Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிள்ளையார் சுழி வந்தது எப்படி?
Page 1 of 1 • Share
பிள்ளையார் சுழி வந்தது எப்படி?
\\
தமிழ் எழுத்துகள் இயற்கை வடிவமான வட்ட வடிவிலானவை என்றும், அவ்வடிவத்தை விரைந்து எழுதும் பொழுது அதன் முடிவு நீளக் கோட்டில் முடியுமென்றும் எழுதத் தொடங்குவர். இதனால், முதலில் வட்டமிட்டுப் பின் அதைக் கோடாக இழுத்த வழக்கம் ‘பிள்ளையார் சுழி’ ஆகிவிட்டது. ஏட்டில் எழுதும் போது எழுதுகோலின் சீர்மையையும்,ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது.
பிள்ளையாரின் முகத் தோற்றம் ஓ என்றும் ஓம்என்றும், பிரணவத்தைச் சுருக்கமாக ‘உ’ என்று முன்னெழுதி மற்றவைகளைப் பின்னெழுதுவது சுவடி எழுதுபவரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தின் கூட்டமாகிய பிரணவத்தின்
அகரம் – சிவம்,
உகரம் – சக்தி,
மகரம் – மலம்,
நாதம் – மாயை,
விந்து – உயிர் ஆகும்.
இவற்றுள் அகர உகரமாக இருக்கும் பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை என்கிறார்கள். திருமூலர் அகாரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகாரமாகிய உயிர், உகாரமாகிய இறைவனோடு இணைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழி என்று முனைவர் வே. ரா. மாதவன் குறிப்பிடுகிறார்.
பிரணவத்தின் ஐந்து கூறுகளில் அகரத்திற்குப் பிரமனும், உகரத்திற்குத் திருமாலும், மகரத்திற்கு உருத்திரனும், விந்துவிற்கு மகேசனும், நாதத்திற்கு சதாசிவனும் ஆதி தெய்வங்களாவார்கள். எழுதத் தொடங்குவது இலக்கியப் படைப்பைக் குறிக்கும். அதற்கு முன் பிரமன் ஆதி தெய்வமாகக் கொண்ட அகரத்தின் வட்ட வடிவமான குறியையும், எழுதப் பெறும் இலக்கியம் நின்று நிலை பெற வேண்டுமென்று திருமாலை ஆதித் தெய்வமாகக் கொண்ட உகரத்தின் நீள்கோடுக் குறியீடையும் இணைத்து ‘உ’ என்ற பிள்ளையார் சுழியாக எழுதினர் என்றும், அச்சுழி மூல மனுவாகிய பிரணவத்தின் சிதைந்த வடிவு என்றும் முனைவர் வே. ரா. மாதவன் மற்றொரு கருத்தாகக் குறிப்பிடுகிறார்.
ஓலையை எழுத எடுத்ததும், அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும், கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இந்த முதல் சுழிதான் இன்று பிள்ளையார் சுழியாகி இருக்கிறது என்று தோன்றுகிறது என்றாலும் இது நம் அறிவுப் பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை.
தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்துமே சுழியை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, தமிழ் எழுத்துகளை எழுத வேண்டுமாயின் சுழிக்கக் கற்றுக் கொள் என்று முன்னோர்கள் கூறுவார்கள். எனவே இந்த முறையை அமைத்ததாக கி.ஆ.பெ. விசுவநாதம் குறிப்பிடுகிறார். ஓலைச்சுவடிகளின் தொடக்கத்தில் ‘அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே துணை’ என்று எழுதப்பட்ட நிலை சமயச் சார்புற்று ‘அரி ஓம் நன்றாக’ என்று எழுதப்பட்ட காலத்தில் ஏட்டின் தொடக்கத்தில் பிள்ளையார் சுழி இடம் பெற்றது மட்டுமின்றிப் பாட்டின் முடிவிலும் பாடல் எண்களை அடுத்தும் இடம் பெற்றுள்ளமை இங்கு சுட்டத் தருவது. இவ்வாறு பிள்ளையார் சுழி பாடல் தொடக்கத்தையும், பாடல் முடிவையும், எண் முடிவையும் குறித்த குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிள்ளையார் வழிபாடு என்பதே தமிழகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. அதற்கு முன்பிருந்தே ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஏட்டின் சேர்பதம் பார்க்கச் சுழித்துப் பார்த்த நிலையைச் சமயப் பார்வை மிகுந்த பிற்காலத்தில் ‘பிள்ளையார் சுழி’ ஆக்கி விட்டனர் என்பதே இங்கு பொருத்தமாகும்.
ஆன்மிகம்
தமிழ் எழுத்துகள் இயற்கை வடிவமான வட்ட வடிவிலானவை என்றும், அவ்வடிவத்தை விரைந்து எழுதும் பொழுது அதன் முடிவு நீளக் கோட்டில் முடியுமென்றும் எழுதத் தொடங்குவர். இதனால், முதலில் வட்டமிட்டுப் பின் அதைக் கோடாக இழுத்த வழக்கம் ‘பிள்ளையார் சுழி’ ஆகிவிட்டது. ஏட்டில் எழுதும் போது எழுதுகோலின் சீர்மையையும்,ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது.
பிள்ளையாரின் முகத் தோற்றம் ஓ என்றும் ஓம்என்றும், பிரணவத்தைச் சுருக்கமாக ‘உ’ என்று முன்னெழுதி மற்றவைகளைப் பின்னெழுதுவது சுவடி எழுதுபவரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தின் கூட்டமாகிய பிரணவத்தின்
அகரம் – சிவம்,
உகரம் – சக்தி,
மகரம் – மலம்,
நாதம் – மாயை,
விந்து – உயிர் ஆகும்.
இவற்றுள் அகர உகரமாக இருக்கும் பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை என்கிறார்கள். திருமூலர் அகாரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகாரமாகிய உயிர், உகாரமாகிய இறைவனோடு இணைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழி என்று முனைவர் வே. ரா. மாதவன் குறிப்பிடுகிறார்.
பிரணவத்தின் ஐந்து கூறுகளில் அகரத்திற்குப் பிரமனும், உகரத்திற்குத் திருமாலும், மகரத்திற்கு உருத்திரனும், விந்துவிற்கு மகேசனும், நாதத்திற்கு சதாசிவனும் ஆதி தெய்வங்களாவார்கள். எழுதத் தொடங்குவது இலக்கியப் படைப்பைக் குறிக்கும். அதற்கு முன் பிரமன் ஆதி தெய்வமாகக் கொண்ட அகரத்தின் வட்ட வடிவமான குறியையும், எழுதப் பெறும் இலக்கியம் நின்று நிலை பெற வேண்டுமென்று திருமாலை ஆதித் தெய்வமாகக் கொண்ட உகரத்தின் நீள்கோடுக் குறியீடையும் இணைத்து ‘உ’ என்ற பிள்ளையார் சுழியாக எழுதினர் என்றும், அச்சுழி மூல மனுவாகிய பிரணவத்தின் சிதைந்த வடிவு என்றும் முனைவர் வே. ரா. மாதவன் மற்றொரு கருத்தாகக் குறிப்பிடுகிறார்.
ஓலையை எழுத எடுத்ததும், அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும், கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இந்த முதல் சுழிதான் இன்று பிள்ளையார் சுழியாகி இருக்கிறது என்று தோன்றுகிறது என்றாலும் இது நம் அறிவுப் பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை.
தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்துமே சுழியை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, தமிழ் எழுத்துகளை எழுத வேண்டுமாயின் சுழிக்கக் கற்றுக் கொள் என்று முன்னோர்கள் கூறுவார்கள். எனவே இந்த முறையை அமைத்ததாக கி.ஆ.பெ. விசுவநாதம் குறிப்பிடுகிறார். ஓலைச்சுவடிகளின் தொடக்கத்தில் ‘அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே துணை’ என்று எழுதப்பட்ட நிலை சமயச் சார்புற்று ‘அரி ஓம் நன்றாக’ என்று எழுதப்பட்ட காலத்தில் ஏட்டின் தொடக்கத்தில் பிள்ளையார் சுழி இடம் பெற்றது மட்டுமின்றிப் பாட்டின் முடிவிலும் பாடல் எண்களை அடுத்தும் இடம் பெற்றுள்ளமை இங்கு சுட்டத் தருவது. இவ்வாறு பிள்ளையார் சுழி பாடல் தொடக்கத்தையும், பாடல் முடிவையும், எண் முடிவையும் குறித்த குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிள்ளையார் வழிபாடு என்பதே தமிழகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. அதற்கு முன்பிருந்தே ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஏட்டின் சேர்பதம் பார்க்கச் சுழித்துப் பார்த்த நிலையைச் சமயப் பார்வை மிகுந்த பிற்காலத்தில் ‘பிள்ளையார் சுழி’ ஆக்கி விட்டனர் என்பதே இங்கு பொருத்தமாகும்.
ஆன்மிகம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பிள்ளையார் சுழி
» ஆயுதபூசை பெயர் வந்தது எப்படி?
» குரு பூர்ணிமா எப்படி வந்தது?
» ஆடித்தள்ளுபடி வந்தது எப்படி?
» கை நாட்டு வந்தது எப்படி?
» ஆயுதபூசை பெயர் வந்தது எப்படி?
» குரு பூர்ணிமா எப்படி வந்தது?
» ஆடித்தள்ளுபடி வந்தது எப்படி?
» கை நாட்டு வந்தது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|