Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
Page 1 of 1 • Share
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான
நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு
ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்
நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு
போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார்.
தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5)
அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும்
விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
“”கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான தெரஸாவை
புனிதராக அறிவிக்கிறோம்” என்று போப் பிரான்சிஸ் லத்தீன் மொழியில்
அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தாயன்பின் வடிவமாகவும், ஏழைகளின் ஆதரவு சக்தியாகவும் விளங்கியவர்
அன்னை தெரஸா. அவரை “புனிதர் தெரஸா’ என்று நாம் அழைப்பதற்கு
சிரமமாக இருக்கலாம்.
அவரது புனிதத்தன்மை எப்போதும் நமக்கு அருகிலேயே இருப்பதால்,
நாம் நம்மை அறியாமலேயே அவரை அன்னை தெரஸா என்று
அழைக்கிறோம்.
“ஒருவருடைய மொழி தெரியாவிட்டாலும், அவரைப் பார்த்து புன்னகைப்பேன்’
என்று தெரஸா கூறுவார். அதேபோல், நாமும் அவரது புன்னகையை
உளப்பூர்வமாக சுமந்து சென்று, நமது வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும்
மக்களிடம், குறிப்பாக துன்பத்தில் உழல்பவர்களிடம் உதிர்ப்போம்.
இந்திய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் தெரஸா தொண்டாற்றியது,
ஏழைகளின் அருகில் இறைவன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது என்றார்
போப் பிரான்சிஸ்.
இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டு அரசி சோஃபியாவும்
விழாவில் கலந்து கொண்டார்.
இதுதவிர, தெரஸாவின் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பைச் சேர்ந்த
கன்னியாஸ்திரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த அமைப்பில்
தங்கியுள்ள ஏழை மக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து
கொண்டனர். பின்னர், அந்த ஏழைகளுடன் போப் பிரான்சிஸ் உணவருந்தினார்.
அவர்களுக்கு கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் விருந்து உபசரித்தனர்.
நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு
ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்
நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு
போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார்.
தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5)
அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும்
விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
“”கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான தெரஸாவை
புனிதராக அறிவிக்கிறோம்” என்று போப் பிரான்சிஸ் லத்தீன் மொழியில்
அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தாயன்பின் வடிவமாகவும், ஏழைகளின் ஆதரவு சக்தியாகவும் விளங்கியவர்
அன்னை தெரஸா. அவரை “புனிதர் தெரஸா’ என்று நாம் அழைப்பதற்கு
சிரமமாக இருக்கலாம்.
அவரது புனிதத்தன்மை எப்போதும் நமக்கு அருகிலேயே இருப்பதால்,
நாம் நம்மை அறியாமலேயே அவரை அன்னை தெரஸா என்று
அழைக்கிறோம்.
“ஒருவருடைய மொழி தெரியாவிட்டாலும், அவரைப் பார்த்து புன்னகைப்பேன்’
என்று தெரஸா கூறுவார். அதேபோல், நாமும் அவரது புன்னகையை
உளப்பூர்வமாக சுமந்து சென்று, நமது வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும்
மக்களிடம், குறிப்பாக துன்பத்தில் உழல்பவர்களிடம் உதிர்ப்போம்.
இந்திய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் தெரஸா தொண்டாற்றியது,
ஏழைகளின் அருகில் இறைவன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது என்றார்
போப் பிரான்சிஸ்.
இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டு அரசி சோஃபியாவும்
விழாவில் கலந்து கொண்டார்.
இதுதவிர, தெரஸாவின் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பைச் சேர்ந்த
கன்னியாஸ்திரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த அமைப்பில்
தங்கியுள்ள ஏழை மக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து
கொண்டனர். பின்னர், அந்த ஏழைகளுடன் போப் பிரான்சிஸ் உணவருந்தினார்.
அவர்களுக்கு கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் விருந்து உபசரித்தனர்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
இந்தியாவில் இருந்து…: விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டெரீக் ஓ’ பிரையன், சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு செயின்ட் பீட்டர் சதுக்கத்திலும்,
அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திறந்த வேனில் பயணம்
செய்து ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
கொல்கத்தாவிலும்…: இதனிடையே, வாடிகன் நகரில் நடைபெற்ற
வண்ணமயமான விழா, கொல்கத்தாவிலும் பிரதிபலித்தது.
கொல்கத்தாவில் தெரஸாவின் சேவை அமைப்பின் தலைமையகத்தில்
அமைந்துள்ள அவரது கல்லறையில் பூச்செண்டுகள் வைத்தும்,
மெழுகுவர்த்திகள் ஏற்றியும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
“”மகிழ்ச்சியும், ஆசிர்வாதமும், நன்றியுணர்வும் நிறைந்த நாள் இது”
என்று அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த சகோதரி லிஸா
கூறினார்.
மாசிடோனியாவில் கடந்த 1910-ஆம் ஆண்டில் பிறந்த அன்னை தெரஸா,
தனது 19-ஆவது வயதில் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா
வந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற
சேவை அமைப்பைத் தொடங்கிய தெரஸா, ஏழைகளின் துயரம்
போக்குவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சுமார்
40 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது வாழ்நாளின் பெரும்பகுதியை
இந்தியாவிலேயே கழித்தார்.
அவருடைய அளப்பரிய சேவையைக் கெüரவிக்கும் வகையில்,
கடந்த 1979-ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது.
அவர், கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக,
கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரஸாவுக்கு
அருளாளர் பட்டம் அளித்தார். அதைத் தொடர்ந்து, தெரஸாவுக்குப் புனிதம்
பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம்
அறிவித்திருந்தார்.
–
———————————
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டெரீக் ஓ’ பிரையன், சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு செயின்ட் பீட்டர் சதுக்கத்திலும்,
அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திறந்த வேனில் பயணம்
செய்து ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
கொல்கத்தாவிலும்…: இதனிடையே, வாடிகன் நகரில் நடைபெற்ற
வண்ணமயமான விழா, கொல்கத்தாவிலும் பிரதிபலித்தது.
கொல்கத்தாவில் தெரஸாவின் சேவை அமைப்பின் தலைமையகத்தில்
அமைந்துள்ள அவரது கல்லறையில் பூச்செண்டுகள் வைத்தும்,
மெழுகுவர்த்திகள் ஏற்றியும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
“”மகிழ்ச்சியும், ஆசிர்வாதமும், நன்றியுணர்வும் நிறைந்த நாள் இது”
என்று அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த சகோதரி லிஸா
கூறினார்.
மாசிடோனியாவில் கடந்த 1910-ஆம் ஆண்டில் பிறந்த அன்னை தெரஸா,
தனது 19-ஆவது வயதில் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா
வந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற
சேவை அமைப்பைத் தொடங்கிய தெரஸா, ஏழைகளின் துயரம்
போக்குவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சுமார்
40 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது வாழ்நாளின் பெரும்பகுதியை
இந்தியாவிலேயே கழித்தார்.
அவருடைய அளப்பரிய சேவையைக் கெüரவிக்கும் வகையில்,
கடந்த 1979-ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது.
அவர், கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக,
கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரஸாவுக்கு
அருளாளர் பட்டம் அளித்தார். அதைத் தொடர்ந்து, தெரஸாவுக்குப் புனிதம்
பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம்
அறிவித்திருந்தார்.
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில் சுஷ்மா
» பட்டம்
» பிரிட்டனில் இந்தியருக்கு ‘சர்’ பட்டம்
» ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள்!
» தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கிறார்..?
» பட்டம்
» பிரிட்டனில் இந்தியருக்கு ‘சர்’ பட்டம்
» ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள்!
» தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கிறார்..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|