தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பனிக்காலம் பாதிக்காமல் இருக்க...

View previous topic View next topic Go down

பனிக்காலம் பாதிக்காமல் இருக்க... Empty பனிக்காலம் பாதிக்காமல் இருக்க...

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 3:44 pm

பனிக்காலத்தில் குறிப்பாக மார்கழியிலேயே சில நலவாழ்வு சூத்திரங்களை கவனமாக பின்பற்ற வேண்டும்.

மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக வைரஸ் நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் தடுமாற்றங்கள் ஏற்படும்.

இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்சில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. மேலும் இன்புளுயன்ஸô காய்ச்சல், நிமோனியா சுரம், ஒற்றைத் தலைவலி, மூட்டுவலிகள், நரம்பு நோய்கள், தோல் நோய்கள் ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகிவிடுகிறது.

காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் சுரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையும், முதியோர்களையும் இவை தாக்கி நிலைகுலையச் செய்கின்றன.

பனிக்காலத்தில் உடலைப் பாதுகாக்க ...

நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள். வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிக்கவும். பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, சொட்டர், மப்ளர், பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளவும்.

தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். எனவே பிறர் நலன் கருதி, கைக்குட்டையை பயன்படுத்துங்கள்.

பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். மூலிகை கொசு விரட்டிகள் பயன்படுத்துங்கள். வீட்டை, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரித்து கொசுக்களைக் குறையுங்கள்.

சற்று இறுக்கமான ஆடைகள், கம்பளி கையுறை, காலுறைகள் அணிந்து கொள்ளுங்கள்.

மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள். பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள்.

உதடுகள் வெடிக்காமலிருக்க எண்ணெய், நெய், பாலேடு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.

பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள். தாகம் குறைவாக இருந்தபோதிலும் ஓரளவேணும் நீர் அருந்தாவிட்டால் உடல் வறட்சியும், தோல் வறட்சியும் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல் காரணமாகவும் தோல் பாதிக்கும். வறண்ட தோல் உள்ளவர்களுக்கு பனிகாலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்படும். மலச்சிக்கலில்லாமல் தவிர்க்க பப்பாளி, ஆப்பிள் சாப்பிடலாம். மார்கழியில் மிளகை மறக்காதீர்கள் - பனிக்காலச் சளிக்கு இது நல்ல மருந்து. குளிரில் தேவைப்படும் வெப்பத்தையும், ‘மிளகு’ தரும். பொங்கலில், ஆம்லேட்டில், அடையில், அவியலில், பாலில் என எதிலும் சற்று கூடுதலாக மிளகைப் பயன்படுத்துங்கள். பனைவெல்லம், பனங்கற்கண்டு சேர்ந்த இனிப்புப் பண்டங்கள் நல்லது. வெல்லப் பனியாரம், அதிரசம் தயார்செய்து சாப்பிடுங்கள்.

காலையில் சுக்கு மல்லி காபி, இரவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்த பால் அருந்தலாம். பகலில் தூதுவளை ரசம், காய்கறி சூப், மாலையில் சுண்டல் சாப்பிடலாம்.

பனிக்காலத்தில் (முடியும் வரை) முடிந்த வரை ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. காலைப் பனியில் நடைப்பயிற்சி வேண்டாம். மாலையே நல்லது.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum