Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழிவற்ற செல்வம்! - திருக்குறள் கதைகள் 23
Page 1 of 1 • Share
அழிவற்ற செல்வம்! - திருக்குறள் கதைகள் 23
கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே! அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.
ஒருநாள் இருவரையும் அழைத்து, “எனக்கிருப்பது ஒரு வீடும், இரு ஏக்கர் நலமுமே! நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா?” என்று கேட்டார்.
கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், “அப்பா! நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்றான். இளையவன் முத்து, “எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்!” என்றான்.
இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.
ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், “தம்பி! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல! பணம் எனும் செல்வம் நிலையற்றது.
உனக்குக் கிடைத்த தொகையில் என்னைப்போல் நீயும் உயர் கல்வி பயின்றிருக்கலாம்! ஆனால், நீ அதை வியாபாரத்தில் முதலீடாக வைத்து விட்டாய்! நீ செய்தது தவறு என்று கூறவில்லை. ஒருவேளை உன்னுடைய வியாபாரம் வெற்றிகரமாகவும் இயங்கலாம் என்று எண்ணியே நான் உன்னைத் தடுக்கவில்லை. ஆனால் வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் செய்யலாம்; நட்டமும் ஆகலாம்! கல்வி அவ்வாறு அல்ல! நடந்ததை நினைத்து வருந்தாதே! இப்போதும் நீ இளைஞன்தான்! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை. என்னைப்போல் நீயும் உயர்கல்வி பயில நான் உனக்கு உதவி செய்கிறேன். அதன்பிறகு, என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை நீ முடிவு செய்வாய்!” என்றான்.
தன் சகோதரன் சொல்வதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொண்ட முத்து, உயர்படிப்புக்கு ஆயத்தமானான்.
திருக்குறள்:
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை!
விளக்கம்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அழிவற்ற செல்வம்! - திருக்குறள் கதைகள் 23
கல்விதான் நம் வாழ்வை முறைபடுத்துகிறது
என்பதை கதையோடு விளக்கியது அருமை
என்பதை கதையோடு விளக்கியது அருமை
Re: அழிவற்ற செல்வம்! - திருக்குறள் கதைகள் 23
சிறப்பான விளக்கம்... மாணவர்களுக்கு விரித்துரைக்க பயன்படுத்திக் கொள்வேன். நன்றி.
Similar topics
» நாவடக்கம் வேண்டும்! - திருக்குறள் கதைகள் 14
» திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.
» திருக்குறள் கதைகள் #1
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.
» திருக்குறள் கதைகள் #1
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|