Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறளமுதம்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
குறளமுதம்
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்? --திருக்குறள்
புலால் உண்ணாமையை வலியுறுத்தி வான்மறை ஓதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் இப்படிக் கேட்டாரே ஒரு கேள்வி! இன்னிக்கு ஆயிரம் பேர்களை அழைத்து ஆறுமாதம் உணவளித்து ஆய்வு செய்து விஞ்ஞான பூர்வமாக வெளியிடுகிறார்கள் "புலால் உண்டால் உடம்பில் கொழுப்புச்சத்துக் கூடி, ஓபிஸிடி வலிமையாகி, மாரடைப்பு, ரத்த அழுத்த நோய்களுக்குத் துணை போகிறது" என்று.
தன் ஊன் பெருக்கற்கு - அதாவது தன் உடம்பைப் பெருக்கவைப்பதற்கும், வலிமை ஆக்குவதற்கும், தான் - ஒருவன், பிறிது ஊன் - பிற விலங்குகளின் உடம்பை, அதாவது இறைச்சியை, உண்பான் - உண்கின்றவன், எங்கனம் ஆளும் அருள் - எப்படி அவன் மனதில் இரக்க குணம், பச்சாதாபம் வரும் ? என்று கேட்கிறார்.
அண்ணல் காந்தி அடிகளும் இதையேதான் வலியுறுத்தினார், புத்தர், ஏசு, சீக்கிய குருமார்கள், மேலும் நம் இந்து சாத்திரங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன.
இது பற்றி கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத் கீதை எப்படி விளக்குகிறது என்று பார்ப்போம்:
ஸத்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:
நிபத்னந்தி மஹாபாஹோ தேஹே தேஹின-மவ்யயம்---கீதை
மஹாபாஹோ = பெருந்தோள் அர்ஜுனா, ஸத்வம், ரஜ: தம: இதி = ஸத்வம், ரஜஸ், தமஸ் (ஸத்வ குணம், ராஜஸ குணம், தமஸ குணம்),ப்ரக்ருதி ஸம்பவா: = பிரகிருதியில், அதாவது இவ்வுலகிலிருந்து உண்டான,குணா: = குணங்கள்,தேஹே = தேகத்தில்,அவ்யயம் தேஹினம் = அழிவில்லாத தேகியை,நிபத்னந்தி = கட்டுப் படுத்துகின்றன
இம்மூன்று குணங்களில், ஸத்வ குணம் பரிசுத்தத் தன்மையானது, ஒளி பொருந்தியது, இடர் செய்யாதது, ரஜோ குணம் அசைவ வடிவானது, வேட்கையும் பற்றையும் உண்டாக்கும், தமோ குணம் அஞ்ஞானத்தால் தோன்றுவது, மோஹத்தை-ஆசையைத் தூண்டுவது.
ஆயு:ஸத்வ-பலாரோக்ய-ஸுகப்ரீதி-விவர்த்தனா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விக-ப்ரியா: ---கீதை
ஆயுள், புத்தி, பலம், ஆரோக்யம், சுகம், விருப்பம் இவற்றை வளர்ப்பனவும், ரஸ மு;டையனவும், இன்பமளிப்பனவுமான உணவுகள் ஸாத்வீகர்களுக்குப் ப்ரியமானவை.
கட்வம்ல-லவணாதுஷ்ண தீக்ஷண ரூக்ஷ விதாஹின:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:க்க சோகாமய ப்ரதா: --- கீதை
கசப்பு, புளிப்பு, உப்பு, கருஞ்சூடு, காரம், உவர்ப்பு, எரிப்பு முதலிய குணங்களுடையனவும், துன்பம், துயர், பிணி இவற்றைத் தருவனவுமாகிய உணவுகள் ராஜஸ குணமுடையோர்க்கு ப்ரியமானவை.
யாத-யாமங் கதரஸம் பூதி பர்யுஷிதஞ்சயத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ-ப்ரியம் -- கீதை
சமைத்து ஆறிப்போனதும், சுவையிழந்ததும், புளித்துப் போனதும், பழையதும் உண்டு, மிகுந்ததும், பூஜைக்குதவாததுமான உணவு எதுவோ அது தாமஸிகளுக்குப் ப்ரியம்.
இவ்வாறு பகவத் கீதை கூறுகிறது. இதில் மாமிசம் அல்லது இறைச்சி சமைப்பவர்கள் காரம் மிகுந்துதான் சமைப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம், இரக்கம், பச்சாதாபம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
மீண்டும் சந்திப்போம், நன்றி, வணக்கம் ........முத்து ஐயர்
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|