மாயமாகிவிட்டாராம். அக்கிணறு இன்றும் ஒரு கோயிலைப் பராமரிப்பதுபோல பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிணற்றின் மேலே பித்தளையால் செய்யப்பட்ட செவ்வக வடிவ மூடி போடப்பட்டுள்ளது. தினமும் இதன்மீது விபூதிப்பட்டை போடப்படுகிறது. இதன் மத்தியப் பகுதியில் இடப்படும் விபூதி மட்டும் எத்தனை வெய்யில் அடித்தாலும் காய்வதே இல்லை. இத்தனைக்கும் கூரைப் பகுதியில் மூன்றடி இடைவெளியில் வெளிச்சம் மற்றும் வெய்யில் படுகிறது. அந்த இடைவெளியை யாராவது மூடினால் மூடியவர்களுக்கு தீங்கு நேரிடும் என்று நம்பப்படுகிறது.

சித்தரின் சமாதி அருகே விநாயகர் சிலை மட்டும் உள்ளது. முத்தையனார் கோயிலின் பின்பக்கம் உள்ள இந்த ஜீவசமாதியை தரிசித்து வேண்டிக்கொண்டால் முத்தையனாரின் அருளோடு, அழகர் சித்தரின் திருவருளும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் பக்தர்கள். மேலும் இங்கே லிங்க வடிவில் சிவபெருமானும் அருள்புரிகிறார். அழகு முத்தையனார் கோயில் என்னும் பெயருக்கேற்ப, இப்பகுதி அடர்ந்த மரங்கள் சூழ்ந்து, பசுமையுடனும் அமைதியுடனும் திகழ்கிறது. இங்கு சென்று அய்யனார் அருளையும் அழகர் சித்தரின் அருளையும் பெறலாம். இங்கே அய்யனார் அழகு முத்தையனார் என்று அழைக்கப்படுகிறார். நமது வேண்டுதல்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து முத்தையனாரின் கையில் மஞ்சள் நூலில் கட்டி விட்டு மனதார வணங்கவேண்டும், நாம் எழுதிய விண்ணப்பங்களை முத்தையனாரால் பரிசீலிக்கப்பட்டு பலனும் அருளப்படும் நம்பிக்கையோடு இங்கே விண்ணப்பித்தவர்களின் தேவைகள் நிறைவேறியுள்ளன. முத்தையனாரின் கையில் பல்லாயிரக்கணக்கான வேண்டுதல் கடிதங்கள் கட்டப்பட்டுள்ளன. நமது வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் பொம்மைகளைச் செய்து வைப்பது ஐதீகமாக உள்ளது.



தல வரலாறு:


சிவன்- விஷ்ணுவிற்கு (விஷ்ணுவின் மோகினி அவதாரம் மூலமாக) கையில் கிடைத்த அய்யனார் எனும் குழந்தையை, ஒரு முனிவர் வளர்த்து வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அய்யனார் குழந்தைப் பருவத்தில் அழகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார். சிவ-விஷ்ணு திருவிளையாடல் நிகழ்ந்தது கீழப்புதுப்பட்டு என்றபோதும், அய்யனார் வளர்ந்தது தென்னம்பாக்கம் பகுதியில்தான். சிவனும், விஷ்ணுவும் இப்பகுதியில் வாழ்ந்த முனிவரிடம் அய்யனாரை வளர்ப்பதற்காக ஒப்படைத்தனராம். முனிவரும் அய்யனாரை வளர்ந்து வந்தார். அவருக்கு பூரணா புஷ்கலை எனும் இரண்டு மகள்கள் இருந்தனர். அய்யனார் மிகவும் வீரனாகவும் திரனாகவும் வளர்ந்து வந்தார்.

அப்போது ஒரு மந்திரவாதி மந்திரக்கட்டு எனும் மோடி வித்தை மூலம். அப்பகுதியின் சுற்றுப்புறத்திலிருந்த சில சிற்றரசர்களை சிறைப்பிடித்து வசப்படுத்தி வைத்திருந்தான். அவனது மந்திர வித்தை அனைவரையும் சிறைப்படுத்தும் அளவு விபரீதமாக இருந்தது. எனவே மக்கள் முனிவரிடம் முறையிட்டனர். அவர் அய்யனாரை அழைத்து, நீ போய் அந்த மந்திரவாதியின் கொட்டத்தை அடக்கி, சிற்றரசர்களைக் காப்பாற்று. ஊர் மக்களின் அச்சம்போக்கு என்று கூற, அய்யனார் அந்த வலிமை மிக்க மந்திரவாதியுடன் மோதி, அவனை அழித்து, சிற்றரசர்களை சிறையிலிருந்து மீட்டார். இதனால் ஊர் மக்களும் பயம் நீங்கி சந்தோஷப்பட்டனர். அய்யனாரின் வீரத்தை மெச்சிய முனிவர், உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். அதற்கு அய்யனார் பூரணா புஷ்கலையை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். மேலும் என்னைவிட பலசாலியான-மற்றும் என்னைவிட வயதில் பெரியவரான ஒருவரை எனக்கு காவலாளியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முனிவரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார். என் மக்கள் இருவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வரக்கூடாது. அவர்கள் இருவரையும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சம்மதித்தார். அய்யனாரும் சத்தியவாக்கு கொடுத்து பூரணா, புஷ்கலையை திருமணம் செய்துகொண்டார். சொன்ன சொல் மாறாமல் இருவரையும் கண் கலங்காமல் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டார். அய்யனார் கேட்டுக்கொண்டபடி வீரபத்திரை காவலாளியாக நியமித்தார் முனிவர். ஒரு நாள் அய்யனார் புஷ்கலையுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பூரணா, தன் சகோதரியும் கணவரும் அந்தரங்கமாக இருப்பதால், அதற்கு இடையூராக இருக்கவேண்டாம் என நினைத்து சற்று தள்ளிச் சென்று ஈரமான தன் கூந்தலை விரித்துப்போட்டு ஆற்றிக் கொண்டிருந்தாள் தூரத்தில் இருந்து இதைப் பார்த்த முனிவர், தன் மகள் பூரணா அழுகிறாள் என நினைத்தார். மிகுந்த கோபம் கொண்ட அவர், உனக்கு அடுத்த பிறவியில் திருமணமே நடக்காது என்ற அய்யனாருக்கு சாபமிட்டார். எனவேதான் அடுத்த பிறவியில் மணிகண்டனாகப் பிறந்த அய்யனாருக்குத் திருமணமாக வில்லை என்று கூறப்படுகிறது.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இந்த தென்னம்பாக்கத்தில் முத்தையனார் கோயில் இருக்கும் பகுதியில் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தென்னம்பாக்கம் அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கடலூர் Empty Re: தென்னம்பாக்கம் அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கடலூர்

Post by செந்தில் Wed Jun 17, 2015 12:21 pm

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தீர்த்தனகிரி அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்
» கண்ணங்குடி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்
» திருவட்டத்துறை அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum