Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருவக்கரை திருக்கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருவக்கரை திருக்கோயில்
திருவக்கரை திருக்கோயில் ஸ்தல புராணம்
இறைவர் திருப்பெயர் : சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.Thiruvakkarai Temple sthala puranam
இறைவியார் திருப்பெயர் : அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்துபோயிற்று.
மற்றொன்று சிதிலமாகியுள்ளது)
வழிபட்டோர் : வக்கிராசுரன்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - கறையணி மாமிடற்றான்.
தல வரலாறு
- வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருந்துகின்றது.
- குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.
சிறப்புகள்
- "வராகநதி " என்றழைக்கப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாக உள்ளது; மிகப் பழமையான தலம்.
- மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள 'சிலிகா ' என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊருருவி, மர அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில் பூமிக்குக்கீழ் உள்ள உப்பு நீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக (நிலக்கரியாக) மாறின என்றும்; இங்கு வெள்ளையாக மாறின என்பதும் அறிவியற் செய்தியாகும். இப்பகுதிக்குப் பக்கத்திலுள்ள, 'செம்மேடு' என்னுமிடத்தில் நிலவியல் துறையினரால் 'முதுமக்கள் தாழி 'யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- ராஜகோபுரத்தின் இடப்பக்கம் "வக்கிரகாளி " உள்ளது; இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. பௌர்ணமியில் அம்பாளுக்கு விசேஷம்.
- சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது.
- சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.
- உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது; இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர்.
- அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது; இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர்.
- நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று, 'பெரும்பாக்கம் ' என்னும் இடத்தில் பிரியும் கிளைப் பாதையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம்.
திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று, 'பெரும்பாக்கம் ' என்னும் இடத்தில் பிரியும் கிளைப் பாதையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திருவக்கரை திருக்கோயில்
நல்லதொரு ஆன்மீக பதிவிற்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
» அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சீபுரம்
» அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சீபுரம்
» அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|