Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேவை, சிலை அல்ல... வேலை!’
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
தேவை, சிலை அல்ல... வேலை!’
தேவை, சிலை அல்ல... வேலை!’
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உருவானதே ஒரு சுவரஸ்யம்...
1934-ம் ஆண்டு, ஜம்புலிங்க முதலியார், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது... கருப்பு நிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதிசயப்பட்டுப் போனவர், அன்றைய ஆங்கிலேயே அரசின் புவியியல் துறை கவனத்துக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான், பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அன்றைய தென்னாற்காடு ஜில்லா, கடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் பிறந்த ஜம்புலிங்கம், பெரும் நிலக்கிழாராக திகழ்ந்தவர். கடலூர் நகர்மன்றத் தலைவர், தென்னாற்காடு ஜில்லா வாரிய உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் 30 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
நிலக்கரி விஷயத்தை ஆங்கிலேயர்கள் அத்தோடு விட்டுவிட, நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதல்வராக இருந்த காமராஜரின் கவனத்துக்கு நிலக்கரி பற்றிய தகவலை கொண்டு போனார் ஜம்புலிங்கம். அதன் பிறகுதான் மத்திய அரசு இங்கே நிலக்கரி சுரங்கத்தை அமைத்தது. இதற்காக தனக்குச் சொந்தமாக இருந்த சுமார் 600 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் ஜம்புலிங்கம்.
இன்றைக்கு 'என்எல்சி' என்கிற பெயரில் பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கை அளித்துக் கொண்டிருக்கிறது அந்த நிலக்கரி நிறுவனம். நாடு முழுக்க மின்சாரத்தை தந்து ஒளிவெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. இதற்காக நிலம் தந்த ஜம்புலிங்கத்துக்கு 2-ம் சுரங்க வாயிலில் சிலை அமைத்தனர். போதிய பராமரிப்பின்றி சிலை சிதைந்து போக... நெய்வேலி இரட்டைப் பாலத்தின் மீது முழுவுருவ வெண்கல சிலை தற்போது நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜம்புலிங்கத்தின் மகள் வழி பேரனான அமரன், உள்ளிட்ட உறவினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கைதான் பரிதாபகரமானது. தற்போது கடலூரில் வசித்து வரும் அவர்கள், ''நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நன்கு படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை. நீங்களாக வழங்கினால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்று வாய்விட்டு கேட்டே விட்டனர்.
இதைப் பற்றி நேரடியாக பதில் எதையும் தரவில்லை என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர். அதனால், நிருபர்கள் இதைப் பற்றி கேட்க, ''மனு கொடுத்தால் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று வழக்கமானதொரு பதிலை தந்துவிட்டு நகர்ந்திருக்கிறார்.
ஜம்புலிங்கம் போலவே பல பேர் இந்த நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்காக தங்களின் விளைநிலங்களை கொடுத்துள்ளனர். சிலர் தானமாகக் கொடுக்க, பலர்... அன்றைய சூழலில், ஏதோ அரசாங்கமாக பார்த்துக் கொடுத்த பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு தங்களின் நிலத்தைக் கொடுத்து வெளியேறினர். இப்படி நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள்... இன்றைக்கு பரிதாப நிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுள்ளனர்.
உதாராணமாக நெய்வேலி பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதியின் வளர்ச்சிக்காக தன்னுடைய ஏக்கர் கணக்கிலான விளைநிலத்தைக் கொடுத்தவரின் வாரிசுகள்... தங்களின் பிள்ளைகளை பெரிதாக படிக்க வைக்கவோ... சிறப்பாக மணம் முடிக்கவோ முடியாமல் குடிசை வீட்டில், குக்கிராமத்துக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவுக்கே பெருஞ்செல்வமாக இருக்கிறது நெய்வேலி. இத்தகைய நெய்வேலி உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வாரிசுகள், இன்று வேலை கேட்கும் நிலையில் இருக்கின்றனர். ஆனால், அரசாங்க இயந்திரம்... இயந்திரத் தனமாகவே பதில் தந்து கொண்டிருக்கிறது!
இப்படியே இந்தியாவை வளர்த்தெடுத்தால், வல்லரசாகலாம். ஒரு நாளும் நல்லரசாக முடியாது!
பசுமை vikadan
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உருவானதே ஒரு சுவரஸ்யம்...
1934-ம் ஆண்டு, ஜம்புலிங்க முதலியார், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது... கருப்பு நிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதிசயப்பட்டுப் போனவர், அன்றைய ஆங்கிலேயே அரசின் புவியியல் துறை கவனத்துக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான், பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அன்றைய தென்னாற்காடு ஜில்லா, கடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் பிறந்த ஜம்புலிங்கம், பெரும் நிலக்கிழாராக திகழ்ந்தவர். கடலூர் நகர்மன்றத் தலைவர், தென்னாற்காடு ஜில்லா வாரிய உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் 30 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
நிலக்கரி விஷயத்தை ஆங்கிலேயர்கள் அத்தோடு விட்டுவிட, நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதல்வராக இருந்த காமராஜரின் கவனத்துக்கு நிலக்கரி பற்றிய தகவலை கொண்டு போனார் ஜம்புலிங்கம். அதன் பிறகுதான் மத்திய அரசு இங்கே நிலக்கரி சுரங்கத்தை அமைத்தது. இதற்காக தனக்குச் சொந்தமாக இருந்த சுமார் 600 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் ஜம்புலிங்கம்.
இன்றைக்கு 'என்எல்சி' என்கிற பெயரில் பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கை அளித்துக் கொண்டிருக்கிறது அந்த நிலக்கரி நிறுவனம். நாடு முழுக்க மின்சாரத்தை தந்து ஒளிவெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. இதற்காக நிலம் தந்த ஜம்புலிங்கத்துக்கு 2-ம் சுரங்க வாயிலில் சிலை அமைத்தனர். போதிய பராமரிப்பின்றி சிலை சிதைந்து போக... நெய்வேலி இரட்டைப் பாலத்தின் மீது முழுவுருவ வெண்கல சிலை தற்போது நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜம்புலிங்கத்தின் மகள் வழி பேரனான அமரன், உள்ளிட்ட உறவினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கைதான் பரிதாபகரமானது. தற்போது கடலூரில் வசித்து வரும் அவர்கள், ''நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நன்கு படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை. நீங்களாக வழங்கினால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்று வாய்விட்டு கேட்டே விட்டனர்.
இதைப் பற்றி நேரடியாக பதில் எதையும் தரவில்லை என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர். அதனால், நிருபர்கள் இதைப் பற்றி கேட்க, ''மனு கொடுத்தால் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று வழக்கமானதொரு பதிலை தந்துவிட்டு நகர்ந்திருக்கிறார்.
ஜம்புலிங்கம் போலவே பல பேர் இந்த நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்காக தங்களின் விளைநிலங்களை கொடுத்துள்ளனர். சிலர் தானமாகக் கொடுக்க, பலர்... அன்றைய சூழலில், ஏதோ அரசாங்கமாக பார்த்துக் கொடுத்த பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு தங்களின் நிலத்தைக் கொடுத்து வெளியேறினர். இப்படி நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள்... இன்றைக்கு பரிதாப நிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுள்ளனர்.
உதாராணமாக நெய்வேலி பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதியின் வளர்ச்சிக்காக தன்னுடைய ஏக்கர் கணக்கிலான விளைநிலத்தைக் கொடுத்தவரின் வாரிசுகள்... தங்களின் பிள்ளைகளை பெரிதாக படிக்க வைக்கவோ... சிறப்பாக மணம் முடிக்கவோ முடியாமல் குடிசை வீட்டில், குக்கிராமத்துக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவுக்கே பெருஞ்செல்வமாக இருக்கிறது நெய்வேலி. இத்தகைய நெய்வேலி உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வாரிசுகள், இன்று வேலை கேட்கும் நிலையில் இருக்கின்றனர். ஆனால், அரசாங்க இயந்திரம்... இயந்திரத் தனமாகவே பதில் தந்து கொண்டிருக்கிறது!
இப்படியே இந்தியாவை வளர்த்தெடுத்தால், வல்லரசாகலாம். ஒரு நாளும் நல்லரசாக முடியாது!
பசுமை vikadan
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சுதந்திர தேவி சிலை
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» சிலை வடித்தவர்கள்
» தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
» கோபுர சிலை – கவிதை
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» சிலை வடித்தவர்கள்
» தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
» கோபுர சிலை – கவிதை
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|