தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் Empty தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

Post by முழுமுதலோன் Thu Feb 28, 2013 2:06 pm

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்
-------------------------------------------------------

பொதுவாக மரங்களினால் பல்வேறு பயன்கள் என்றாலும், சில மரங்கள் பொருளாதார ரீதியாக அதிக பயனை தருகிறது.

மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்து மரங்கள் குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, காய்கள், பழங்கள் தரும் உணவு பயிராக என்று எத்தனையோ வழிகளில் பயனுள்ளதாக இருந்து வந்திருக்கின்றன. மரங்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை நிலை.

விலை உயர்ந்த மரங்கள்

எத்தனையோ பயன்பாடுகள் இருந்தாலும், கட்டிடங்கள் கட்டும் போது நிலைக்கதவுகள், ஜன்னல்கள் வடிவமைக்க நீடித்து உழைக்கக்கூடிய, பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் தேக்கு, ரோஸ்வுட் மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் படாக் மரங்கள் போன்ற விலை உயர்ந்த மரங்கள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கிலான எக்டரில் தரிசுநிலங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் குறிப்பிடத்தக்க பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்தால் இறக்குமதி மரங்களுக்கு அவசியம் இருக்காது. கூடவே மரங்கள் அதிகமாக வளர்க்கும் போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும். விவசாயம் செழிக்கும்.

மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நிலங்களில் நல்ல லாபம் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த மரங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியம்.

மகாகொனி மிலியேசி

இப்படி விவசாயிகளுக்கு வளம் தரும் மரங்களில் ஒன்றாக இருப்பது தான் மகாகொனி மிலியேசி. மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த மரம். டொமினிக் ரேபுப்ளிக் என்ற சிறிய நாட்டின் தேசிய மரம் வேறு.

வேப்ப மரத்தின் இலையை போன்று கூட்டிலை உடையது. ஏப்ரல் மாதத்தில் மகாகொனி மரம் பூக்கும். 3.5 மீ நீளக் காம்புடைய பூங்கதிர்கள் 8 செ.மீ நீளத்தில் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மரம் ஆண்டிற்கு 1000 மில்லி மீட்டர் மழை அளவு பெறும் இடங்களில் நன்றாக வளரும். வடிகால் திறனும், ஆழமான மண்கண்டமும் உள்ள இடங்கள் மககொனி வளர்க்க சிறந்த இடங்கள். மற்ற மரங்களை விட மககொனி மரத்திற்கு சத்து அதிகம் கொண்ட மண்வாகு தேவைப்படும்.

தமிழ்நாட்டில் ஒரளவு நீர்செழிப்புள்ள இடங்களில் பயிரிடலாம். மதுரை மாவட்டத்தின் வைகை ஒடிவரும் நீர்பிடிப்பு பகுதிகள் (ஆற்றுப்படுகைகள்) உள்பட நீர்செழிப்புள்ள மேட்டுப்பாங்கான இடங்கள் ஏற்றவை. செவ்வல் கண்மாய் கரைகளும் ஏற்றவை. தனியார் தோட்டங்களில் காற்றுத்தடுப்பு வரிசைகளில் நடலாம். நகரங்களில் அதிக மழையுடைய பகுதிகளில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். மாடிகளில் உள்ளவர்களுக்கு காற்றை வடிகட்டி கொடுக்கும்.

நல்ல மகாகொனி மரம் உருவாக 20 ஆண்டுகள் பிடிக்கும். நடும் பொழுது 10*10 மீட்டர் இடைவெளியில் நடலாம். பின்னர் களைகளை நீக்கி கொத்திக் கொடுக்க வேண்டும். நிழல் உள்ள இடங்களில் நட்டால் வளர்ச்சி குன்றிவிடும். பாசனமளித்தால் கன்றுகளில் 90 சதவீதம் துளிர்த்து விடும். இரண்டு ஆண்டுகளில் 96 செ.மீட்டர் அளவிற்கு உயர்ந்து வளரும். எனவே பாசனமுள்ள இடங்களில் தொடக்க காலத்தில் நீர் ஊற்றி வளர்ப்பது நல்லது.

பயன்கள்

இந்த மரத்தை அழகிய வேலைப்பாடுகள் உள்ள மேஜை, நாற்காலிகள், சட்டமிட்ட கதவுகள், பீரோக்கள் மற்றும் பல கடைசல்களுக்கும் ஏற்றது. இசைக்கருவிகள் செய்ய ஏற்றது. கப்பல் கட்டுவதற்கும், பல வகையான கட்டுமான பொருட்கள் செய்வதற்கும், பென்சில் செய்வதற்கும் கூட ஏற்ற மரம் இது.

என்றைக்கும் நல்ல வளர்ச்சியுள்ள கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் மர விவசாயம் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்த மரம் பற்றி விவரங்கள் அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலங்களை அணுகலாம்.

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் 734421_496238287100426_782137092_n

பசுமை விடியல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் Empty Re: தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

Post by மகா பிரபு Thu Feb 28, 2013 6:16 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் Empty Re: தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

Post by முரளிராஜா Fri Mar 01, 2013 1:02 pm

அறிந்துகொண்டேன் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் Empty Re: தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

Post by ரானுஜா Fri Mar 01, 2013 3:23 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் Empty Re: தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

Post by செந்தில் Fri Mar 01, 2013 3:28 pm

கைதட்டல் வித்தியாசமான தகவல், சூப்பர் நன்றி கேசவன் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம் Empty Re: தெரிந்து கொள்வோம் - மகாகொனி மரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum