தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

View previous topic View next topic Go down

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி Empty நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

Post by rammalar Thu Jul 28, 2016 5:18 pm


ஊக்கமருந்து பயன்படுத்தியதாகப் பிடிபட்டிருக்கும் மல்யுத்த
வீரர் நார்சிங், தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராயிடை
கலந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நடத்தப்
பட்ட சோதனையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த
மல்யுத்த வீரர் நார்சிங், தடைசெய்யப்பட்ட ஒருவகையான
ஸ்டீராய்ட் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது.
-
'தான் குற்றமற்றவன் , ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை...!' எனவும்
நார்சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ
விசாரணைக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் நார்சிங் வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
-
இந்த நிலையில் ,ஹரியானாவில் சோன்பேட் காவல் நிலையத்தில்
நார்சிங் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ''சோன்கபட் சாய் மையத்தில்
பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராய்டை
கலந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
-
டெல்லியில் உள்ள சத்ரசால் மையத்தில் மல்யுத்த பயிற்சி எடுத்து வரும்
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் ஜூனியர் வீரர் அவர்
எனவும் நார்சிங் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி Empty Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

Post by rammalar Thu Jul 28, 2016 5:19 pm

[img]நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி R0uxol[/img]
-

நார்சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள வீரரின் பெயரை போலீஸ்
வெளியிடவில்லை. நார்சிங் குறிப்பிட்டுள்ள அந்த இளம் வீரர் ஒலிம்பிக்கில்
இரு முறை வெண்கலம் வென்றுள்ள, சுஷில்குமாரின் பயிற்சியாளரும்
மாமனாருமான சத்பால் சிங்கிடம், டெல்லி சத்ரசால் மைதானத்தில்
பயிற்சி எடுத்து வருகிறாராம். இதே மையத்தில்தான் சுஷில் குமாரும்
பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  
-
அது மட்டுமல்ல, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்த மற்றொரு மல்யுத்த
வீரரான சந்தீப் சிங்கும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருந்தார்.
இவரும் நார்சிங்கும் சோன்பட் சாய் மையத்தில் ஒரே அறையில்
தங்கியிருப்பவர்கள். ஒரே அறையில் தங்கியிருந்த இரு வீரர்கள் ஒலிம்பிக்கில்
பங்கேற்க தகுதி பெற்றும், ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருப்பது
பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.
-


Last edited by rammalar on Thu Jul 28, 2016 5:20 pm; edited 1 time in total
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி Empty Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

Post by rammalar Thu Jul 28, 2016 5:19 pm


இது குறித்து சத்பால் சிங் கூறுகையில், ''இந்த விவகாரத்தில் நார்சிங்
போலீசில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம். உண்மையை வெளிக்
கொண்டு வர உதவியாக இருக்கும். சத்ரசால் மைதானத்தில் பயிற்சி
எடுத்த எந்த வீரராவது இத்தகைய செயலை செய்திருந்தால் அவர்
கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
-
இங்கே 300 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர். எனக்கு நார்சிங்
குறிப்பிட்டுள்ள அந்த வீரரின் முகம் ஞாபகம் இல்லை'' என பதில்
அளித்துள்ளார்.
-
நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த இளம் வீரர் தற்போது
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் போட்டியிடும்
மல்யுத்த வீரரின் சகோதரர் என்ற தகவலும் இருக்கிறது.
தற்போது 17 வயதே நிரம்பிய அந்த வீரர் பிரான்சில் நடைபெறவிருந்த
ஜூனியர் அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க கடந்த ஜூன்
மாதத்தில் சாய் மையத்தில், பயிற்சியில் இருந்திருக்கிறார்.
-
ஜூன் 5ம் தேதி சோன்பட் சாய் மையத்தில் வீரர் ஒருவர் மதிய
உணவில் எதையோ கலந்ததாகவும் அப்போது அவரை சமையல்காரர்
கையும் களவுமாக பிடித்ததாகவும் பின்னர் அந்த உணவு கொட்டப்பட்டது
என்றும் இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பிரிஜ்புஷன் சரண் தற்போது
ஒப்புக் கொண்டுள்ளார்.
-
இப்போது சமையல்காரரை வைத்து அந்த வீரரை அடையாளம் காணும்
பணி நடந்து வருகிறது. அவர் பிடிபட்டதும் நார்சிங் அறைக்கு
எப்போதாவது சென்றுள்ளாரா என்பது குறித்து நார்சிங் முன்னிலையில்
விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள
சமையல் அறை சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் சோதிக்கப்
படவுள்ளன.
-
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மல்யுத்த வீரர்
யோகேஷ்வர் தத், நார்சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் தளத்தில், ''நார்சிங் ஊக்க மருந்து விவகாரத்தில்
சிக்கியதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் அவர் இத்தகைய
காரியத்தை செய்திருக்க மாட்டார்.
-
முழுமையாக விசாரணை செய்து உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்''
என கூறியுள்ளார்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி Empty Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

Post by rammalar Thu Jul 28, 2016 5:21 pm

இது குறித்து நார்சிங் கூறுகையில், ''நான் மிகச்சிறப்பாகப் பயிற்சியில்
ஈடுபட்டு வருகிறேன். ஊக்க மருந்து எடுக்க வேண்டுமென்ற எந்த
அவசியமும் எனக்கு இல்லை. சாய் உணவகத்தில் தண்ணீரில், உணவில்
யார் வேண்டுமானாலும் எதையும் கலந்து விட முடியும்.
-
இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து பல முறை மல்யுத்த சங்க
நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும்
இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்.அதற்கு இந்திய ஒலிம்பிக்
சங்கம் உதவ வேண்டும் ''என்கிறார்.
-
நார்சிங் உடலில் கலந்திருப்பதாகச் சொல்லப்படும் மெத்தாடினினோன்
என்ற ஸ்டீராய்ட் இந்தியாவில் பிரபலமானது அல்ல. கடந்த ஜூலை
16 ம் தேதி வரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக 46 வீரர்
வீராங்கனைகள் சிக்கியுள்ளனர். அதில் மெத்தாடினினோன் ரக
ஸ்டீராய்டை பயன்படுத்தியதாக யாரும் பிடிபடவில்லை. வெளிநாடுகளில்
பாடி லிஃப்டர், பவர் லிஃப்டர், வெயிட் லிஃப்டர் ஆகியோரிடையே இந்த ரக
ஸ்டீராய்டு வெகு பிரபலம். இந்தியாவைப் பொறுத்தவரை சில ஓட்டப்
பந்தய வீரர்கள் மெத்தாடினினோன் பயன்படுத்தி சிக்கியுள்ளனர்.
-
கடந்த 2015ம் ஆண்டு லாஸ்வேகாசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்
போட்டியில் வெண்கலம் வென்றதால், நார்சிங், கோட்டா அடிப்படையில்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றிருந்த சுஷில்குமார், டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம்
நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
-
இதையடுத்து நார்சிங் ரியோ ஒலிம்பிக்கிற்காக தீவிரமாகத் தயாராகி
வந்தார். தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால் ரியோ
ஒலிம்பிக்கில் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் எந்த இந்திய வீரரும் கலந்து
கொள்ள முடியாத நிலை உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதி
விலக்களித்தால் மட்டுமே மாற்று இந்திய வீரர் பங்கேற்க முடியும். எனினும்
நார்சிங்கிற்கு பதிலாக பர்வீன் ராணாவை இந்திய மல்யுத்த சங்கம் மாற்று
வீரராக அறிவித்து ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
-
இந்த சோகத்திற்கிடையே நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த
ஜூனியர் வீரர், சுஷில்குமாரின் மாமனாரும் பயிற்சியாளருமான சத்பால்
சிங்கிடம் பயிற்சி பெற்று வருபவர் என்பது மல்யுத்த வீரர்களிடையே பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
சினிமாவில்தான் இது போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்தியாவில்
நிஜத்திலும் நிகழ்ந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை
உண்டாக்கியுள்ளது.
-
நாடாளுமன்றத்தில் நார்சிங் விவகாரம்
-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகேயுள்ள அக்காரா என்ற
கிராமம்தான் நார்சிங் யாதவின் சொந்த ஊர்.
இந்த கிராமமக்கள் நார்சிங்கிற்கு ஆதரவாக போராட்டத்தில்
குதித்துள்ளனர். வாரணாசியில் பிரதமர் மோடியின் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
-
நார்சிங் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், இது குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பினார். '' நார்சிங் தவறு செய்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது. ஆனால், அவர் கேட்பது போல இந்த விவகாரத்தில்
சிபிஐ விசாரணைக்கு உத்ததரவிட வேண்டும்'' என அவர் கேட்டுக்
கொண்டார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர்,
எஸ். எஸ். அலுவாலியா,'' உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் ''
என உறுதியளித்தார்.
-
--------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி Empty Re: நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum