Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி
மூலவர் : வெங்கடாசலபதி
உற்சவர் : ஸ்ரீ தேவி பூதேவி
அம்மன்/தாயார் : பத்மாவதி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : தெப்பக்குளம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : பர்பகுளம்
ஊர் : கிருஷ்ணாபுரம்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா - 11 நாள் திருவிழா, வைகுண்ட ஏகாதசி - அன்று 5 லட்சம் பக்தர்கள் கூடுவர். காணும் பொங்கல் தினம் அன்றும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் கோயிலில் விசேச அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். வாரத்தின் சனி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தல சிறப்பு:
இங்குள்ள சிற்பங்கள் உலக அளவில் புகழ்பெற்ற சிற்பங்களாக விளங்குவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் கிருஷ்ணாபுரம் - 627 759 திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
இத்தலத்திற்கு அருகில் அகத்தீஸ்வரர் திருக்கோயில், காசிநாதசுவாமி திருக்கோயில், தென்னழகர் திருக்கோயில், கிருஷ்ணசுவாமி திருக்கோயில், நீலமணிநாத சுவாமி திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
இத்தலத்து பெருமாளை வணங்குவோர்க்கு கல்யாணவரம், குழந்தை வரம் ஆகியவை கிடைக்கும். மேலும் வியாபார விருத்தி, குடும்ப சந்தோசம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்தில் அந்த முடிகாணிக்கையை நிறைவேற்றுகிறார்கள். பத்மாவதி தாயாருக்கு பட்டு புடவை சாத்தியும், பால், பஞ்சாமிர்தம் படைத்தும், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
பெருமாள் நின்ற கோலம்
கலை நுணுக்கம் வாய்ந்த உயிரோவியங்களாய் காட்சி தரும் 16ம் நூற்றாண்டு கருங்கல் சிற்பங்கள்.
வெண்கல ஓசை எழுப்பும் கற்சிலைகள்.
தென்திருப்பதியாக விளங்குகிறது. கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் என்றால் அவை உலக அளவில் புகழ்பெற்றது என்றே சொல்கிறார்கள். அத்தனை நுணுக்கமாகவும் அழகுணர்ச்சியோடும், கல்லும் பேசுமோ என வியக்க வைக்கும் அளவிற்கு சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் அங்க உருவங்கள் அணிகலன்களோடு காண் போரை ஒரு நிமிடம் ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும்.
தல வரலாறு:
16ம் நூற்றாண்டுக் கோயில் இது. கோயிலுக்கென்று புராண வரலாறு ஏதும் இல்லை என்றாலும் மிகச் சிறந்த சிற்ப கலைக் கூடமாக திகழ்கிறது. சிற்பி ஒருவன் பாறையை பார்க்கிறான்.அப்பாறையில் இயற்கையாக செந்நிற ரேகைகள் ஓடுவதை காண்கிறான். அந்த பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடுகிறது.அவன் எண்ணத்தில் உருவான கற்பனை கதை எழ அதில் தன் உளி வேலையை காட்டுகிறது. பாறையைக் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் இரத்தப் பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது.அந்த சிலை வடிவை தூணாக நிறுத்தி விடுகிறான் சிற்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்ததுதான் கிருஷ்ணாபுரத்து கோயில் சிற்பங்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
சிறப்பம்சம்:
விஞ்ஞானம் அடிப்படையில்: இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,கிருஷ்ணாபுரம் ,திருநெல்வேலி
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
» கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி
» திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» சங்காணி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
» கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி
» திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலி
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» சங்காணி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|