Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கிழிந்து கிழியாத பக்கங்கள் ------முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
கிழிந்து கிழியாத பக்கங்கள் ------முஹம்மத் ஸர்பான்
கிழிந்து கிழியாத பக்கங்கள்
----------------------------------------------
குயில்களின் கூட்டுக்குள்
காக்காய்கள் கரைகின்றது.
சிங்கத்தின் ராஜ்ஜியத்தில்
மான்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
***
ஆமையும் நத்தை ஓட்டுக்குள்
நுழைய பங்கு கேட்கிறது.
கொட்டப்படும் மழைத்துளிகள்
எங்கே விழுவதென்று சிந்திக்கின்றன.
***
நீலக்கடலிலுள் மூர்ச்சையாகி
கரை ஒதுங்குகிறது மனித மீன்கள்.
ஜடமாகியும் விலை போகிறது
சந்தையிலுள் வலை மீன்கள்.
***
தாய் நாட்டில் உரிமையிழந்தவன்
பாலைவன ஒட்டகமானான்.
மந்தைகளுக்கும் இடமுண்டு.அடைகாக்க,
ஆறறிவு மந்தைகளுக்குத்தான் மனமில்லை.
***
மதப்போரின் சடலங்கள்
மண்ணுக்கு போர்வையாகிறது,
ஓதப்படுவதோ இங்கே
பேதமற்ற ஒருமைப்பாடு.
***
கருவறை பிளந்து சேய்
பார்த்தது அறிவின்மைக் காலம்.
தாயை வெட்டி சேய்
உடமை பறிப்பது நிகழ்காலம்.
***
பிணக்காடுகள் நிரம்பிவிட்டது,
கடல் நிலமும் வற்றிவிட்டது.
மண்ணில் உதிரவலைகள்
வேகமாய் சங்கமமானதால்....,
***
துப்பாக்கி முனையின் விளிம்பில்
அகிலம் அடிமையாயிற்று..,
நரமாமிசம் உண்ணும் மிருகங்களும்
தவறுதலாக மண்ணில் பிறந்து விட்டது.
***
அன்று மிருகத்தை வதை
செய்து நிர்வாணம் போக்கினார்கள்.
இன்று மனிதனே மனிதனை
அழிப்பதால் காலமும் ரசிக்கிறது.
***
சிலுவை ஏந்தி குற்றம்
செய்தவன் விடுதலையாகிவிட்டான்.
நீதிமன்றத்தின் சட்டக் கூண்டுக்குள்
கைதியாகி நிற்பதோ நான்கு வேதநூல்கள்.
***
கூண்டுக்கிளிகளை சிலந்தி
வலைகள் விழாமல் பிடித்துக்கொள்ளலாம்.
ஐந்தறிவு மிருகமும் ஆறறிவு மனிதனாய்
மாறாத வரையில்...........,
***
உதிரம் படிந்து சலவையாகாத
நோட்டுக்கள் தான் ஒருவனின்
ஆயுளை தீர்மானிக்கும்
காலக் கணிதமாகிறது.
***
பெண் தேகம் காமநாய்களால்
கடித்து துப்பப்படுகின்றது.
அநீதிக்கு கண் கட்டப்பட்ட நீதி
தேவதையும் விளக்குப் பிடிக்கின்றாள்.
***
தலை வலியென வைத்தியசாலை
சென்றவன் பிரதமாகி வீடு வந்தான்.
பாமரனின் திசுக்கள் திருடப்பட்டன,
வைத்தியனும் அறியாதவற்றை நோய்கள் என்கின்றான்,
***
வாழ்க்கை துளித்துளியாய்
வற்றிக் கொண்டிருக்கிறது,
நிம்மதிக்காய் மண்ணறை வீடுகளும்
மரணச்சாவியால் திறக்கப்படுகிறது.
***
மனித இனத்தின் புத்தகத்தில்
எண்ணற்ற விடையில்லா கேள்விகள்
அவற்றில் இவையே...........!
கிழிந்தும் கிழியாத பக்கங்கள்.
***
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: கிழிந்து கிழியாத பக்கங்கள் ------முஹம்மத் ஸர்பான்
இன்றைய சமூகத்தின் அவல நிலையை தோலுரிக்கும் கவிதை பகிர்வுக்கு நன்றி mohammed sarfan.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» புன்னகை -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» புன்னகை -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|