Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
Page 1 of 1 • Share
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர்நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன்சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல்ஆடி, மகிழ் மாகறல் உளான்
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!
துஞ்சு நறுநீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம்ஆடல் மலி மாகறல் உளான்
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும்
நஞ்சம் இருள்கண்டம் உடை நாதன் அடியாரை நலியா, வினைகளே.
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன்ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்
மின்னை விரி புன்சடையின்மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல்உறுவீர்!
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர்
கைய கரி கால்வரையில் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரிநச்சுஅரவுகச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல்இல, போகும், உடனே.
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினைஆயினவும் அகல்வது எளிதே.
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின்மேல் உணர்வு காமுறவினார்,
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன்ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ்பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
www.fb.com/thiruimara
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர்நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன்சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல்ஆடி, மகிழ் மாகறல் உளான்
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!
துஞ்சு நறுநீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம்ஆடல் மலி மாகறல் உளான்
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும்
நஞ்சம் இருள்கண்டம் உடை நாதன் அடியாரை நலியா, வினைகளே.
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன்ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்
மின்னை விரி புன்சடையின்மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல்உறுவீர்!
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர்
கைய கரி கால்வரையில் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரிநச்சுஅரவுகச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல்இல, போகும், உடனே.
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினைஆயினவும் அகல்வது எளிதே.
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின்மேல் உணர்வு காமுறவினார்,
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன்ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ்பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
www.fb.com/thiruimara
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க கோதுமை உணவு சமைக்கலாம்!!
» ‘உணவே மருந்து, மருந்தே உணவு'
» “உணவே மருந்து, மருந்தே உணவு”
» மருந்தே இல்லாத கொடிய வியாதி பொறாமை
» வாழும் வழி
» ‘உணவே மருந்து, மருந்தே உணவு'
» “உணவே மருந்து, மருந்தே உணவு”
» மருந்தே இல்லாத கொடிய வியாதி பொறாமை
» வாழும் வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|