Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
Page 1 of 1 • Share
கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
[You must be registered and logged in to see this link.]
கடன் - எச்சரிக்கை
கடன் வாங்கும் முன்பும் பின்பும்!
கவனிக்க வேண்டியது...[You must be registered and logged in to see this link.]
கடன் அன்பை மட்டும் முறிக்காது; சில நேரங்களில் தலையெழுத்தையே
மாற்றிவிடும். அவசரத் தேவைக்காக நாம் கடன் வாங்கும்போது பல விஷயங்களைப்
பார்ப்பதே இல்லை. வங்கியிலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடன்
பெறும்போது அவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு
கையெழுத்து போட்டுவிட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்வது வாடிக்கையான
விஷயமாகிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க கடன் வாங்கும்போதும், கடனை கட்டி
முடித்த பிறகும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டோம். கடன்
திரும்பச் செலுத்தியவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை
விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர்.
கடன் வாங்கும் முன்...!
''எந்த விதமான கடன் வாங்கப் போனாலும் சரி, அந்தக் கடன் தொகைக்கான வட்டி
எவ்வளவு? திருப்பி செலுத்துவதற்கான காலம் எவ்வளவு, முன்கூட்டியே கட்டினால்
அபராதம் உண்டா? இருக்கிறது என்றால் எத்தனை சதவிகிதம் என்பது போன்றவற்றை
எழுதி வாங்கிக் கொள்வது அவசியம். கடன் கொடுக்கும் போது எழுதி வாங்கப்படும்
கடனுறுதி சீட்டு எனப்படும் பிராமிசரி படிவத்தில் கடனுக்கான வட்டி,
திரும்பச் செலுத்தும் காலம், கடன் தொகை போன்றவை சரியாகக்
குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைப் பரிசோதித்த பிறகே கையெழுத்துப் போட
வேண்டும்.
கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை
வங்கியிடமிருந்து உரிய அதிகாரியின் கையெழுத்து மற்றும் வங்கியின்
முத்திரையுடன் பெற்றுக் கொள்வது அவசியம். வங்கியில் பிராமிசரி படிவத்தை
திருப்பித் தரமாட்டார்கள். ஆனால், அதன் மீது 'ரத்து செய்யப்பட்டுவிட்டது'
என்று எழுதி வங்கி அதிகாரி கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். இதனை
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கடன்
தொடர்பான ஆவணங்களையும், திரும்பச் செலுத்தியதற்கான ஆவணங்களையும்
பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். பிரச்னை என்றால் கையிலிருக்கும்
ஆவணங்கள் நிச்சயம் உதவும்'' என்றவர், மேலும் கவனிக்க வேண்டிய சிலவற்றையும்
அடுத்து விளக்கினார்.
கடன் வாங்கிய பிறகு...!
''வாகனக் கடன் வாங்கும்போது வங்கியின் பெயரில் ஆர்.சி. புக் இருக்கும்.
கடனைத் திருப்பிச் செலுத்திய பின்பு உங்களது பெயருக்கு ஆர்.சி. புக்கை
மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நீங்கள்
வாங்கிய கடனை பதிவு செய்து இருப்பார்கள். கடனைத் திரும்பச்
செலுத்தியதற்கான சான்றிதழை வங்கியில் இருந்து பெற்று ஆர்.டி.ஓ.
அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வாகனத்தின் மீது
இருக்கும் கடன் ரத்தாகும்.
மனை, வீட்டுப் பத்திரம் போன்ற அசையாச் சொத்துக்களின் ஆவணங்களை அடகு
வைத்திருந்தால் கடனை முழுவதும் திரும்பச் செலுத்திய பிறகு ஆவணங்களைச்
சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் அதே நேரத்தில், கடன் பாக்கி இல்லை
என்பதற்கான சான்றிதழ் மற்றும் வங்கிக்கு இனி அந்த சொத்து மீது எந்த
உரிமையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் (liability certificate)
வாங்கிக் கொள்வது அவசியம். மேலும், அடமானக் கடனை சார் பதிவாளர்
அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான
ரசீதை வங்கியிலிருந்து பெற்றுக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில்
அடமானத்தை ரத்துச் செய்யவேண்டும்.
நகையை அடகு வைக்கும்போது நகையின் எடையை மதிப்பிட்டு வாங்கும் வங்கிகள்
நகையைத் திருப்பும்போது எடை போட்டுத் தருவதில்லை. நகையின் எடை குறைய
வாய்ப்பிருப்பதால் நகையை திருப்பும் போதும் எடை போட்டு வாங்க வேண்டும்.
ஆனால், நடைமுறையில் இதை யாரும் செய்வதில்லை. என்னென்ன நகைகளை அடகு
வைத்திருக்கிறோம் என்பதை இரு தரப்பினரும் தெளிவாக எழுதி வைத்துக்
கொள்வதும் நல்லது'' என்றார்.
மஞ்சள் கடுதாசி...
சிலர் ஆ..ஊ.. என்றால் மஞ்சள் கடுதாசி கொடுத்திருவேன் என்று மிரட்டல்
தொனியில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் மஞ்சள் கடுதாசி
கொடுக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்டங்கள் என்னவென்று.
மஞ்சள் கடுதாசி என்ன சூழ்நிலைகளில் கொடுக்கப்படும்? அதனால் ஏற்படும்
விபரீதங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து மீள என்ன வழி? என்கிற
கேள்விகளுக்கான பதில் முக்கியமானவை. பலருக்கும் தெரியாதவை.
கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை, கடன் காரணமாக ஊரைவிட்டு
ஓடிவிடுவது, என்னால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாது என கடன்பட்டவருக்கு
கடிதம் போடுவது போன்ற காரணங்களால் 'ஆக்ட் ஆஃப் இன்சால்வன்சி'
சட்டத்தின்படி அவரை நீதிமன்றம் நொடிந்தவர் என்று அறிவிக்கும். நீதிமன்றம்
அப்படி அறிவித்த அன்றையத் தேதி வரை அவருக்குள்ள கடன்களை, அவர் பெயரில்
உள்ள எல்லா சொத்துகளையும் ஜப்தி செய்து, கடன் கொடுத்தவர்களுக்குப்
பிரித்துக் கொடுக்கும்.
அதன்பின் நீதிமன்றத்தில் தன்னை டிஸ்ஜார்ஜ் செய்யச் சொல்லி மஞ்சள் கடுதாசி
கொடுத்தவர் மனு செய்ய வேண்டும். நீதிமன்றமானது, மஞ்சள் கடுதாசி கொடுத்தவரை
அதிலிருந்து விடுவித்துவிட்டால் பிறகு அவர் புது வாழ்கையை ஆரம்பிக்கலாம்;
புதிய தொழிலும் தொடங்கலாம். அவரை பழைய கடன் ஏதும் தொடராது. ஆனால்
வங்கியிலோ, சமுதாயத்திலோ நொடிந்தவர் என நீதிமன்றம் அறிவித்தவருக்கு உரிய
மரியாதை கிடைப்பது கஷ்டம். வங்கியில் கடன் கிடைப்பது போன்ற விஷயங்களில்
சிக்கல் ஏற்படும். எனவே தேவைக்கு மீறி கடன் வாங்கி அவஸ்தைப்படுவதை விட்டு
கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி இது போன்ற சிக்கலில் மாட்டாமல்
இருப்பதே புத்திசாலித்தனம்.
Thanks
நாணயம் விகடன்
கடன் - எச்சரிக்கை
கடன் வாங்கும் முன்பும் பின்பும்!
கவனிக்க வேண்டியது...[You must be registered and logged in to see this link.]
கடன் அன்பை மட்டும் முறிக்காது; சில நேரங்களில் தலையெழுத்தையே
மாற்றிவிடும். அவசரத் தேவைக்காக நாம் கடன் வாங்கும்போது பல விஷயங்களைப்
பார்ப்பதே இல்லை. வங்கியிலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடன்
பெறும்போது அவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு
கையெழுத்து போட்டுவிட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்வது வாடிக்கையான
விஷயமாகிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க கடன் வாங்கும்போதும், கடனை கட்டி
முடித்த பிறகும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டோம். கடன்
திரும்பச் செலுத்தியவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை
விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர்.
கடன் வாங்கும் முன்...!
''எந்த விதமான கடன் வாங்கப் போனாலும் சரி, அந்தக் கடன் தொகைக்கான வட்டி
எவ்வளவு? திருப்பி செலுத்துவதற்கான காலம் எவ்வளவு, முன்கூட்டியே கட்டினால்
அபராதம் உண்டா? இருக்கிறது என்றால் எத்தனை சதவிகிதம் என்பது போன்றவற்றை
எழுதி வாங்கிக் கொள்வது அவசியம். கடன் கொடுக்கும் போது எழுதி வாங்கப்படும்
கடனுறுதி சீட்டு எனப்படும் பிராமிசரி படிவத்தில் கடனுக்கான வட்டி,
திரும்பச் செலுத்தும் காலம், கடன் தொகை போன்றவை சரியாகக்
குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைப் பரிசோதித்த பிறகே கையெழுத்துப் போட
வேண்டும்.
கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை
வங்கியிடமிருந்து உரிய அதிகாரியின் கையெழுத்து மற்றும் வங்கியின்
முத்திரையுடன் பெற்றுக் கொள்வது அவசியம். வங்கியில் பிராமிசரி படிவத்தை
திருப்பித் தரமாட்டார்கள். ஆனால், அதன் மீது 'ரத்து செய்யப்பட்டுவிட்டது'
என்று எழுதி வங்கி அதிகாரி கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். இதனை
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கடன்
தொடர்பான ஆவணங்களையும், திரும்பச் செலுத்தியதற்கான ஆவணங்களையும்
பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். பிரச்னை என்றால் கையிலிருக்கும்
ஆவணங்கள் நிச்சயம் உதவும்'' என்றவர், மேலும் கவனிக்க வேண்டிய சிலவற்றையும்
அடுத்து விளக்கினார்.
கடன் வாங்கிய பிறகு...!
''வாகனக் கடன் வாங்கும்போது வங்கியின் பெயரில் ஆர்.சி. புக் இருக்கும்.
கடனைத் திருப்பிச் செலுத்திய பின்பு உங்களது பெயருக்கு ஆர்.சி. புக்கை
மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நீங்கள்
வாங்கிய கடனை பதிவு செய்து இருப்பார்கள். கடனைத் திரும்பச்
செலுத்தியதற்கான சான்றிதழை வங்கியில் இருந்து பெற்று ஆர்.டி.ஓ.
அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வாகனத்தின் மீது
இருக்கும் கடன் ரத்தாகும்.
மனை, வீட்டுப் பத்திரம் போன்ற அசையாச் சொத்துக்களின் ஆவணங்களை அடகு
வைத்திருந்தால் கடனை முழுவதும் திரும்பச் செலுத்திய பிறகு ஆவணங்களைச்
சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் அதே நேரத்தில், கடன் பாக்கி இல்லை
என்பதற்கான சான்றிதழ் மற்றும் வங்கிக்கு இனி அந்த சொத்து மீது எந்த
உரிமையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் (liability certificate)
வாங்கிக் கொள்வது அவசியம். மேலும், அடமானக் கடனை சார் பதிவாளர்
அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான
ரசீதை வங்கியிலிருந்து பெற்றுக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில்
அடமானத்தை ரத்துச் செய்யவேண்டும்.
நகையை அடகு வைக்கும்போது நகையின் எடையை மதிப்பிட்டு வாங்கும் வங்கிகள்
நகையைத் திருப்பும்போது எடை போட்டுத் தருவதில்லை. நகையின் எடை குறைய
வாய்ப்பிருப்பதால் நகையை திருப்பும் போதும் எடை போட்டு வாங்க வேண்டும்.
ஆனால், நடைமுறையில் இதை யாரும் செய்வதில்லை. என்னென்ன நகைகளை அடகு
வைத்திருக்கிறோம் என்பதை இரு தரப்பினரும் தெளிவாக எழுதி வைத்துக்
கொள்வதும் நல்லது'' என்றார்.
மஞ்சள் கடுதாசி...
சிலர் ஆ..ஊ.. என்றால் மஞ்சள் கடுதாசி கொடுத்திருவேன் என்று மிரட்டல்
தொனியில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் மஞ்சள் கடுதாசி
கொடுக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்டங்கள் என்னவென்று.
மஞ்சள் கடுதாசி என்ன சூழ்நிலைகளில் கொடுக்கப்படும்? அதனால் ஏற்படும்
விபரீதங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து மீள என்ன வழி? என்கிற
கேள்விகளுக்கான பதில் முக்கியமானவை. பலருக்கும் தெரியாதவை.
கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை, கடன் காரணமாக ஊரைவிட்டு
ஓடிவிடுவது, என்னால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாது என கடன்பட்டவருக்கு
கடிதம் போடுவது போன்ற காரணங்களால் 'ஆக்ட் ஆஃப் இன்சால்வன்சி'
சட்டத்தின்படி அவரை நீதிமன்றம் நொடிந்தவர் என்று அறிவிக்கும். நீதிமன்றம்
அப்படி அறிவித்த அன்றையத் தேதி வரை அவருக்குள்ள கடன்களை, அவர் பெயரில்
உள்ள எல்லா சொத்துகளையும் ஜப்தி செய்து, கடன் கொடுத்தவர்களுக்குப்
பிரித்துக் கொடுக்கும்.
அதன்பின் நீதிமன்றத்தில் தன்னை டிஸ்ஜார்ஜ் செய்யச் சொல்லி மஞ்சள் கடுதாசி
கொடுத்தவர் மனு செய்ய வேண்டும். நீதிமன்றமானது, மஞ்சள் கடுதாசி கொடுத்தவரை
அதிலிருந்து விடுவித்துவிட்டால் பிறகு அவர் புது வாழ்கையை ஆரம்பிக்கலாம்;
புதிய தொழிலும் தொடங்கலாம். அவரை பழைய கடன் ஏதும் தொடராது. ஆனால்
வங்கியிலோ, சமுதாயத்திலோ நொடிந்தவர் என நீதிமன்றம் அறிவித்தவருக்கு உரிய
மரியாதை கிடைப்பது கஷ்டம். வங்கியில் கடன் கிடைப்பது போன்ற விஷயங்களில்
சிக்கல் ஏற்படும். எனவே தேவைக்கு மீறி கடன் வாங்கி அவஸ்தைப்படுவதை விட்டு
கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி இது போன்ற சிக்கலில் மாட்டாமல்
இருப்பதே புத்திசாலித்தனம்.
Thanks
நாணயம் விகடன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
மிகவும் பயனுள்ள பதிவு முஹைதீன்
Re: கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
முரளிராஜா wrote:மிகவும் பயனுள்ள பதிவு முஹைதீன்
இருக்காதா பின்ன...
அதனாலதான் சில நாளாவே ஊர்ல இருக்கிறதில்லையாமா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
ஏன் நம்ம முஹைதீன இப்படி சொல்றிங்க ?ஜேக் wrote:முரளிராஜா wrote:மிகவும் பயனுள்ள பதிவு முஹைதீன்
இருக்காதா பின்ன...
அதனாலதான் சில நாளாவே ஊர்ல இருக்கிறதில்லையாமா
Re: கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
முரளிராஜா wrote:ஏன் நம்ம முஹைதீன இப்படி சொல்றிங்க ? [You must be registered and logged in to see this image.]ஜேக் wrote:முரளிராஜா wrote:மிகவும் பயனுள்ள பதிவு முஹைதீன்
இருக்காதா பின்ன...
அதனாலதான் சில நாளாவே ஊர்ல இருக்கிறதில்லையாமா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
கடன் மற்றும் மஞ்சள் கடுதாசி பற்றி அறிய உதவிய பயனுள்ள பகிர்வுக்கு, நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
ஏன் நம்ம முஹைதீன இப்படி சொல்றிங்க ? [You must be registered and logged in to see this image.]
ஆஹா
[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கடன் வாங்கும் முன்
» கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
» காய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
» வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
» கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
» காய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
» வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|