தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல்

View previous topic View next topic Go down

ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல் Empty ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல்

Post by முழுமுதலோன் Fri Jul 03, 2015 10:22 am

ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல் T_500_1993
மூலவர் : அழியா இலங்கை அம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : ராசிபுரம்
மாவட்டம் : நாமக்கல்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

இலங்கை அம்மனுக்கான திருவிழா, ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை அடுத்து வரும் திங்கட்கிழமையன்று காய்வெட்டிப் போடுதல் என்ற நிகழ்வுடன் தொடங்குகிறது. விழாவின் இறுதி நிகழ்வாக திருக்கோடிக் கம்பத்தில் ஒரு பெரிய துணியிலான திரியைக் கொண்டு திருக்கோடி ஏற்றப்படுகிறது.

தல சிறப்பு:

கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில் கூனவேலம்பட்டி புதூர் நாமக்கல்.

போன்:

+91 9487491489, 8903791489

பொது தகவல்:

அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் அழியா இலங்கை அம்மனின் துணைத் தெய்வங்களாக அமைந்துள்ளனர். அம்மனுக்கு வலப்பக்கத்தில் நான்கு கால் மண்டபத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அத்தனூர் அம்மன், இலங்கை அம்மனின் தமக்கையாக அழைக்கப்படுகிறாள். தனிக் கட்டடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என அழைக்கப்படும் 27 குழந்தைகள், உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 27 நட்சத்திரங்களாக வழி படுகின்றனர். இக்கட்டத்தின் இன்னொரு புறத்தில் நாகச் சிற்பங்களைக் காணலாம். கோயிலுக்கு வெளியேயுள்ள பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகிறார்கள். இதனால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



பிரார்த்தனை

நோய்கள் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

நோய்கள் நெருங்காமல் இருக்கவும் சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக இப்பசுவின் அருகில் கொண்டுவந்து வைக்கிறார்கள். இதேபோன்று நாய் மற்றும் பாம்பு உருவங்களையும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். உருள்தண்டம் எனப்படும் அங்கப்பிரதட்சண வழிபாட்டை கோயிலில் மும்முறை வலம் வந்து செய்கின்றனர்.

தலபெருமை:

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அழியா இலங்கை அம்மன் கோயில். நாற்புறமும் மதில் சுவர் எழுப்பப்படும். மூன்று வாயில்களுடன் அதியற்புதமாகத் திகழ்கிறது. வடக்கு, கிழக்குத் திசையிலுள்ள வாயில்கள்தான் தினமும் திறக்கப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் மட்டுமே மேற்குத் திசை வாயில் திறக்கப்படுகிறது.

வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், முன் மண்டபத்துக்கு எதிரில் வடக்கு வாசலுக்குச் செல்லும் வழியில் 10 அடி உயரத்திலு<மாக கொடிக் கம்பங்களை அமைந்துள்ளன. கருவறை முன் மண்டபம் 16 தூண்களால் எழுப்பட்டுள்ளது. இத்தூண்களில் பல தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள ஊஞ்சலில், திருவிழாவின்போது அம்மனை ஊஞ்சலில் வைத்து பாட்டுப் பாடி ஆட்டுவார்கள். ஊஞ்சலுக்கு அருகிலுள்ள முன் மண்டபத்தில் ஒரு சிறு வட்டக்கல் மீது பூ பொட்டலம் பார்த்தல் என்பது நடைபெறுகிறது. சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களில் ஏதாவது இரண்டு வகைப் பூக்களை மட்டும் ஒற்றைப் படை எண்ணிக்கையில் பொட்டலம் கட்டிவைத்து, குழந்தையைவிட்டு எடுக்கச் சொல்வர்.

கருவறை, புற்று வடிவில் அமைந்துள்ளது. இப்புற்றில் தலைகீழாக வடக்கு நோக்கி நிற்கும்போது இரண்டு பாதங்களும் மேல்நோக்கி அமைந்திருக்கின்றன. பாதங்களின் விரல்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டும் இப்பாதத்தின்மீது உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

முனியப்பன் கோயிலில் கிழக்கு முகமாக அமைந்த மூன்று முனிகளின் மிகப்பெரிய வடிவத்தைத் தரிசிக்கலாம். முனியப்பனுக்கு பலியிடல் நடைபெறுகிறது. இவரை வணங்கினால் எவ்வித கர்ப்பக்கோளாறும் சரியாகிவிடும். பேய், பிசாசுகளும் அண்டாது என்பதும் நம்பிக்கை. இவரை வணங்கினால் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டியும் வேண்டிக் கொள்கிறார்கள்.

முனியப்பனுக்கு முன்பாக மண்சுதையால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட பசு ஒன்றைக் காணலாம். வீட்டிலுள்ள பசுக்கள் நலத்துடன் இருக்கவும். நோய்கள் நெருங்காமல் இருக்கவும் சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக இப்பசுவின் அருகில் கொண்டுவந்து வைக்கிறார்கள். இதேபோன்று நாய் மற்றும் பாம்பு உருவங்களையும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். உருள்தண்டம் எனப்படும் அங்கப்பிரதட்சண வழிபாட்டை கோயிலில் மும்முறை வலம் வந்து செய்கின்றனர்.


தல வரலாறு:

சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து தலைகீழாக விழுந்தாளாம். அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள். இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது. இதனால் அழகிய லிங்க(வடிவமான) அம்மன் என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆக, இரு வகையில் பெயர்க்காரணம். ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டு சென்றதாம். மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின்தொடர்ந்துசென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளது சிறப்பு.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல் Empty Re: ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல்

Post by செந்தில் Fri Jul 03, 2015 7:48 pm

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல் Empty Re: ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல்

Post by முரளிராஜா Fri Jul 03, 2015 9:08 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல் Empty Re: ராசிபுரம் அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில், நாமக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ராசிபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல்
» ராசிபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல்
» ராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,திருச்செங்கோடு ,நாமக்கல்
» மோகனூர் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum