தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

View previous topic View next topic Go down

ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Empty ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

Post by rammalar Thu Oct 26, 2017 5:59 am

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில்
விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்
பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை
தாங்கினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக
தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மரகதம் குமாரவேல்
எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவுக்கான
அடிக்கல், கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி பொத்தானை
அழுத்தி திறந்து வைத்தார். இதையடுத்து டைடல் பார்க் லிட்,
வினமன் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிட், மெட்டாலிக் பெல்லோஸ்
இந்தியா லிட், பாஸ்ட்ரிக் மெக்கானிக்கல் லெப்ஸ் பிரைவேட் லிட்,
பாலா வர்க்ஸ், டெக்வேர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட், மினர்வா
ஏவியே‌ஷன் சர்வீசஸ், யூனிகான் பிரைவேட் லிட் மற்றும்
வின்டெக் பிரிசி‌ஷன் என்ஜினீயரிங் ஆகிய 9 தொழில்
நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார்.

தொடர்ந்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைய உள்ள இடத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (‘சிப்காட்’),
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில்
தொழில் வளாகங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைத்து
வருகிறது.

விமான உப பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கென்று
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் வளாகத்தில் ஒரு பிரத்யேக
தொழில்பூங்கா சுமார் 245 ஏக்கரில் ரூ.198 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிப்காட் மற்றும்
டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

விமான தொழில் பூங்காவில் சுமார் 50 நிறுவனங்கள் தங்களது
தொழில் நிறுவனங்களை நிறுவி உற்பத்தியை தொடங்குவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் விமான
நிறுவனங்களை நம் மாநிலத்துக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் விமான உப பாகங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு
நிறுவனங்களுக்கு வலுவூட்டவும், அந்நிறுவனங்களை உலக தரம்
வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் முயற்சியிலும், அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக டிட்கோ
நிறுவனத்தின் மூலம் விமான பொறியியல் பாகங்கள் வடிவமைத்தல்
மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில்
10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு உயர் கணினி மற்றும் வடிவமைப்பு
மையம் ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

அந்த வசதிகள், தமிழ்நாட்டில் விமான தொழில் வளர்ச்சிக்கு பெரிதும்
உதவும். அந்த மையத்தில், விமான பாகங்கள் வடிவமைப்பு மையம்,
ஏவியானிக்ஸ் உற்பத்தி வசதி, திறன் மேம்பாட்டு மையம், பொது
கிடங்கு வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்
முதற்கட்டமாக, 5 லட்சம் சதுர அடி கட்டிட வசதியுடன் ரூ.180 கோடி
முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. மேலும், விமானங்கள் மற்றும்
ராணுவ தளவாட உப பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள்
உற்பத்தி நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க ஏதுவாக
அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ஒன்றையும் இங்கு நிறுவ நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த பூங்காவில் 5 ஆண்டுகளில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு
சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேர்களுக்கு
மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Empty Re: ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

Post by rammalar Thu Oct 26, 2017 5:59 am

ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்த பின்னர்
அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:–

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை நியமித்து,
பல நிறுவனங்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்தவர்களை
பங்கேற்க செய்யும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த
உள்ளோம். கடந்த முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை நிறுவனங்கள் திரும்ப
பெறவில்லை.

கடந்த 2 வருடத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் விவகாரம் சுமூகமாக
பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------------
-தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum