Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆறுமுக விநாயகர்
Page 1 of 1 • Share
ஆறுமுக விநாயகர்
-
-
ஆனைமுகக் கடவுள் ஆறுமுகங்களுடன் அருள்பாலிக்கும்
அரிய தலம், பழநி அருகேயுள்ள சண்முகாநதி.
இங்கு விநாயகப் பெருமான் அற்புதக் கோலம் கொண்டிருப்பது
எதனால்?
சூரனை வீழ்த்தியதும், உக்கிரகம் தணியாமல் இருந்தாராம்
முருகக் கடவுள். தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக
அவர் முன் ஆறுமுகங்களைக் காட்டியபடி நின்றாராம் விநாயகர்.
தன்னைப்போல் அண்ணன் இருப்பதைக் கண்டு சிரித்ததில்
கந்தப் பெருமானின் கடும் கோபம் காணாமல் போனதாம்.
அதன் அடிப்படையில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு
சண்முகா நதிக்கரையில் ஆறுமுக விநாயகரை பிரதிஷ்டை
செய்து ம்கள் வழிபட்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு மலையிலிருந்து உற்பத்தியாகும்
பச்சையாறு, வரதமா ஆறு (வரத்தாறு), பாலாறு, பொருந்தலாறு, கல்லாறு,
முள்ளாறு என ஆறு நதிகளும் பழநி மலைக்கு அருகே ஒரு இடத்தில்
சங்கமிக்கின்றன.
முருகப் பெருமானின் ஆறு அவதாரத்தைக் குறிக்கும் வகையில் அந்த
ஆறு நதிகளும் ஒன்றிணைந்து, ‘சண்முகா நதி’ என்ற பெயருடன் வடக்கு
நோக்கிப் பாய்கிறது. அதன் கரையில் பிற்காலத்தில் உருவான ஊரும்,
‘சண்முகாநதி’ என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது.
இங்கு ஜெய ஆஞ்சநேயர், சுந்தர விநாயகர் மற்றும் தோகையடி விநாயகர்
என மூன்று சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. அதில் சுந்தர விநாயகர்
கோயிலில்தான் பழமையான ஆறுமுக விநாயகர் தரிசனம் கிடைக்கிறது.
கிழக்கு நோக்கிய ஆலயங்களுக்குச் செல்லும் வழியில் வில்வ மரத்தைத்
தொடர்ந்து சிறிய ஆலயத்தில் கருவறையில் ஜெய ஆஞ்சநேயரும்,
வெளியே வீர ஆஞ்சநேயரும் சேவை சாதிக்கிறார்கள். அடுத்துள்ள
பழமையான ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் முன்பக்கம் ஐந்து முகம்,
பின் பக்கம் ஒரு முகம் என ஆறுமுகங்களுடன் ஆதிகாலத்தில் பிரதிஷ்டை
செய்யப்பட்ட ஆறுமுக விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இவர் பெயராலேயே ஆலயம் பிரபலமாகியுள்ளது.
அடுத்துள்ள கருவறையில் சுந்தர விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
பாதுகாப்புக் கருதி, வள்ளி – தெய்வானை சமேத முருகர், நாக கன்னியம்மன்
ஆகியோரையும் பிற்காலத்தில் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஆண்டித் திருக்கோலத்தில் முருகன்,
காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், காளியம்மன் ஆகியோர் தனிச்
சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நந்தியம்பெருமான் தரிசனமும்
கிடைக்கிறது.
இக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனிக்கோயிலில் கருவறையில்
தோகையடி விநாயகர் அருள்காட்சி தருகிறார். இவர் சன்னதியின் முன்பாக
சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆறுமுக விநாயகப் பெருமானும்,
ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்தவாறு சண்முக நாதர் என்ற திருநாமத்துடன்
முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.
அண்ணன், தம்பியின் இந்த ஆறுமுக அருட்காட்சி முன்பு சொன்ன புராண
சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளது.
அருகே போகரும், புலிப்பாணி சித்தரும் காட்சி தருகின்றனர். கிரகதோஷங்கள்
நீங்க இங்குள்ள நவகிரக சன்னதியில் தினமும் மாலை நான்கு மணியளவில்
விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகி்ன்றன.
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆறுமுக விநாயகர்
![ஆறுமுக விநாயகர் BCNgn26gTBCrSuod20lZ+E_1472462205](https://www.filepicker.io/api/file/bCNgn26gTBCrSuod20lZ+E_1472462205.jpeg)
-
இப்பகுதியில் தைபூசம், ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய நாட்களில்
பழநி முருகப்பெருமானுக்கு வேண்டிக் கொள்பவர்கள் இங்கு வந்து
ஆறுமுக விநாயகரை வணங்கிய பிறகுதான் அலகு குத்திக் கொள்வார்களாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் காலை முதல் விசேஷ வழிபாடுகள் இத்தலத்தில்
நடைபெறுகின்றன.
ஆறுமுக விநாயகரை வணங்கினால் மனசஞ்சலம் விலகி, மன நிம்மதி கிட்டும்,
சகல ஞானங்களையும், யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில்
நீராடிவிட்டு சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.
ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, சீரகம் மற்றும் நல்லெண்ணெய்
கலந்து ஆறுமுக விநாயகருக்குப் படைத்தால் வியாபாரம் விருத்தியாகும்.
கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கை.
எங்கே இருக்கு:
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ.
தொலைவில் சண்முகா நதி ஆறுமுக விநாயகர் ஆலயம் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 – இரவு 7
–
—————————————————–
– செ.சு. சரவணகுமார்,
-சென்னிவீரம்பாளையம்
நன்றி- குமுதம் பக்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» விநாயகர் துதி பாடல்கள்
» விநாயகர் -திருவுருவம் - ஒரு புரிதல்
» சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
» விநாயகர் அகவல்
» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
» விநாயகர் -திருவுருவம் - ஒரு புரிதல்
» சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
» விநாயகர் அகவல்
» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|