Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் - திருக்குறள் கதைகள் 22
Page 1 of 1 • Share
புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் - திருக்குறள் கதைகள் 22
காஞ்சியை நோக்கித் தனது பெரும் படையுடன் போரிட வந்த புலிகேசி மன்னர், தனது பகைவரான மகேந்திர பல்லவரின் செய்கையைக் கண்டு வியப்புற்றார். வீரத்தில் சிறந்த மகேந்திரர் தன்னுடன் நேருக்கு நேர் மோதுவார் என்று எண்ணியதற்கு மாறாக, பல்லவச் சக்கரவர்த்தி கோட்டைக் கதவுளை மூடிவிட்டு உள்ளே பதுங்கிக் கொண்டது வியப்பை அளித்தது. மகேந்திரரின் செய்கை அவரது புதல்வரான நரசிம்மருக்கும் வியப்பை அளித்தது.
அவர் தனது தந்தையை நோக்கி, “தந்தையே! பகைவனுடன் நேருக்கு நேர் மோதாமல் கோட்டைக்குள் பதுங்கியிருப்பது கோழைத்தனம் இல்லையா?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட மகேந்திரர் தன் மகனை நோக்கி, “மகனே! இது கோழைத்தனம் அல்ல... இது ராஜதந்திரம்! புலிகேசியின் படையெடுப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் போர் என்பதே கிடையாது. இசையிலும், நடனத்திலும், இறைபக்தியிலும் பொழுதைக் கழித்த நான், படைகளைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருக்கவில்லை.
இந்த நிலையில் போருக்குச் சென்றால், நாம் தோற்பது உறுதி. வீரம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாய்க்க நான் விரும்பவில்லை. நீ நினைப்பது போல் நாம் பதுங்கியிருக்கவில்லை. போருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நமக்கு உதவி செய்ய சோழ மன்னரையும், இலங்கை மன்னரையும் படைகள் அனுப்புமாறு ஓலை அனுப்பியுள்ளேன்.
அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வந்து சேரும் வரையில், நாம் கோட்டைக்குள் பதுங்கியிருக்க வேண்டும். நமது பகைவன் நமது நோக்கத்தை அறிந்து கொள்ளாமல், அவனிடமுள்ள பயத்தால் நாம் பதுங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வான். ஆனால், நமக்கு வெளியிடங்களிலிருந்து படை பலம் கிடைக்கும் வரையிலும், நம்முடைய படைகளைத் தயார் செய்து கொள்ளும் வரையிலும், நாம் செயலற்றிருப்பதுபோல் நடிப்போம். தகுந்த நேரம் வந்தவுடன் அவர்களுடன் நேருக்கு நேர் மோதுவோம்!” என்றார்.
மகேந்திர பல்லவர் கூறியது போல், அவருடைய நோக்கத்தை அறியாமல் பல மாதங்கள் காஞ்சியை
புலிகேசி மன்னர் முற்றுகையிட்டார். இறுதியில் மகேந்திரரின் ராஜதந்திரத்தில் சிக்கி, தன் முயற்சியில் தோற்று மகேந்திர பல்லவருடன் சமாதானம் செய்து கொள்ள நேரிட்டது.
வான் புகழ் வள்ளுவர் இதைதான் சொல்கிறார்.
காதலக் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
விளக்கம்: “தனது நோக்கத்தைப் பகைவர் அறிந்துகொள்ளாமல் செயற்படுபவரிடம் பகைவரின் சூழ்ச்சிகள் பலிக்காது.”
டிஸ்கி: பின்னர் மீண்டும் புலிகேசி படையெடுத்து மகேந்திர பல்லவரை வென்றதும். புலிகேசியை மகேந்திர பல்லவரின் புதல்வன் நரசிம்ம பல்லவர் வென்றது பெரும் கதை. இதன் பிறகு ஏறத்தாழ 300 வருடங்கள் கழித்தே சோழர்கள் ஆட்சியில் பராந்தக சோழன், சுந்தர சோழர் அவரின் புதல்வர் ராஜராஜ சோழன் இமயம் முதல் குமரி வரை ஆண்டான் என்று வரலாறு கூறுகிறது - ராம்
Last edited by ஸ்ரீராம் on Fri Apr 05, 2013 9:09 am; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புலிகேசியை பல்லவர்கள் வென்ற ரகசியம் - திருக்குறள் கதைகள் 22
அருமையான வரலாற்றுத் தகவல் அண்ணா
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» அழிவற்ற செல்வம்! - திருக்குறள் கதைகள் 23
» திருக்குறள் கதைகள் #1
» நாவடக்கம் வேண்டும்! - திருக்குறள் கதைகள் 14
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» திருக்குறள் கதைகள் #1
» நாவடக்கம் வேண்டும்! - திருக்குறள் கதைகள் 14
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|