Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்
மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்

தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் புனைந்ததோர் திரைச்சேலை
முகமில்லாத கொடிய மிருகம்
வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள்.
உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி
நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன்
மனிதனை படைக்கும் போது கடவுள்
உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான்,
ஆமை போல் நடக்கும் உள்ளத்தில்
ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள்.
கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்..,
துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்...,
அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு
இருளாய் எரிகிறது,வானவில் வர்ணப்பூக்களும்
பெண்ணைக்கண்டு உதிர்கிறது,மனிதனும் பாவ
ஓட்டத்தில் தடயம் வைத்து மனதை வேசமாற்றுகிறான்.
மனம்,மனச்சாட்சி ஆகிய இரண்டும்
விற்பனையாகும் அங்காடிச்சந்தை யுகம்
மெளன விரதம் கூட இருக்காத மனிதர்களில்
பேச வேண்டிய மனச்சாட்சி ஊமையாகிவிட்டது.
நான்கு வேத நூல்களும் தோற்றுவிட்டது
மனிதனின் மனச்சாட்சியோடு போட்டியிட்டு...,
உயிரற்ற உடம்பு துர்வாடை வீசவில்லை
அழுக்கடைந்த மனதுதான் நாற்றமடிக்கிறது.
உலகில் ஓடும் ஜீவநதியின் அலைகளே!
இந்த மானிட கதையை கேட்டுவிட்டு....,
மண்ணில் பிறந்த மனிதனெல்லாம்
மனச்சாட்சியை விலைபேசி விற்றுவிட்டனர்.
நண்பனும் பகையாக,பகைவனும்
தோழனென நினைக்கும்,கள்ளியும்
ரோஜாவாகும்,காம சூத்திர பக்கங்களையும்
வள்ளுவன் குறள் என்று படிக்கச் சொல்லும்.
மென்மையான பூக்களும் முரடான புற்களாகும்,
வேற்றான் கைபட்ட தண்ணீரும் விஷமென
நினைக்கச் சொல்லும்,நிலையில்லா உலகில்
அழிந்து போகும் பொருளில் இச்சை கொள்ளும்.
எரிமலை குமறிடும் செந்தணல் கதிரும்
தண்மையாய் அணைக்கும்,ஆழ்கடல்
அலையின் நீரும் நெருப்பாய் சுட்டீடும்
அது ஒரு நாள் நிச்சயம் உண்மை உணரும்.

தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் புனைந்ததோர் திரைச்சேலை
முகமில்லாத கொடிய மிருகம்
வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள்.
உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி
நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன்
மனிதனை படைக்கும் போது கடவுள்
உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான்,
ஆமை போல் நடக்கும் உள்ளத்தில்
ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள்.
கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்..,
துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்...,
அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு
இருளாய் எரிகிறது,வானவில் வர்ணப்பூக்களும்
பெண்ணைக்கண்டு உதிர்கிறது,மனிதனும் பாவ
ஓட்டத்தில் தடயம் வைத்து மனதை வேசமாற்றுகிறான்.
மனம்,மனச்சாட்சி ஆகிய இரண்டும்
விற்பனையாகும் அங்காடிச்சந்தை யுகம்
மெளன விரதம் கூட இருக்காத மனிதர்களில்
பேச வேண்டிய மனச்சாட்சி ஊமையாகிவிட்டது.
நான்கு வேத நூல்களும் தோற்றுவிட்டது
மனிதனின் மனச்சாட்சியோடு போட்டியிட்டு...,
உயிரற்ற உடம்பு துர்வாடை வீசவில்லை
அழுக்கடைந்த மனதுதான் நாற்றமடிக்கிறது.
உலகில் ஓடும் ஜீவநதியின் அலைகளே!
இந்த மானிட கதையை கேட்டுவிட்டு....,
மண்ணில் பிறந்த மனிதனெல்லாம்
மனச்சாட்சியை விலைபேசி விற்றுவிட்டனர்.
நண்பனும் பகையாக,பகைவனும்
தோழனென நினைக்கும்,கள்ளியும்
ரோஜாவாகும்,காம சூத்திர பக்கங்களையும்
வள்ளுவன் குறள் என்று படிக்கச் சொல்லும்.
மென்மையான பூக்களும் முரடான புற்களாகும்,
வேற்றான் கைபட்ட தண்ணீரும் விஷமென
நினைக்கச் சொல்லும்,நிலையில்லா உலகில்
அழிந்து போகும் பொருளில் இச்சை கொள்ளும்.
எரிமலை குமறிடும் செந்தணல் கதிரும்
தண்மையாய் அணைக்கும்,ஆழ்கடல்
அலையின் நீரும் நெருப்பாய் சுட்டீடும்
அது ஒரு நாள் நிச்சயம் உண்மை உணரும்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|