தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

View previous topic View next topic Go down

குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க... Empty குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

Post by mohaideen Thu Dec 20, 2012 6:46 pm

குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க... 20-baby-33-300

குளிர்காலத்தில் பிறந்த குழந்தையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் குழந்தைகளால், குளிரை தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவர்களுக்கு சளி அல்லது ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். எனவே அவர்களை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருப்பதற்கு, அவர்களுக்கு சரியான உடை அணிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களின் சருமம் வறட்சியடைந்துவிடும். ஆகவே அதிலும் கவனத்தை செலுத்த வேண்டும். சொல்லப்போனால், மற்ற காலத்தை விட இந்த காலத்தில் குழந்தையின் பராமரிப்பு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். இப்போது குழந்தைகளுக்கு எங்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* புது அம்மாக்களுக்கு ஒரு முக்கியமான குளிர்கால டிப்ஸ் என்றால் அது இந்த காலத்தில் குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் உடலானது மிகவும் சென்சிட்டிவ்வானது. எனவே அவர்கள் உடலை நோய்கள் எளிதில் தாக்கிவிடும். எனவே இந்த காலத்தில் அவர்களுக்கு வெதுவெதுப்பை அளிக்கும் உடையை உடுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு குளிரை தாக்காமல் இருப்பதற்கு, தொப்பி, ஜாக்கெட் போன்றவற்றை உடுத்துவித்தால் பிடிக்காது. அவர்கள் அவற்றை அகற்ற நினைப்பார்கள். ஆகவே தொப்பியை போடும் போது, அவர்கள் கழற்றாதவாறு கட்டிவிட வேண்டும்.

* குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடையும். எனவே குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ண்டும். மேலும் குழந்தைகளுக்கு டயப்பரை அடிக்கடி மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பேபி பவுடரை உடல் முழுவதும் போட்டு விட வேண்டும். இதனால் அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். உடைகள் அணிவிக்கும் போதோ அல்லது அவர்களுக்கு துணியை பயன்படுத்தும் போதோ ஈரம் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை வரவழைத்துவிடும்.

* குழந்தைகளின் சருமமும் குளிர்காலத்தில் மாற்றமடையும். எனவே எதை மறந்தாலும் குழந்தைகளின் குளிர்காலப் பராமரிப்புகளை மறக்க வேண்டாம். ஆகவே எப்போது குழந்தைகளை குளிப்பாட்டிய பின்பு, பேபி மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். அதேப் போல் குளிப்பாட்டுவதற்கு முன்பு, எண்ணெயால் மசாஜ் செய்வதை மறக்க வேண்டாம். அதிலும் வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து குளிப்பாட்டினால், குழந்தைகளின் எலும்புகள் வலுவடையும்.

* அதிகமாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில் குளிர்காலமானது பிறந்த குழந்தைக்கும் மற்றும் புது அம்மாவிற்கும் ஆரோக்கியமற்றது. தாய்ப்பால் கொடுக்கும் போது குளிர்ச்சியான பொருளை அம்மா குடித்தாலும், அது குழந்தைக்கு சளியை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் ஆரோக்கியத்திற்காக குளிர்காலத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் குளிர்காலத்தில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால், உடலானது வைட்டமின் டி சத்துக்களை உறிஞ்சுவதோடு, சூரியக்கதிர்கள் சருமம் மற்றும் துணியில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடும்.

* வறண்ட மற்றும் வெடிப்புள்ள உதடுகள் பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று நினைக்க வேண்டாம். சிறிய மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு கூட ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு, இந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு பேபி ஆயில் அல்லது லிப் பாமை தடவினால், உதடுகளில் வறட்சி ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.

மேற்கூறியவாறு குழந்தையை பராமரித்து வந்தால், எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். வேறு என்ன செய்யலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2012/how-care-your-baby-winter-002481.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க... Empty Re: குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 6:44 am

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி முஹைதின்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க... Empty Re: குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 10:09 am

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க... Empty Re: குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum