Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குளிர் காலங்களில் உடல்நலம் அதிகம் பாதிப்பது ஏன்?
Page 1 of 1 • Share
குளிர் காலங்களில் உடல்நலம் அதிகம் பாதிப்பது ஏன்?
குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில்தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல்நிலை, அதற்கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.
மாற்றங்களுக்கான காரணங்கள்:
குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.
குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலைதான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும்.
மார்பில் அழுத்தம் ஏற்படுவதுதான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், 'டீபிப்ரிலேட்டர்' என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம்.
இது, 'பேஸ் மேக்கரை'ப் போலத்தான் என்றாலும், 'பேஸ் மேக்கர்' குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். 'டீபிப்ரிலேட்டர்' கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சம வெளிகளில்கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும்.
ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், 'சார்பிட்ரேட்' மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், 'ஏசி' அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு.
அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், 'ஏசி'யை அணைத்து வைக்க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
நன்றி கூடல்
மாற்றங்களுக்கான காரணங்கள்:
குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.
குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலைதான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும்.
மார்பில் அழுத்தம் ஏற்படுவதுதான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், 'டீபிப்ரிலேட்டர்' என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம்.
இது, 'பேஸ் மேக்கரை'ப் போலத்தான் என்றாலும், 'பேஸ் மேக்கர்' குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். 'டீபிப்ரிலேட்டர்' கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சம வெளிகளில்கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும்.
ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், 'சார்பிட்ரேட்' மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், 'ஏசி' அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு.
அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், 'ஏசி'யை அணைத்து வைக்க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
நன்றி கூடல்
Re: குளிர் காலங்களில் உடல்நலம் அதிகம் பாதிப்பது ஏன்?
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வெயில் காலங்களில் கண்களை பாதுகாக்க....
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» உடல்நலம் தரும் சூரியநமஸ்காரம்
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» உடல்நலம் தரும் சூரியநமஸ்காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|