Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருவாதிரைக்கு களி ஏன்?
Page 1 of 1 • Share
திருவாதிரைக்கு களி ஏன்?
[img][/img]
-
ஜன., 11 – ஆருத்ரா தரிசனம்
‘களி’ எனும் சொல்லுக்கு மகிழ்ச்சி, நடனம் மற்றும் உணவுப்
பொருள் போன்ற அர்த்தங்கள் உண்டு. இம்மூன்றுமே,
ஆருத்ரா தரிசன நாயகரான, நடராஜருக்கு சொந்தமானது.
அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி மற்றும்
நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை,
வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து
கொடுப்பர்.
இன்றும் கூட, கிராமப்புறங்களில், பார்வதி தேவி, பூலோகத்தில்
பிறந்த போது, வயதுக்கு வந்த நாளே, திருவாதிரை என்றும்,
அதன் காரணமாகவே, அவளுக்கு களி படைப்பதாகவும் கூறுவர்.
சேந்தனார் என்ற சிவபக்தர், தன் மனைவியுடன் சிதம்பரத்தில்
வாழ்ந்து வந்தார்.
சிவனடியார்களுக்கு உணவளித்து உபசரிப்பது, அவர்களது
வழக்கம்.
ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து, அடுப்பெரிக்க
வைத்திருந்த விறகெல்லாம் நனைந்து விட்டது. இச்சமயத்தில்,
சிவனடியார் ஒருவர் அவர்களது இல்லத்திற்கு வந்து விட்டார்.
அரிசி சாதம் செய்வது, ஈர விறகால் ஆகாது என கருதிய
சேந்தனாரின் மனைவி, அரிசி மாவுடன், வெல்லமும், நெய்யும்
கலந்து, ஈர விறகை ஒருவாறாக பற்ற வைத்து, குறைந்த அளவு
தீயிலேயே, களி தயாரித்து, அதை சிவனடியாருக்கு படைத்தாள்.
அன்றைய தினம், பவுர்ணமி நாள்; மார்கழி மாத திருவாதிரை
நட்சத்திரம்!
அதைச் சாப்பிட்ட சிவனடியார், ‘தினமும் தயிர் சாதமும்,
புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிய
எனக்கு, தாங்கள் அளித்த களி, மிகப் பிரமாதமாக இருந்தது…’
என பாராட்டினார். ஒரு எளிய உணவை, தேனினும்
இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர்,
அத்தம்பதியர்.
மறுநாள் காலையில், நடராஜரை தரிசிக்க சென்ற போது,
நடையெல்லாம் களி கொட்டிக் கிடந்ததுடன், நடராஜ
பெருமானின் வாயிலும் சிறிதளவு களி ஒட்டியிருந்தது.
அப்போது தான், தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது, நடராஜப்
பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர், மனம் உருகி,
அவரது பாதத்தில் வீழ்ந்தனர்.
அதிலிருந்தே, நடராஜப் பெருமானுக்கு, திருவாதிரை நாளில்,
களி படைக்கும் பழக்கம் உருவாயிற்று.
மார்கழி மாதம், திருவாதிரை அன்று, அதிகாலையிலேயே,
சிவாலயங்களில் நடராஜருக்கு திருமஞ்சனம் துவங்கி விடும்.
பின், எளிய அலங்காரம் செய்து, நடராஜர் நடனமிடுவது போல்,
மகா தீபாராதனை தட்டை ஆட்டுவர்; அதற்கு ஏற்றாற் போல்,
வாத்தியங்கள் ஒலிக்கும்; இந்நடனத்தைக் காண்பதில்
நமக்கெல்லாம் பெரும் களிப்பு ஏற்படும்.
களி உடலுக்கு சத்து தரும் உணவு; இந்த இனிய உணவை
திருவாதிரை நாளில் சமைத்து நடராஜருக்கும், சிவகாமி
அம்மைக்கும் படைத்து, மனமும், உடலும் வலுப்பெற
வேண்டுவோம்!
–
————————————
– தி.செல்லப்பா
வாரமலர்
-
ஜன., 11 – ஆருத்ரா தரிசனம்
‘களி’ எனும் சொல்லுக்கு மகிழ்ச்சி, நடனம் மற்றும் உணவுப்
பொருள் போன்ற அர்த்தங்கள் உண்டு. இம்மூன்றுமே,
ஆருத்ரா தரிசன நாயகரான, நடராஜருக்கு சொந்தமானது.
அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி மற்றும்
நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை,
வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து
கொடுப்பர்.
இன்றும் கூட, கிராமப்புறங்களில், பார்வதி தேவி, பூலோகத்தில்
பிறந்த போது, வயதுக்கு வந்த நாளே, திருவாதிரை என்றும்,
அதன் காரணமாகவே, அவளுக்கு களி படைப்பதாகவும் கூறுவர்.
சேந்தனார் என்ற சிவபக்தர், தன் மனைவியுடன் சிதம்பரத்தில்
வாழ்ந்து வந்தார்.
சிவனடியார்களுக்கு உணவளித்து உபசரிப்பது, அவர்களது
வழக்கம்.
ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து, அடுப்பெரிக்க
வைத்திருந்த விறகெல்லாம் நனைந்து விட்டது. இச்சமயத்தில்,
சிவனடியார் ஒருவர் அவர்களது இல்லத்திற்கு வந்து விட்டார்.
அரிசி சாதம் செய்வது, ஈர விறகால் ஆகாது என கருதிய
சேந்தனாரின் மனைவி, அரிசி மாவுடன், வெல்லமும், நெய்யும்
கலந்து, ஈர விறகை ஒருவாறாக பற்ற வைத்து, குறைந்த அளவு
தீயிலேயே, களி தயாரித்து, அதை சிவனடியாருக்கு படைத்தாள்.
அன்றைய தினம், பவுர்ணமி நாள்; மார்கழி மாத திருவாதிரை
நட்சத்திரம்!
அதைச் சாப்பிட்ட சிவனடியார், ‘தினமும் தயிர் சாதமும்,
புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிய
எனக்கு, தாங்கள் அளித்த களி, மிகப் பிரமாதமாக இருந்தது…’
என பாராட்டினார். ஒரு எளிய உணவை, தேனினும்
இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர்,
அத்தம்பதியர்.
மறுநாள் காலையில், நடராஜரை தரிசிக்க சென்ற போது,
நடையெல்லாம் களி கொட்டிக் கிடந்ததுடன், நடராஜ
பெருமானின் வாயிலும் சிறிதளவு களி ஒட்டியிருந்தது.
அப்போது தான், தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது, நடராஜப்
பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர், மனம் உருகி,
அவரது பாதத்தில் வீழ்ந்தனர்.
அதிலிருந்தே, நடராஜப் பெருமானுக்கு, திருவாதிரை நாளில்,
களி படைக்கும் பழக்கம் உருவாயிற்று.
மார்கழி மாதம், திருவாதிரை அன்று, அதிகாலையிலேயே,
சிவாலயங்களில் நடராஜருக்கு திருமஞ்சனம் துவங்கி விடும்.
பின், எளிய அலங்காரம் செய்து, நடராஜர் நடனமிடுவது போல்,
மகா தீபாராதனை தட்டை ஆட்டுவர்; அதற்கு ஏற்றாற் போல்,
வாத்தியங்கள் ஒலிக்கும்; இந்நடனத்தைக் காண்பதில்
நமக்கெல்லாம் பெரும் களிப்பு ஏற்படும்.
களி உடலுக்கு சத்து தரும் உணவு; இந்த இனிய உணவை
திருவாதிரை நாளில் சமைத்து நடராஜருக்கும், சிவகாமி
அம்மைக்கும் படைத்து, மனமும், உடலும் வலுப்பெற
வேண்டுவோம்!
–
————————————
– தி.செல்லப்பா
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|