Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.
Page 1 of 1 • Share
விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.
நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் இரண்டு இதிகாசங்களும் போற்றுவது முழுமுதற் கடவுளான விநாயகரையே. நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை மிக்கவர் விநாயகர். அவருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த விரதத்தையும் பூஜையையும் மேற்கொள்வதற்கான சில அடிப்படை விவரங்களைக் காண்போம்.
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப் பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ‘ஓம்’ என எழுத வேண்டும். மனையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.
நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.
கொலுக்கட்டை, கிண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள் பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் ‘ஓம் ஸ்ரீம், ஹரீம், சலீம், க்ளெளம் கம், கணபதியே வர வரத் ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா
எனும் கணபதியின் மூல மந்தரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின், விநாயகர் சிலையை ‘விவர்ஜனம்’ செய்ய வேண்டும் விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து.
அன்றைய தினமோ அல்லது ஒற்றைப் படையில் அமையும்படியாக 3,5,7- ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை, நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வழியனுப்பும் நாளன்று, ‘மங்கள மூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா எனக் கூறி வழியனுப்ப வேண்டும். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பொருகும். லட்சுமி கடாட்சம் கிட்டும்.
நாத பிந்து தத்துவம்
ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை பரணவ மந்திரம் என்பர். பரணவம் என்பதில் ‘பர’ என்பதற்கு விசேஷ என்பது பொருள், ‘நவம் என்பதற்கு புதுமை என்று பொருள் புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே பரணவ மந்திரம் “ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம், வரி வவைம் பிந்து உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும் முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.
ஆவணியில் வருடப்பிறப்பு
சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே நாம் நாட்களைக் கணிக்கிறோம். சூரியனின் சொந்த வீடு சிம்மய் அங்கிருந்து சூரியன் 12 வீடுகளுக்கும் சென்று வருகிறார். எனவே சூரியன் சிம்மத்திலிருக்கும் ஆவணியே வருடப் பிறப்பாகிவிட்டது. இன்றைக்கும் கேரளாவில் கொல்லம் ஆண்டு ஆவணியில் தொடங்குவதைக் காணலாம். விநாயகர் சதூர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்து வந்தாலும் அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான் 1893ம் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாகக் கொண்டாடப்பட்டது.
விநாயகரின் திருக்கோலங்கள்
உருவாய், அருவாய், திருவாய் விளங்குபவன் இறைவன் அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது திருக்கோலங்களை எண்ணுவது சாத்தியமற்றது. இருந்த போதும் மனிதன் இறைவனை மூர்த்தங்களில் வடித்து வணங்குவதில் பெரிதும் நிறைவடைகின்றது.
அந்த விதத்தில் விநாயகரும், அஷ்ட (8) கணபதி, ஷோடச (16) கணபதி 21 கணபதி 51 கணபதி 108 கணபதி என பல கோலங்களில் வழிபடப்படுகிறார்.
********************
தகவல் தளம் உறவுகளுக்கு விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.
தகவல் தளம் உறவுகளுக்கு விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.
உறவுகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Similar topics
» சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
» விநாயகர் அகவல்
» ஆறுமுக விநாயகர்
» விநாயகர் மந்திரம் – விதியை வெல்லும்
» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
» விநாயகர் அகவல்
» ஆறுமுக விநாயகர்
» விநாயகர் மந்திரம் – விதியை வெல்லும்
» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|