தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?

View previous topic View next topic Go down

ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?  Empty ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?

Post by ஸ்ரீராம் Sun Aug 30, 2015 10:13 am

ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?  Raksha-Bandhan-2012-HD-Wallpapers-UpdatesVilla-6

ரக்ஷா பந்தன் என்பது ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால்கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம். தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டுவழக்கில் இருந்து வருகிறது.

கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்)டெல்லிசுல்தான்அலாவுதீன் கில்ஜிதாக்க வரும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?  Empty Re: ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?

Post by ஸ்ரீராம் Sun Aug 30, 2015 10:16 am

மேலும் ஒரு பதிவு:

ஒவ்வொரு வருடமும் தமிழில் ஆவணி மாதத்திலும் , இந்துக்களின் லுனி சோலார் காலண்டரின் படி ஸ்ரவன் மாதத்திலும் வரும் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் பண்டிகைதான் ரக்ஷா பந்தன். இந்த வருடம் ஆகஸ்ட் 29ம் தேதி (நேற்று) இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது.

பண்டைய நாட்களில் இந்த திருவிழா பொதுவாக வட இந்திய இந்துக்கள், சில முஸ்லிம்கள் மற்றும் சீக்கிய மதத்தினாரால் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி வெகுஜன மக்களால் கொண்டாடப்படும் சம்பிராதய விழாவாக மாறிவிட்டது.

இப்பொழுது இப்படி மாறிவிட்டாலும் கடந்த காலத்தில் மக்களாலும் மன்னர்களாலும், மாற்று மதத்தினாராலும் மிக மிக புனித தன்மையுடன் மதிக்கப்பட்டதற்கான கதைகள் நிறையவே இருக்கின்றன.

ஒரு பெண் மற்றொரு ஆணை தன் சகோதரனாக ஏற்று கொள்வதற்கு அவனது கையின் மணிக்கட்டில் கட்டிவிடும் ஒரு அடையாள, புனித கயிறே ராக்கி எனப்படுகிறது.

பெண்ணின் கையால் ராக்கியை கட்டி கொண்ட ஆண் அந்த பெண்ணை தன் சகோதரியாய் பாவித்து அவளுடைய பாதுகாப்புக்கு பொறுபேற்க வேண்டும்.இத்தைகைய சகோதர பண்பை புதுப்பிக்கும், நினைவு கூறும் நிகழ்வே ரக்ஷா பந்தன் பண்டிகையாக கொண்டாடபடுகிறது.ராக்கி கையிறை கட்டி கொண்டபின் இனிப்புகளை ஊட்டி விடுதல் பரிசு பொருள்கள் வழங்கி கொள்ளுதல் போன்றவையும் கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது.ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி வழங்கப்பட்டுவரும் கதைகள் சில...

கிருஷ்ணன் & திரவுபதி..

மகாபாரத கதையில் வரும் பாண்டவர்களின் மனைவியான திரவுபதி தனது சிறிய வயதில் போரில் காயம் பட்ட கிருஷ்ணனின் கையில் வழிந்தோடும் ரத்தத்தை நிறுத்த தனது சீலையை கிழித்து கட்டி உதவி புரிந்ததாகவும், அன்று முதல் கிருஷ்ணன் அவளை தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டு அவளுக்கு பல உதவிகளும் செய்தும், கௌரவர்களின் சபையில் அவளது மானத்தை காத்தும் உற்ற சகோதரனாக விளங்கியதாகவும் சொல்லப்படுது. திரவுபதி கிருஷ்ணனின் கையில் கட்டிய சீலை துணியே ராக்கி.

போரஸ் & ரோசானா...

அலெக்ஸ்சாண்டருக்கும் போரசுக்கும் நடந்த போரின் போது...அலெக்ஸ்சான்டரின் மனைவியான ரோசனாவின் ராக்கியை பெற்றுக்கொண்ட போரஸ்.... ஏற்று கொண்ட சகோதரிக்காக தனது கடைசி அஸ்திரத்தை அலெக்ஸ்சான்டரின் மேல் பிரயோகிக்காமல் விட்டதாக சொல்லபடுது. .

சித்தூர் ராணி & ஹுமாயுன்...

ராஜஸ்தானின் சித்துர் ராணி ஒரு விதவை. அவள்.. தனது நாட்டுக்கு எதிரிகளால் வந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள உதவி வேண்டி மொகலாய மன்னர் ஹுமாயுனுக்கு ராக்கி அனுப்பினதாகவும், ஹுமாயுனும் அவளை தனது சகோதரியாக ஏற்று கொண்டு அவளது நாட்டை மீட்டு கொடுத்ததாகவும் வரலாற்று குறிப்புகள் சொல்லுது. இந்த சம்பவத்திற்கு பின்னரே இந்த பண்டிகை மிகவும் பிரபலமானது.

இப்படி....உணர்வு புர்வமாக பெரும் மதிப்பளிக்கப் பட்டு வந்த ஒரு சம்பிராதயம்....இன்று ஒரு கேளிக்கை பண்டிகையாக மட்டுமே கொண்டாடப் படுவது சற்று வேதனையான நிகழ்வுதான்...என்றாலும் எல்லாருக்கும் எனது ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்....

இதே பௌர்ணமிதான் தமிழ் நாட்டில் ஆவணி அவிட்டமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?  Empty Re: ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?

Post by செந்தில் Sun Aug 30, 2015 8:43 pm

பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?  Empty Re: ரக்ஷா பந்தன் பற்றி தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum